Sunday, October 9, 2022

கனிமொழி கருணாநிதி ..
Kanimozhi Karunanidhi 
சில தினங்களாக பெரிதும் பேசபடுகிற பெயர் .. திமுக உட்கட்சி
தேர்தல் அதில் துணைச் செயலாளர் பதவியை தரவேண்டும் /தரப்படும்  என செய்தி வலம் வருகிறது ..  மானமிகு சுப்புலெட்சுமி ஜெகதீசன் Jegadeesan Subbulakshmi 
விலகியதை தொடர்ந்து யார் ..? என்ற கேள்வி எழுந்து விடைகாணும் நேரம் இது ..
கனிமொழி மிக தகுதி வாய்ந்தவர் 
மறு கருத்தே இல்லை ..
..
ஆனால் ..
தொடர்ந்து மகளிர்க்காக மட்டும் என்ற சொற்சொடரே சரியானதாக படவில்லை. மகளிருக்கான பிரிவில் தான் என்பது நெருடலை தருகிறது.. பொதுபிரிவில் ஏன் போட்டியிட கூடாதா ..
பொதுச் செயலாளர்  /பொருளாளர் பதவிகள் ஏன் ஆண்களுக்கு மட்டுமே சொந்தமா என்ன.. ஏன் பெண்களை முன்னுறுத்தபடுவதில்லை .. மாவட்டளவில் கூட இன்னமும் நாம் மிகவும் பின்தங்கிதானே இருக்கிறோம் .. அங்கங்கொன்றும் இங்கொன்றும் என்பது சரியா.. பெண்களின் உரிமைகளை, அவர்களுக்கு அதிகாரம் வழங்கவேண்டுமென தொடர்ந்து பேசிவரும்  திராவிடஇயக்கம்
அதிகாரத்தில் அமர்த்தி அழகுபார்க்கவேண்டாமா ..
..
திராவிடர் கழகத்தில் பொருளாளராக பிறைநுதல் செல்வி இருந்தார் அவர் மறைவிற்கு பிறகு அந்த பதவியை பெண்களுக்கு ஒதுக்கபடவில்லை ..
அதை தி.கழகத்தின் துணைத்தலைவர் கவிஞர். கலி.பூங்குன்றன் அவர்களிடத்தில் கேட்டோம் .. எனது ஆசான் வளைகுடாபெரியார் செல்லபெருமாள் அய்யா அவர்களும் அதை வெகுவாக  பாராட்டினார் அப்போது பதிலளித்த பூங்குன்றனார். .. சரியானவர் கிடைக்கும் போது என்றபோது தகுதியானவர்கள்  இல்லையென்கிறீர்களா நிறைய பேரை அடையாளம்காண முடிகிறதே என்ற போது மழுப்பலான பதிலை தந்தார் .. அப்போது திருக்குறள் மாநாட்டிற்கு வருகை தந்த சென்னை பல்கலைக்கழக அரபுத்துறை பேராசிரியர் திருக்குறளை அரபுமொழியாக்கம் செய்தவருமான டாக்டர். ஜாஹீர்உசேன்
DrJahir Husain Jamia Madras அவர்களும் உடனிருந்தார்.. 
..
விடயத்திற்கு வருவோம் 
பெண்களின் முன்னேற்றம் ,உரிமை சமநீதி சமவாய்ப்பு என பேசி வரும் நாம் பெண்களுக்கான அதிகார வரம்பை ஏன் சுருக்கி வைத்திருக்கிறோம் ..பெரியாரை பேசுகிற நாம், பெரியாரை அடியொற்றி கொள்கைகளை வகுத்து பயணிக்கிற நாம் பெண்கள் அதிகாரத்திற்கு வருவதையோ மிகப்பெரிய பொறுப்பில் ஆளுமை செலுத்துவதையோ விரும்புவதில்லை  என்பது கசப்பான உண்மை ..
..
கனிமொழி 
எல்லா தகுதியும் திறமையும் ஆளுமை பண்பும் அரவணைத்து செல்லும் ஆற்றலும் கொண்டவர் ..
துணைச் செயலாளராக அல்ல பொதுச் செயலாளராகவே  வர முழுமையான  தகுதியுடையவர் .. காலம் கனியும் போது வருவார் எல்லாம் சரி .. வாய்ப்புகளை உருவாக்கி பெண்களை பொதுவாழ்வில்  சிறந்து விளக்குவோரை
உரிய முக்கியத்துவம் வழங்கி மின்னும் வைரங்களாய் ஜொலித்திட வகை செய்வோம் 
மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என இலக்கியத்தில் புகழ்ந்தால் மட்டும் போதுமா .. இயக்கத்தை, அரசை, நிர்வகிக்கும் நம்மை ஆளும் சிறப்பை, ஆளுமையை பறைச்சாற்ற வாய்ப்பை, வழங்கிட வேண்டாமா.
நிச்சயம் காலம் கனியும் 
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment