வணக்கம் சென்னை
நலமா ..
இவன் முடிப்பான் என்று நீங்கள் நம்பியது வீண் போகவில்லை ..
வெள்ளகாடாய் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்ததெல்லாம் இனி பழங்கதையாய் பேசுவீர் ..
"பெருமழைக்காலம் " இனி வசந்தத்தோடு இணைக்கப்படும்
நல்ல தலைவன் நமக்கு கிடைத்திருக்கிறார் .. ஓயாதுழைக்கும் தலைவனின் ஆட்சியில் சீர்மிகு சென்னை சிங்காரமாகிறது
..
கடந்த ஆட்சியின் அவலங்கள்
சரி செய்யவே பலகாலமாகும்.. ஆனால் இந்த போர்படைத்தலைவன் ஒவ்வொரு திட்டத்தையும் வல்லுநர்களை கொண்டு தீட்டி அதை "போர்கால" வேகத்தில் செய்துமுடிக்கும் திறமை ..
இப்படியொரு தலைவன் தமிழ்நாட்டிற்கு கிடைத்து நாம்பெற்ற பேறு .. பெருமழையில் சென்னை மூழ்கவிட்ட "பெருமாட்டி" ஏனோ நினைவிற்கு வருகிறார்.. இரவோடிரவாக செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து கரையோர குடிகளை மூழ்கடித்ததும் .. சென்னையை கடலோடு இணைத்தும் இறுமாப்போடு கதைத்ததும் நினைவிற்கு வருகிறது .. விடிய விடிய மழை வெள்ளகாடாகும் இன்று நம் பிழைப்பு போகும் என்றெண்ணி இருந்தவர்கள் விடிந்ததும் வடிந்ததை கண்டு வியந்து நிற்கிறார்.. அன்றாடங்காய்ச்சிகள்
பிழைப்பு நடக்கிறது .. சென்னை மக்களுக்கு இதுவரை கண்டிராத காட்சிகள் நாடே வியக்கிறது எம் செயல் "தலைவனின்" திறமை கண்டு ..
..
தமிழ்நாடே ..
இந்த தலைவனை கரத்தை விட்டுவிடாதே ..
இன்னும் இன்னும் சிறந்து உயர..
உழைப்பால் தமிழ்நாட்டை உயர்த்திடும் உன்னத தலைவனை நாம் கொண்டது
காலம் நமக்கு தந்த சிறந்த அருட்கொடை ..
தங்கதமிழ் நாடே
வணங்கி மகிழ்கிறது
வாழ்க! தலைவர் முதலமைச்சர்
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்
Chief Minister of Tamil Nadu
M. K. Stalin
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment