பாஜக நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு
..
கொள்ளையர்கள், ஏமாற்றுகாரர்கள், ரௌடிகள், பொய்யர்கள், போலிகள், போதைப்பொருள் கடத்துபவர்கள் நடத்தைகெட்டவர்கள், கலவரக்காரர்கள், சாதிமதவெறியர்கள், என கேடுகெட்டவர்களின் கூடாரமாக திகழ்கிறது ..
எதாவது தப்பை செய்துவிட்டு தப்பிக்க பாஜகவில் அடைக்கலமானால் போதும் எவ்வளவு அயோக்கியத்தனம் செய்தாலும் ஊரை அடித்து உலையில் போட்டாலும், அடுத்தவனை ஏய்த்து பிழைத்தாலும், நடுரோட்டில் பெண்களின் தாலியை அறுத்தாலும், இங்கே தலைவனாகலாம்..
..
படித்த பட்டமே போலி என்றால் நீ புதிய கல்வியை வகுக்கலாம் எந்த கல்லூரியில் படித்தாய் என எவருமே அறியாமல் இருந்தால் நீ தலைமை அமைச்சனாகலாம் .. உருவாக்க வக்கில்லாமல் இருந்தாலும் உன் பாட்டன் சொத்தையா விற்றேன் என கேட்க தெரிந்தால் நிதி ஆளுமையாகலாம்.. எலுமிச்சை பழத்தை கட்டிவிட்டால் பேய் பிசாசு மட்டுமல்ல பிறநாட்டு ராணுவம் கூட நுழையாதென்ற அறிவிருந்தால் பாதுகாப்பாளனாகலாம் .. மாட்டு மூத்திரமும், பசுவிற்கு உயிர்வளி (ஆக்சிஸன்)காற்றும், கேள்வி கேட்டால் புல்டோசரும் இருந்தால் மாநிலத்தை ஆளலாம் ..
ஒரே நாளில் பணம் செல்லாதென நடுத்தெருவில் நிறுத்தினாலும் புதிய இந்தியா பிறந்ததென புகழந்தால் நீ புனிதன் உனக்கு ரெய்டு கிடையாது .. கங்கை மூழ்கி வீணையோடு எழுந்தாரென புழுகினால் நீ நாடாளுமன்ற உறுப்பினராகலாம், மொத்தத்தில் உன் சுயம் மறந்து இழந்து மானங்கெட்டுபோய் மதி இழந்து நின்றால் பாஜக உறுப்பினராகலாம்
..
நாடு எங்கே செல்கிறது ..
கடும் கருத்து மோதல் இருந்தாலும் நாகரீகம் காத்த தலைவர்கள் வாழ்ந்த நாடு .. செய்வதை தவறென்று சொன்னால் திருத்த முயன்றவர்கள் .. நாகரீக மொழியில் நயமாய் விமர்சனம் செய்தவர்கள் .. நீதியின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் ..
பிற மத நம்பிக்கைக்கும் மதிப்பளித்தவர்கள் .. அளவோடு பொய் சொன்னாலும் அது நிரூபணம் ஆனால் வருந்தியவர்கள் நாடாளுமன்றமோ சட்டமன்றமோ மக்களின் பிரதிநிதிகளின் சபை என்றறிந்து மக்களின் குரலாய் ஒலித்தவர்கள்
ஆளும் கட்சியின் செயல்பாடுகளின் தவறுகளை தலையில் கொட்டிய திருத்திய வரலாறு கொண்டவர்கள்,படித்தவர்கள் பண்பாளர்கள் ஆன்றோர்கள் சான்றோர்கள் அறநெறி கொண்டவர்கள் அலங்கரித்த சபைகள்.. இன்று பொய்யர்களும், மதவெறியர்கள் கொலைகாரர்கள் பெண்களை கற்பழித்த கயவர்கள் சிறைதண்டனை பெற்றவர்கள் பெட்ரோல் குண்டுவீசும் "திறமை" கொண்டவர்கள் போலி சான்றிதழ் போலி முகவரி போலித்தனம் கொண்டவர்களை பாஜக அழைத்துவருகிறது ..
..
அதோடு போதைப்பொருள் கடத்த துறைமுகம் வேண்டும் அதை நம்பிக்கைக்குரியவனுக்கு வங்கிகடனோடு கொடு .. நாட்டின் சொத்தையும் சேர்த்து கொடு ..
எல்லாவற்றையும் தனியாருக்கு கொடு எதிர்த்தால் தேசநலனுக்காக 20 மணிநேரம் உழைக்கிறேன் என
மக்களை ஏமாற்ற உரக்க பேசு ..
..
நேர்மையானவர்கள், தவறை சுட்டிகாட்டும் நெஞ்சுறுதி மிக்கவர்கள் சரியான வழிகாட்டும் திறமையாளர்கள் அறிவாளிகள், துறைசார்ந்த வல்லநர்கள் எல்லாம் வேண்டாம், சரித்திரம் படித்தவன் நிதி ஆளுமையாகலாம், பரதேசி வேசம் கட்டியவன் காலில் செருப்பு போடமாட்டேன் என்பவன் பெண்களை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் கிண்டல் செய்பவன் துன்புறுத்துபவன் செல்வாக்கோடு வலம் வரலாம் .. பாஜக அசிங்கங்களும் வேண்டாத குப்பைகளும் உறவுமுறைகளை கூட அசிங்கபடுத்தும் "தகாத" வர்கள் பாஜகவின் பலம் ..அதுசரி
பத்திரிக்கையாளர்களை கண்டால் OH MY GOD என்பவர் தானே நாக்பூரின் தலைமை தலையாட்டி
..
நீதிமன்றம், தேர்தல் ஆணையம்,விசாரணை அமைப்புகள் ஊடகம் என நடுநிலைசார்ந்தவைகளை விலைபேசும் மிரட்டும் பாசிச
பாஜக தேசத்தின் கேடு ..
மக்கள் வெகுண்டெழுந்து முடிவுகட்டவேண்டிய காலம் ..
விழித்தெழுவோம்
நாட்டை காப்போம் .. பைத்தியகாரன் கையில் மீண்டும் சென்றுவிடாமல் அறம்சார்ந்த நல்ல தலைவர்களின் கையில் நாடு மீள பாசிச பாஜகவை புறக்கணிப்போம்..
..
நல்லவர்களை இனம்காண்போம் ..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment