Saturday, October 22, 2022

எடப்பாடி தூத்துக்குடி துப்பாக்கி சூடு பின்னே பாஜகவும் ..
..
எடப்பாடி பழனிசாமி கோமாளி வேசத்தில் ஒரு கொலைக்காரன்.. 
இவரின் ஆரம்ப அரசியலே கொலையில் தொடங்கியது பங்காளி தகராறில் கொலை செய்துவிட்டு காட்டில் ஒளிந்து வாழ்ந்தவர் பின் அன்றைய அதிமுக அரசியல் பிரபலங்கள் ஈரோடு முத்துசாமியிடம் முறையிட பஞ்சாயத்து செய்யபட்டு வெளிவந்தவர் தொடர்ந்து  சின்னசின்ன ரௌடியிசம் செய்து வளர்ந்தவர் .. காலமும் நேரமும் அவரை முதல்வராக்க தமிழகம் இழந்ததுதான் அதிகம் ..
இதோ முன்னாள் ஆளுநர் எடப்பாடி அரசை துணைவேந்தர் பதவியை விலைபேசி விற்றதாக குற்றம் சொல்கிறார் இதை உடனே விசாரிக்க வேண்டும் .. 
..
தூத்துக்குடி துப்பாக்கி சூடு தமிழகத்தை உலுக்கிய சம்பவம் ..ஆனால் ஏனோ ஊடகம் பெரிய வெளிச்சம் வராமல் பார்த்துக்கொண்டது கார்ப்பரேட் பெரும் முதலாளிகளின் காலணியில் ஊடகங்கள் சென்ற பின் அறமிழந்து போனது ..  தொலைக்காட்சி பார்த்துதான் தெரிந்துக்கொண்டேன் என எடப்பாடி சொல்லும் போதே பின்னில் யார் இருக்கிறார்கள் என தெரியும் .. விசாரணை கமிஷன் அறிக்கையில் ஒவ்வொரு வினாடியும் தகவல் முதல்வருக்கு தெரிவிக்கபட்டதாக தலைமைச் செயலாளர் கிரிஜா மற்றும் டி ஜி.பி இருவரும் வாக்கு மூலம் கொடுத்திருக்கிறார்கள்  இப்போது யார் குற்றவாளி ..
ஆனால் பாஜக அண்ணாமலை எடப்பாடி மீது தவறில்லை என்கிறார் இதிலிருந்து விசாரணை பாஜக மேலிடத்திலும் நடத்தபடவேண்டும் .. அப்பாவி மக்களை கொன்று அரசியல் நடத்துவது பாஜகவின் அடிப்படை கோட்பாடு .. கலவரம் அதைவைத்து அரசியல் என்பது தான் அவர்களின் பாலபாடம் ..
..
தாசில்தார்கள் இடைநீக்கத்தோடு முடிவதல்ல.. விசாரணையை விரிவாக்கி எடப்பாடி உட்பட அன்றைய அரசின் உயரதிகாரிகள் வரை நீதிமன்றத்தில் நிறுத்தபடவேண்டும் .. மக்கள் தான் கல்லெறிந்து கலவரம் செய்தார்கள் என செவிவழி செய்தியை கேட்டு  உரத்த குரலில் பேசி நடித்த ரஜினியும் குற்றவாளியாக்கபட வேண்டும் ..இவர்களெல்லாம் கலவரத்தில் அரசியல் செய்கிற அற்பர்கள் .. உயிர்கள் இவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல .. போராட்டக்காரர்களை தீவிரவாதிகாளாக பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் மனநோயாளிகள் ..   
பாஜகவின் ஒத்தூதிகள் .. அரைகுறை அரசியலோடு மதத்தையும் சந்தர்ப்ப சூழலையும் கையிலெடுத்து குளிர்காய நினைக்கும் கேடுகெட்டவர்கள் 
..
இந்த துப்பாக்கி சூட்டை நியாயபடுத்தும்  பாஜகவும் சந்தேகநிழலில் சேர்க்கபடவேண்டும் ஒன்றியத்தை ஆள்வோரின் வழிகாட்டல் இருந்ததா வழக்கம் போல் பின்நின்று இயக்கினார்களா என்பதை மக்கள் அறிய வேண்டியது அவசியம் .. மக்களை கேள்வி கேட்க யாருமில்லாத மிருங்களை போல சுட்டுக்கொல்லும் தைரியம் எங்கிருந்து வந்ததென மக்கள் முன் சொல்வது அரசின் கடமை அதை செய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது
..
விசாரணை நீதயாக நடந்து இவர்களெல்லாம் தண்டனை பெற வேண்டும் ..
தூத்துக்குடி துப்பாக்கி சூடு விடயத்தில் எடப்பாடி மீது விசாரணை நடத்துவது குறித்து மாண்பிமை முதலமைச்சர்
Chief Minister of Tamil Nadu  
M. K. Stalin 
முடிவெடுப்பார் 
என மானமிகு Kanimozhi Karunanidhi  அவர்கள் சொல்லியிருக்கிறார்

#ஒருத்தனையும்விடகூடாது..
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment