Tuesday, December 13, 2022

உதயநிதியின் நல்வரவு ..
..
சிலர் ஏன் அவசரம் என  அக்கறையோடு கேட்பதைப்போல அங்கலாய்கிறார்கள் .. சிலர் நல்லநேரம் பார்த்து பதவியேற்கிறார் .. சிலர் நாங்கள் அப்போதே சொன்னோமே குடும்ப அரசியல்.. சிலர் பதைபதைப்பதும் சிலர் விமர்சிப்பதைப்போல பேசி ஏதோ ஜனநாயகத்தை காக்கவந்தவர்கள் போல கூப்பாடு போடுவதும் ஊடகங்கங்களிலும், வலைதளங்களிலும் காண முடிகிறது .. உண்மையில் இவர்கள் வெகு சிலரே .. ஜனநாயகத்தை வேரறுக்கவந்தவர்கள், அடிமைத்தனமும், பாசாங்கும், பழிகுணமும் கொண்டவர்கள் .. இவர்களை பீச்சாங்கையால் தள்ளிவிட்டு நாம் நம் வேலையை செய்வோம் ..
..
நீண்டநாள் காத்திராமல் சட்டென்று முடிவெடுத்த முதலமைச்சருக்கு நன்றி .. ஐம்பதாண்டுகள் காத்திருந்தாலும் இவர்களின் எரிச்சலும் பகையும் கூப்பாடு குறைந்துவிட போவதில்லை .. 
சரியான நேரத்தில் அமைச்சராக்குவதும் அதிகமதிகம் கற்றுக்கொள்ளவும், மக்களின் நன்மதிப்பை பெறுவதற்கு பயிற்சியாகவும் அமையும் .. சிலரின் பொறாமைகளை கணக்கில் கொள்ள தேவையில்லை ..
..
உதய்  தன் 45 வயதில் அமைச்சராகிறார் தன் தாத்தன் 44 வயதில் அமைச்சரானதைப்போல அதைப்போல் கடும் உழைப்பு தேவை .. சுற்றியிருக்கும் கையடிகளை கவனமாக கையாண்டு தூர நிறுத்தவேண்டும், "சின்னவர் " என புகழ்பாடும் "துதி"களிடம் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் .. இவர்களின் கைதட்டல்கள் பதவிக்காகவே என்பதை உணரவேண்டும் .. இன்னமும் கடுமையாய் உழைத்து அப்பன் பெயரை காப்பது மட்டுமல்ல அப்பனை மிஞ்சி உழைக்கிறான் என பெயரெடுத்தால் வரலாறு பேசும் 
..
நல்ல நேரம் பார்த்து பதவியேற்கிறார் என்பவர்களுக்கு தேய்பிறையில் அல்லவா என கேட்கமுடியும் .. சமீபத்திய பேட்டிய மிகத் தெளிவாக கடவுள் என்ற கேள்விக்கு இல்லை  என சொன்னவர் .. ஏற்கனவே ஒரு பேட்டியில் என் தாயாருக்கு பக்தி உண்டு எனக்கோ என் இணையர் கிருத்திகாவிற்கோ கடவுள் பக்தி இல்லை என்றவர் அவரை தான் நல்ல நேரத்தில் பதவியேற்பதாக சுமந்துகள் சுமக்கிறார்கள் .. நம்பிக்கை என்பது  அவரவர் விருப்பம் .. அவரின் மக்கள்பணி எப்படிபட்டதென்பதை சேப்பாக்கம் மக்கள் சொல்கிறார்கள் .. பொதுவாக தமிழக மக்களின் மனயோட்டமும் உதய் வருவதை வரவேற்பதாகவே இருக்கிறது 
..
தமிழகத்தின் நம்பிக்கை ஒளியாய் திகழ்கிறார்.. பாசிசம் பலமுனை தாக்குதலை நடத்தும் வேளையில் நாகரீகமற்ற எதிராளிகள், வீண் வதந்ததிகளை பரப்பும் விலைப்போன ஊடகங்கள்,  அதிமுகவைப்போல திமுகவையும் வருங்காலத்தில் சிதலடைய செய்ய காத்திருக்கும் வேளையில் திமுகவின் எதிர்காலமென்பது தமிழர்களின் நலனும் தமிழ்நாட்டின் தன்மானமும் சேர்ந்தது  என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும்
..
வாரிசு என கதறுபவர்கள் யாரென்று பார்த்தாலே புரியும் நமக்கு .. ராஜகோபால் (ராஜாஜி) தன் மகனை C.R.நரசிம்மனை   கிருஷ்ணகிரி எம்பி ஆக்கியபோது பேஷ் பேஷ் என்ற கூட்டம் தான் ..
அவர்கள் நோக்கம் எப்படியேனும் திமுகவை அகற்றவேண்டும் .. திமுக கட்சிதான்  நமக்கு இடையூறாக இருக்கிறது .. எந்த  திட்டம் கொண்டுவந்தாலும் வழக்கு தொடுத்தோ போராட்டம் மூலம் நடக்கவிடாமல் செய்கிறது.. அதிமுகபோல அடக்கியாள முடியவில்லை என பாசிச பார்பனீய கும்பல் முழிக்கிறது ..
..
திராவிடத்தின் தேவை இன்னமும் இந்த மண்ணுக்கு அவசியம் என்பதால் திமுகவை அடுத்தகட்டத்திற்கும் தயார் செய்யவேண்டுமென்பதால் பகுத்தறிவோடு செயல்படும் இளைஞரை இப்போதிலிருந்தே தயார் செய்வது திராவிட இயக்கத்தின் கடமை .. 
இந்த மண்ணில் சமூகநீதியும், சமத்துவமும்,சமநீதியும் நிலைத்திட முதலமைச்சரின் அடுத்த நகர்வை தமிழ்கூறும் நல்லுலகம் ஆதரித்து அரவணைக்கும் 
நல்வரவாகட்டும்..
WELCOME  Udhayanidhi Stalin 

நன்றி! 
Chief Minister of Tamil Nadu 
M. K. Stalin 
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment