தங்களுக்கு உடனே நீதி கிடைக்கவேண்டும் ..நாங்கள் சொல்வதை உடனே கேட்கவேண்டும்,.. பார்த்தாயா இவர் மெல்ல பாசிசத்திற்கு செவி சாய்கிறார்.. ஆர்எஸ்எஸ் பிடியில் திமுக அரசு.. விடிந்தும் விடியவில்லை என்றெல்லாம் சமுதாய அலப்பறைகள் .. இஸ்லாத்தின் நவீன பாசறை தம்பிகள் முனகுவதும் முழங்குவதும் முழுவதும் அறிந்தாற்போல் சமூக வலைதளங்கள் தீர்ப்பெல்லாம் எழுதுகிறார்கள் ..
..
திமுக துரோகம் செய்துவிட்டது திமுக நமக்கான பாதுகாப்பை தரவில்லை திமுக நம்பி பலனில்லை என "தீர்க்கதரிசிகள்" வாய்மொழி தீர்ப்பளிக்கிறார்கள் ..
உண்மையில் பரிதாபகரமாக இருக்கிறது விடுதலைக்கு முன்பு தீர்மானிக்கும் இடத்திலிருந்த சமூகம் இன்று இந்த நிலையில் இருப்பதற்கு யார் காரணமென இப்போதும் சிந்திக்க நேரமில்லாமல் பழி சொல்வதிலேயே பகுதி வாழ்வை இழக்கிறார்கள் ..
இப்போதும் சொல்கிறோம் திமுகவை நம்பவேண்டும் என யாரும் சொல்லவில்லை.. உங்களுக்கு சௌகரியமான இடத்தில் சேர்ந்து பயணிக்கலாம் அதற்கு முன்பு இப்போதிருக்கும்
நிலையை நினைவில் கொள்ளுதல் நலம்..
..
சமுதாயம் ஏன் பிரிந்து கிடக்கிறது
யார் காரணம், எதனால் இந்த பின்னடைவு, என சிந்திப்பதே இல்லை .. எது நம்மை தடுக்கிறது
குற்ப்பாக இளைஞர்களை வழிகெடுத்து அவர்களை மூளைச்சலவை செய்து வழிகேட்டில் நிறுத்துவது யார் ..
எதை எப்படி அணுகுவதென்று கூட தெரியாது போனதா .. சமுதாய ஒருங்கிணைப்பு ஏன் சாத்தியமாகாமல் போனது .. மண்ணெண்ணெய் பாட்டில் வீசினால் வீரனென யார் சொன்னார்கள்.. உணர்வை வெளிபடுத்த ஆயுதம் தூக்க சொல்லி யார் கற்றுதந்தது ..
உண்மையில் பரிதாபகரமாக நிலையை எண்ணி வருத்தம் மேலிடுகிறது ..
..
பாசிசம் விரும்புவது அதுதான்.. உம்மை குற்றவாளி கூண்டில் நிறுத்தி வளர வேண்டும்.. இதோ பார் முஸ்லிம்கள் தீவிரவாதிகள், ஜிதாதிகள், அவர்கள் இரத்தத்திலேயே ஊறிபோன விடயம் .. இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்கள் என பரப்புரை செய்ய இது போதும் .. பகைவர்கள் கையில் இஸ்மாயில் என பச்சைகுத்திக்கொண்டு காந்தி கொலையையும் அதன் தொடர் கலவரத்தையும் மதத்தின் பேரில் எழுதிவைக்க நினைத்ததும் பெரியார் கூட அப்போது காந்தியை கொன்றது பார்ப்பான் என பகிரங்கமாக வானொலியில் பேசியதும் .. உத்தமர்காந்தியை கொன்றது ஊதாரி பார்ப்பான் என கலைஞர் முரசொலியில் எழுதியதும் நினைவிற்கு வருகிறது இது அவர்களின் வரலாறு பழிகளை சுமத்த இஸ்லாமியன் வேண்டும் அதைச் சொல்லி கலவரம் நடத்த சூத்திரன் வேண்டும் கலவரத்தின் குளிர்காய வேண்டும் இதுதானே காலங்காலமாய் நடக்கிறது .. இப்போதும் அதே கட்டத்தில் தான் ..
எச்சரிக்கை..
..
மிக சாதூர்யமாக செயல்படவேண்டிய காலகட்டம் யார் பகைவர் என்பதை உணர்ந்து
என்னவெல்லாம் சூழ்ச்சிவலை பின்னுகிறார்கள் .. இந்நாட்டில் தற்போதைய அவஸ்தை என்ன.. நெடுங்காலம் தீட்டிய திட்டத்தை நம் கைகளை கொண்டே நிறைவேற்றிட நேரம் பார்த்து காத்திருக்கிறார்கள் .. தொப்புள்கொடி உறவுகளை கூர்தீட்டுகிறார்கள் .. ஒவ்வொரு பாஜகவினரும் வாய்திறந்தாலே மதம்,வாய்கூசும் சொல், இஸ்லாமிய வெறுப்பு .. பிற மதத்தை இப்படி பேசிவிட்டு உயிரோடு இருக்கமுடியுமா என தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தல்
இந்நாடு அறபாதையிலிருந்து விலகி வெகுகாலமாகிவிட்டது..
இப்போது வாழவே தகுதியற்றதாகி கொண்டிருக்கும் வேளையில் .. நல்வாய்ப்பாய் தென்னகத்தில் காலூன்ற முடியாதவாறு திராவிட சித்தாந்திகள் அறிவுக்கண்ணை திறந்து எதையும் யோசித்து செய் என அறிவூட்டியதால் இன்று கொஞ்சமேனும் நிம்மதி பெருமூச்சு விடுகிறோம் ..அதையும் கெடுக்கதான் "பலி ஆடுகளை" கொண்டு பேயாட்டமாட நினைக்கிறார்கள் .. எரிகிற நெருப்பை அணைக்காவிட்டாலும் எண்ணெய்யாய் இல்லாமல் இருந்தால் போதும்
..
தமிழ்நாட்டில் மிக பெரிய கலவரத்தை நடத்திட முயல்கிறார்கள்
திமுக அரசு கவனத்தோடு செயல்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது .. நம்பிக்கையில்லாதோர் மாற்றுபாதையில் செல்லவும்..
ஜனநாயகத்தின் கண்கள் கூர்மையானது
எல்லாவற்றையும் உள்வாங்கும் .. சரி செய்கிற நேரத்தில் சரி செய்யும் ஏனெனில் இங்கே வெகு மக்கள் விரும்புவது
சமூக நல்லிணக்கம் .. சகோதரத்துவம், சமூகநீதி .. இவையாவும் தான் மனித சமூக மேன்மைக்கு வழிவகுக்கும் ..
தோக்கு தூக்க எம்மை பழக்கவில்லை
அறிவு கொண்டு எதையும் வெல் என்று தான் திராவிடம் சொல்லி தந்திருக்கிறது ..
நம் முதல்வர்
நமக்கானவர்
நன்மை நிறைந்தவர் ..இங்கே பாசிசத்திறேகும் பாசாங்கிற்கும் இடமில்லை கலவரம் செய்வோர் மீது கருணைகாட்ட முடியாது கடுமையான நடவடிக்கைதான் தேவை.. கசடுகளை களைவோம் .. நல்லதை விதைப்போம்
..
இங்கே சாதி மத பிணி நீங்கி
நல்லதொரு சமுதாயம் படைப்போம் ..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment