தலைவராகிறார் ..
எம் இனத்தின் காவலர் .. பகைவருக்கோ சிம்மசொப்பனம்,
பகையறிந்து படையோட்டம் நடத்தும் தளபதி..
அன்னையைப்போல அன்புகாட்டும் பேருள்ளம்,
மக்களின் மனம் கவர்ந்தவர்..
..
தெளிவான கொள்கை பிரகடனம்
தெள்ளத் தெளிவாக இதுதான் திராவிட மாடலென சொல்லி அதில் உறுதியோடும், துணிவோடும் ஆட்சி நடத்தும் அழகு ..
அனைவரைக்குமான ஆட்சி..
பள்ளத்தில் கிடப்போரை படிகளில் ஏற்றிட கல்வி ஒன்றே வழிசெய்யுமென எல்லோருக்கும் ஏற்றதாழ்வற்று கல்வி கிடைத்திட
மாநில கல்விக் கொள்கை வகுத்து சமதர்ம சமுதாயம், சமநீதியோடு, சமூகநீதியோடு, கிடைத்திட வேண்டி ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் தலைவர் .. நம் முதல்வர்
இரண்டாம் முறையாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகிறார் ..
வாழ்த்துகள் ..
..
நல்லவர் கையில் தமிழ்நாடு என மக்கள் நம்பிக்கையோடும்,நிம்மதியோடும் இருக்கிறார்கள் .. கயவர்கள், காட்டிகொடுப்போர்,அடிமைத்தனத்தில் ஊறி, நாட்டை அடகுவைத்த அயோக்கிய கும்பல், சாதிமத வெறிகளுக்கு ஒத்தூதி அமைதியை கெடுத்தாயினும் தங்களை காத்துக்கொள்ள எண்ணி தமிழ்நாட்டை சீரழித்த எடப்பாடி பன்னீர் எனும் இரட்டையர்களின் துரோகத்தை கண்டு இனியும் விட்டால் கூறுபோட்டுவிடுவார்கள் மதவெறி தலைதூக்கி மனிதம் செத்துவிடுமென அறிந்து ..இதோ மகராசன் வந்துவிட்டான் இனி வல்லூறுகளின் பிடியிலிருந்து காப்பான் என நம்பி அகமழிந்து
தளபதியை அறியணை ஏற்றினார்கள் .. அவர்களின் நம்பிக்கை பொய்த்துவிடாமல் நல்ல விளைச்சலை தருகிறார் ..
தமிழகம் மிளிர்கிறது ..
..
சற்றென்று முளைத்தல்ல.. நேற்றைய மழையில் வந்த காளான் அல்ல.. செம்மை படுத்தி .. நல்ல விதையை நீண்டநாள் காத்து சரியான பருவத்தில் விதைத்திருக்கிறார்கள் மக்கள் ..
எங்கும் மத விசமம் துவேசம், அடுத்தவரின் நம்பிக்கையை குலைப்பது, மாட்டிற்காக மனிதனை கொல்வது, பிற மத அடையாளங்களை அழிப்பது .. சாதிமதமறியாது அண்ணனாய் தம்பியாய் மாமன் மச்சானாய் வாழ்ந்தவனிடம் வர்ணம் கொண்டு பிரித்து அடித்து கொள் என ஏவிவிட்டு அந்த தீயில் குளிர்காய்ந்து தம் மக்களை உயரத்தில் ஏற வழிசெய்யும் பாசிசத்தின் செயலை ஒடுக்க கிழக்கில் உதிக்கும் சூரியனாய் வந்தவர் .. அதிகாரத்தின் இருளை அகற்ற வந்த சூரியனாய் எல்லோருக்கும் வெளிச்சம் தந்து நல்லாட்சி தருகிறார்
..
இந்திய ஒன்றியத்தின் நம்பிக்கையாய், பாசிச சூழ்ச்சிக்கஞ்சாத நெஞ்சுரம் கொண்ட தலைவனை இந்திய தேசம் வியப்போடு பார்க்கிறது .. திராவிடம் மட்டுமே இந்திய ஒன்றியத்தின் வளர்ச்சிக்கு உதவும் என நம்புகிறார்கள் .. யாரை கொண்டு மதவெறியர்களுக்கு கடிவாளம் போட முடியும் .. இந்த தேசத்தின் பன்முகத்தன்மை காக்க திராவிட சித்தாந்தமே சரியானதென நடுநிலையாளர்களும் தேசபிமானிகளும் நாட்டின் மீது தீராத பற்றுக்கொண்டவர்களும் ஸ்டாலின் யாரை முன்னுறுத்துகிறார் என காத்திருக்கிறார்கள் .. பிரதமரை உருவாக்கும் சக்தியாக திகழ்கிறார் ..
..
திராவிட இயக்கத்தின் நான்காம் தலைமுறையின் தலைவர்
மாண்பிமை #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்
திமுகவின் தலைவர்
நாட்டின் சிறந்த தலைவர்களில் ஒருவர் ..
நாட்டின் நம்பிக்கை..
தமிழர்களின் "வேள்"..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment