கொள்கை குன்றே ..
திராவிடத் "தரு"வே
..
உன் நிழல் கூட
எமக்கு பகுத்தறிவை போதித்தது
எக்காலத்தலும்,
எக்காரணம் கொண்டும்,
எந்நிலையிலும்
தடமாறாத உன் பயணம்
கொள்கை உறுதியை கற்றுதந்தது
..
கலைஞரின் இடதே ..
எங்களின் இதயமே ..
உன் கண்ணசைவை
கலைஞர் புரிந்துக்கொள்வார்
கலைஞரின் விழி பேசும் மொழி
உனையன்றி யாரறிவார்..
நட்பென்றால்
என்னவென்று
வாழ்ந்துகாட்டி
இலக்கணம் படைத்தீர்
கலைஞர் மறைந்த தினம்
கோபாலபுரத்திலிருந்து
வெளியேறி
திரும்பிநின்று
வீட்டை ஒருமுறை பார்த்தீரே
அதில்
எழுபதாண்டு அரசியலில்
எண்ணற்ற முடிச்சை அவிழ்க்க
தீட்டிய திட்டமெல்லாம்
கண்முன் வந்துபோயின
..
பேராசிரியரே
உம் வழிதனை
சிரமேற்று நடத்த
பெரும்கூட்டம் உண்டு..
உன் அரசியல் தெளிவை
பாடாமாய் கொண்டு
பட்டைகிளப்பி பெரும்படையோட்டம் நடத்தி
பகைமுடிப்போமென என
உன் நூற்றாண்டில்
உறுதியேற்போம்
..
#பேராசிரியர்..
எங்கள் இனமானம்..
கலைஞரின்
மற்றொரு முகம்..
நட்பிற்க்கோர் இலக்கணம்
..
#நவில்தொறும் நூல் நயம்போலும்.
பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு.
படிக்க படிக்க இன்பம் தரும் நூல் போல பழக பழக இன்பம் தரக்கூடியது பண்புடையார் நட்பு
..
#பேராசிரியருக்கு_பிறந்தநாள்
19/12/1922..
அகவை 101
ஆர்ப்பரிக்காத
அமைதிக்கடல்
ஆழ்கடல்..
அமைதியான
ஆழ்கடலில்தான்
முத்து கிடைக்கும்..
..
சுயமரியாதை சுடரொளி
திராவிட இயக்க சங்கநாதம்
கொள்கையில் உறுதி..
கலைஞரின் சுருதி..
..
எங்கள் இனமானம்..
எங்கள் இனஉணர்வு...
எங்கள் பேராசிரியர்..
..
ஆலஞ்சியார்
#Perasiriyar101
#பேராசிரியர்101
No comments:
Post a Comment