Thursday, December 1, 2022

இனப் பகைவர்கள் அரசியல் எதிரிகள் வஞ்சக சூழ்ச்சியால் வலை விரிக்க முயற்சிக்கின்றனர் 
பகை வென்று பணி தொடர அணிவகுப்போம்.. கொள்கையும் சாதனைகளும் நமக்கு வாளும் கேடயமும் ஆகும், அதை குக்கிராமம் வரை கொண்டு  சேர்க்கவேண்டும் 
மாண்பமை முதலமைச்சர் 
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்
..
அரசியல் ரீதியாக எதிர்க்க முடியாதவர்கள் பொய் பிரச்சாரங்களிலும் ஈடுபடுகிறார்கள் .. நாகரீகமற்ற உரையாடல்கள் பேசவே நா கூசும் மொழிநடையில் கொஞ்சம் கூட வெட்கபடாமல் பேசுகிறார்கள் .. எதிலும் உண்மை இல்லை என்றாலும் சிலமணிநேரத்தில் அது அவிழ்ந்துவிடுமென அறிந்தும் அம்மணமாய் நிற்க வருமென தெரிந்தும் அதுவரை பரபரப்பை தருமே என விசமத்தை பரப்பிக்கொண்டே இருக்கிறார்கள் 
இனப் பகைவர் வலையில் சிக்குகிறவர்கள், சுயமிழந்தவர்கள்  
..
சோம்பேறிகள்  குற்றபின்னணி கொண்டவர்கள் சமூகத்தால் வெறுக்கபடுபவர்கள், கொலை கொள்ளை ரகளை என முத்திரையோடு திரியும் ஆபத்தானவர்கள் .. அடுத்தவரை ஏமாற்றி பிழைக்கும் எத்தர்கள் 
"சூது" தர்மமென்போர், புரட்டை புராணமென மெச்சுவோர், மதத்தை சாதியை தலையில் ஏற்றி வெறிகொண்டலையும் மூடர்கள்  உறவின்முறையை கூட கேவலமாக்கும் கயவர்கள் மொத்தத்தில் ஆபத்தான, அருவருக்கதக்கவர்களின் கூடாரமது ..
..
நம் தலைவர் மிக தெளிவாக பகைவர்கள் வஞ்சகவலை விரிக்கிறார்கள் சிலர் அதில் விழகூடும், நம் கொள்கைகளை சாதனைகளை ஊர் ஊராய் எடுத்துசென்று மக்களிடையே விளக்கிட வேண்டும் .. வரும் ஆபத்தை முன்கூட்டியே  எச்சரிப்பதும் தடுப்பதும் நம்கடமையென சொல்வதில் இருந்தே நம் கடமையை அவசியத்தை உணர்த்தும் அதேவேளை அலட்சியமாக இருந்துவிட கூடாதென அறிவுறுத்தியிருக்கிறார் ..
..
இந்திய ஒன்றியம் கையாளாகாதவர்களின் கையில் சிக்கி சீரழிகிறது .. மதவெறியை மக்கள் மூளையில் ஏற்றி சாதீய உணர்வைவூட்டி சனாதனத்தை கையிலேந்தி காட்டுதர்பார் நடத்துகிறது .. இதோ ஒரு சான்று 
வயதானோர் மூத்த குடிமக்களுக்கு ரயில் பயண சலுகையை நிறுத்தியதில் ₹1500 கோடி மிச்சம் என தகவல் அறியும் உரிமை சட்டம் சொல்கிறது .. எவ்வளவு அட்டூழியமான செயல் .. இதுதான் பாசிசம்.. இவர்கள் கார்ப்பரேட்டுகளின் கடனை தள்ளுபடி செய்ய மக்களின் வயிற்றில் அடிப்பார்கள்.. மக்களை சுரண்டி மக்களின் பொதுசொத்துகளை தனியாருக்கு தார்வார்த்து கேட்டால் பரம்பரை சொத்தையா விற்றேன் என்பார்கள் ஆபத்தான இவர்களின் ஆட்டத்திற்கு முடிவுகட்ட ஸ்டாலின் தேவைபடுகிறார் ..
..
பாஜகவில் நாகரீக அரசியல் இல்லை என்பது மட்டுமல்ல கூச்சமே இல்லாமல் தெரிந்தே பொய்யை சொல்வதையும் அரசியல் பாலபாடமே தெரியாதவன் கூட மூத்த அரசியல் தலைவர்களை கேவலமாக பேசுவதையோ ,கண்டுகொள்ளாதது மட்டுமல்லாமல் அவர்களின் தவறுகளை அவரின் படுகேவலமான, உண்மைக்கு புறப்பான செயல்களை மூடிமறைப்பதுமாக ஜனநாயகத்தின்  நான்காவது தூண் ஊடகம் செயல்படுவதை பார்க்கும் போது  அவசரகாலத்தில் ஊர்ந்து கிடந்தீர்கள் என்ற அத்வானியின் குரல் ஞாபகம் வருகிறது இப்போது வீழ்ந்து வணங்குகிறார்கள் .. ஊடக அறமற்று போய்விற்றது .. சில ஊடகங்கள்  காழ்ப்புணர்ச்சியை கக்கினாலும் சிலநேரம் நேர்மையாக இருப்பதாக காட்டிக்கொண்டிருந்தது இப்போது அதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது ..கார்ப்பரேட் முதலாளிகளின் கையில் ஊடகங்கள்.. சமூகவலைதளங்களை கூட விலைபேசும்,கட்டுபடுத்தும் அயோக்கியத்தனம்  இவையனைத்தையும் தாண்டி ஜனநாயகம் மலருமென நம்புகிறோமே அதில் தான் இந்திய அரசியலின் நம்பிக்கை இருக்கிறது 
..
மக்கள் தன்னெழுச்சியாய் பாசிச ஆட்சியாளர்கள்,மதவெறி கூட்டத்தின் மீது கோபமும் வரும் வரை இந்த பாசிச கோமாளிகளின் கூத்து தொடரதான் செய்யும் ..  இந்திய மக்கள் வெகுண்டெழுந்து  புதியதொரு ஜனநாயக பாதையை சமைக்கும் .. அதன் தொடக்கம் தெற்கிலிருந்தே தொடங்கும்..
திராவிடம் அதை செய்யும் ஏனெனில் மக்களை சமமாக மதிக்கும் பண்பும், சமநீதியாய் எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திட வேண்டும் பசித்தவனுக்கு முதலில் கிடைப்பதே நீதி பின்தங்கியவர்களை படிகளில் ஏற்றுவதே திராவிட கருத்தியல் இதுவே இன்றைய இந்தியாவிற்கு தேவை .. 
பின்நோக்கி பொய்பேசி புரட்டுகளால் தேசத்தை இழுத்துசெல்பவர்களை விரட்டி 
பகுத்தறிவோடு சமூகத்தின் அடித்தளமக்களையும் அணைத்து அழைத்துச்செல்லும் திராவிடமே இன்றைய தேவை ..
அனைவருக்கும்கல்வி வேலைவாய்ப்பு சமமாக  கிடைத்திட சமச்சீரான கல்வியை தந்த திராவிடமே இந்தியாவிற்கு இன்றைய தேவை .. கொடுவாளும் தோக்கும், அல்ல தீர்வு கல்வி அறிவும் பகுத்துண்டு வாழும் பண்பு , வேற்றுமையில்  ஒற்றுமையுமே இன்றைய தேவை ..
திராவிட சித்தாந்தமே அதற்கான தீர்வு ..
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment