ஜெயலலிதாவிற்கு உள்ள தைரியத்தில் 1% கூட ஸ்டாலினிடமில்லை ஜெயகுமார் ..
ஜெயலலிதா கண்டால் எல்லோரும் அஞ்சுவார்கள் என சிலர் .. ஜெயலலிதாவின்
தைரியத்தை 18 ஆண்டு வழக்கை இழுத்தடித்ததிலும் தண்டனையை குறைத்துக்கொடுங்கள் என அழுததிலும் பார்த்தோம் ..
..
திமுக அடிமைகள் கூடாரமல்ல இங்கே பதவியை தோளில் போடும் துண்டாக நினைப்பவர்கள்.. கொள்கை,மானம் இவர்களுக்கு
கட்டும் வேட்டியை போன்றது.. சாலையோரத்தில் தடுப்பிற்கு அப்பால் நின்று கொண்டு கையெடுத்து கும்பிட்டு கெஞ்சும் பழக்கம் ஜெயகுமாருக்கு இருக்கலாம் இங்கே பொதுக்குழுவில் கூட பேசும் தைரியமும் தவறை சுட்டிகாட்டி மெல்ல கொட்டும் பழக்கமும் உண்டு .. வானத்தை பார்த்து ஜெயலலிதா வரும் ஹெலிகாப்டரை கும்பிடும் கேனபயல்கள் எங்களுக்கு பாடமெடுக்க கூடாது ..
இங்கே தவறிழைக்கும் பிள்ளையை மென்மையாக கண்டிக்கும் தகப்பனைப்போல செயல்படுகிறார் தலைவர் ..அதற்காக தகப்பனுக்கு தைரியமில்லை என்றள்ள பொருள் .. சொல்லி திருத்தும் பாங்கு ..
..
அப்படியொன்றும் தவறிழைத்துவிடவில்லை வீட்டில் சாதாரணமாக அமர்ந்திருப்பதும் பேச்சுவாக்கில் வட்டாரமொழி பேசுவதும் விசமிகளால் தவறாக சித்தரிக்கபடுவதற்கே மனம் கலங்கி நிற்கிறாரெனில் தலைவர் எத்தனை அதிகம் மக்களை நேசிக்கிறார் என்பதை உணர வேண்டும்.. சிறிதாய் கூட ஆட்சிக்கு களங்கம் வரகூடாதென அத்தனை சிரத்தையோடு பணியாற்றுகிறார், அதெல்லாம் எவ்வளவு வேண்டுமானாலும் கொள்ளையடித்துக்கொள்ளுங்கள் எங்கள் பங்கை சரியாக தந்துவிட வேண்டுமென நிபந்தனை விதித்து
கொள்ளையடித்து சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதாவோடு ஒப்பிட கூடாது ..
அரசியலில் அண்டிபிழைத்து புறவழியே நுழைந்தவர்களோடு, ஜனநாயகத்தின் நம்பிக்கையாளர்களை மக்கள் தீர்மானித்து அதிகாரம் தரவேணேடும் எனும் தளபதியோடு ஒப்பிடகூடாது
..
எடுத்தேன் கவிழ்தேன் என்பதல்ல ஒவ்வொருவருக்கும் சுயமரியாதை உண்டு.. சில நிகழ்வுகளில் தவறென்றே அறியாமல் செய்துவிடுவதுண்டு .. தெரியாமல் செய்வது தவறு தெரிந்தே செய்தால் தப்பு .. இங்கே யாரும் தப்பானவர்கள் இல்லை.. தலைமைக்கு விசுவாசமானவர்கள் தவிர அடிமைகள் அல்ல..
தன் உறவுகளிடம் உரையாடுவதைப்போல தலைவர் கழகத்தினரோடு உரையாடுகிறார்
தலைவன் தொண்டன் என்பதை தாண்டி குடும்ப உறவுகளைப்போல பிணைந்திருப்பவர்கள்.. உரிமையோடு கண்டிப்பதும் தண்டிப்பதும்
வள்ளுவன் சொன்னதைப்போல
"கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்"
குற்றங்கள் நிகழாமல் இருக்கக் கண்டிக்கும்போது கடுமை காட்டித், தண்டிக்கும் போது மென்மை காட்டுகிறவர்களின் செல்வாக்குதான் தொய்வின்றி நெடுநாள் நீடிக்கும்.. என
செயல்படுகிறார் ..
..
இரத்தத்தில் உயிரில்லாத அடிமைகள் வயதை மீறி காலில் விழுந்து உலகம் பார்க்க கேலியானவர்கள்
தலைவர் தளபதியை பற்றி பேச அருகதை இல்லை..
மானமொன்றே பெரிதெனக் கொண்டு வாழ்வதெங்கள் பழக்கம் .. மானங்கெட்ட
கோழைகள் எங்களுக்கு பாடமெடுக்க கூடாது ..
..
குறை இல்லா செல்வம்
நிறைவான ஆளுமை
அப்பழுக்கற்ற வெளிப்படைதன்மை
எதையும் நேர்மையோடு நன்னெறியோடும்
அதிகாரமென்பது மக்கள் பணி செய்ய நல்வாய்ப்பு என செயல்படும் எங்கள்
முதல்வர்
Chief Minister of Tamil Nadu
தகத்தாய சூரியன் எங்கள் தலைவர் தளபதி
M. K. Stalin
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment