Saturday, December 3, 2022

ஆர்.எஸ்.பாரதி 
திமுகவின் அமைப்பு செயலாளர்
சில தினங்களுக்கு முன்பு அ.ஜின்னா நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசும் போது தன்னுடைய நீண்டகால பயணத்தையும் நீண்டநாள் காத்திருந்ததையும் தான் அறிமுகபடுத்தியவரெல்லாம் எம்.பி எம்எல்ஏ என வந்துவிட்டதை சொல்லி திமுகவில் புதிதாக வந்தவர்கள் ஜொலிப்பதாக கதைத்திருக்கிறார்..
..
ஆர்‍.எஸ்.பாரதிக்கு எதிர்கருத்துகூற விமர்சன செய்ய முழுதகுதியிருக்கிறது ..ஏன் திமுக உறுப்பினர்கள் கூட தன் கருத்தை கூற உரிமை உள்ளது .. எல்லாமட்டத்திலும் பயணிக்கும் யாவரும் கருத்திடலாம் எதிர்க்கலாம் ஆனால் அதை எப்போது எங்கனம் செய்யவேண்டுமென அறிதல் வேண்டும் .. பொதுவெளியில் பேசுவதால் எதிரிகளுக்கு அவுலோடு சக்கரையையும் கலந்து கொடுத்ததைப்போல வேகமாக பரப்புகிறார்கள் .. முதலில் அவர் பேசியது முழுவதையும் வெளியிடாமல் சிலதை மட்டும் வேகமாக எடுத்துச் செல்வதிலிருந்தே நோக்கம் நமக்கு புரிகிறது ..
அப்படி தவறாக எதுவும் பேசவில்லை .. மிகப்பெரிய ஜனநாயக இயக்கத்தில் தேர்தலை மைய்யபடுத்தி களம்காண வேண்டிய கட்சி சிலநேரம் சிலரை முன்னிறுத்துவதும் சிலருக்கு வாய்ப்பை காலதாமதபடுத்துவதும் இயல்பு .. அவரே பலமுறை லிஸ்டில் பெயர் இருக்கும் வாய்ப்பு தள்ளிபோகும் என்கிறார் .. கலைஞரே ஜின்னாவிற்கு ஒன்றுமே செய்ய முடியவில்லை என ஆதங்கபட்டதாகவும் சொல்வதிலிருந்தே தலைவரின்  ஆசையை கூட திமுக காலந்தாழ்த்தும் என்கிற உண்மை திமுக எத்தகைய ஜனநாயகதன்மை கொண்ட இயக்கம் என்பதை உறுதி செய்கிறது 
..
ஆர்.எஸ்.பாரதிக்கு 
1986ல் தன் 39 வயதில் நகர்மன்ற தலைவர்.
அதன்பின்  தொடர்ந்து மூன்று முறை நகர் மன்ற தலைவர்..  நீண்டநாள் அமைப்பு செயலாளர் எம்.பி என பலபதவிகளை வகித்தவர் வகித்துக்கொண்டிருப்பவர் .. அவரின் பேச்சு வைரலாக காரணம் என்ன .. மிக எதார்த்தமாக திமுகவில் நிறைய பேர் காத்திருப்பதை சொல்கிறார் .. தலைவரே காத்திருப்போருக்கு வாய்ப்புகள் வழங்கபடுமென சொன்னதுதான் .. புதிதாக வந்தவர்கள் என்ற சொற்சொடரையே ஏற்பதற்கில்லை ஏற்கனவே திமுகவில் இருந்தவர்கள்தான் பாதை மாறியவர்கள் திரும்ப வந்தாலும் எல்லோருக்கும் வாய்ப்பு தரப்படவில்லை சிலரை தேவை கருதி அவர்களின் ஊழைப்பு வெற்றி வாய்ப்பை மற்றும் பிரதான காரணங்களை கருத்தில் கொண்டு தலைவர் முடிவெடுக்கிறாரெனில் அதில "அர்த்தம்" இருக்கும் ..
..
மாற்றுக்கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு ஏதோ திமுக மட்டும்தான் வாய்ப்பை தருவதைப்போல பிம்பத்தை கட்டமைக்கிறார்கள் .. எம்ஜிஆர் ஜெயலலிதா வாய்ப்பை வழங்கியபோது வாய்பொத்தி இருந்தவர்கள் இன்று பாரதி பேசியவுடன் பார்த்தாயா அமைப்பு செயலாளரே பேசிவிட்டார் இருப்பவனுக்கு மரியாதை இல்லை என கூச்சலிடுகிறார்கள் 
..
திமுக பாரதிகளும் மணிகளும் ஆறுமுகங்களும், பெரியசாமிகளும் பெரியண்ணன்களும் தங்கபாண்டியர்களும், நிறைந்த பெருங்கூட்டம் .. எம்ஜிஆருக்கு சீட்டா  என இரவு கதவை தட்டி அண்ணாவிடமே கேட்ட கல்லூரி மாணவர் பாரதி .. எம்ஜிஆர் சமாதிக்கெல்லாம் என்னால் வரமுடியாதென கடைசிவர வரமறுத்த மணிகள் உண்டு .. பொதுக்குழுவிலேயே குரல் உயர்த்தி பேசும் ஆறுமுகங்களும், முரட்டுபக்தர்களும்,கழகத்தை விட்டு போனால் வீட்டில் மாட்டியிருக்கும்  புகைப்படத்தை வெளியே எறியும் தங்கங்களும் கொண்ட இயக்கம் .. பதவி வரும் போகும் என இடுப்பு வேட்டி இறுக கட்டும் மானமறவர்கள் நிறைந்த கட்சி .. தலைவருக்கு யாரை எப்போது எங்கே நிறுத்த வேண்டுமென தெரியும் .. வாய்ப்புகள் மறுக்கபடவில்லை காலதாழ்த்துகிறது அவ்வளவுதான்
..
திமுக மிகப்பெரிய ஜனநாயக இயக்கம் .. வாய்ப்பு கிடைப்பதென்பது அவ்வளவு எளிதல்ல சிலருக்கு நல்வாய்ப்பாய் அது சீக்கிரம் கிடைத்திருக்கும் கோடிக்கணக்கணக்கான தொண்டர்கள் கொண்ட இயக்கத்தில் தகுதியுள்ளோர் ஏராளம்  ஒவ்வொரு தொண்டனும் தகுதியுடையவன் .. 
தொண்டனின் பலமே திமுக கொள்கை உறுதியோடு செயல்படும் பெரும்படை கொண்ட கூட்டம் திமுக.. கலகம் மூட்டலாம் என்ற சிலரின் எண்ணம் ஈடேறாது
..
ஆலஞ்சியார் 

No comments:

Post a Comment