Sunday, November 6, 2022

ஆர்எஸ்எஸ் பின்னணியே கலவரத்தை மையமாக கொண்டது .. நோக்கம் நாட்டை பதற்றமாக வைத்திருப்பதும் அதை வைத்து ஆரியர்கள் பலன் காண்பதும் மட்டுமே .. அவர்கள் பேசும் தேச நலன் என்பது பார்பனியர் நலன்  அவர்கள் சொல்லும் தேசபற்று பார்பனீயத்தை முன்னுறுத்துவது .. ஈராயிரமாண்டாய் மெல்ல மெல்ல இந்திய ஒன்றியத்தின் பல்வேறு குழுக்களின் பண்பாட்டில் ஊடுறுவி  மெல்ல அதை சிதைத்து பார்ப்பனீய "கலாச்சாரத்தை " புகுத்தி அதை இந்திய கலாச்சாரமாக (பண்பாடு) நிலைநிறுத்தியிருப்பது தான்  ..
அது சிதறும் என நிலை வரும் போது இதுவரை கட்டிய கோட்டை அடித்தளமே ஆட்டம்காணும் எனும் போது பதறுதல் இயல்பு அதை தான் சமீபகாலமாக காணமுடிகிறது 
..
நாடெங்கும் குறிப்பாக வடமாநிலங்களில் கூட எதிர்ப்பு பலப்படுகிறது .. இதுவரை மண்ணின் மைந்தர்களை அடிமைபடுத்தியதை உணர்ந்து இதோ தமிழ்நாட்டில் ஏற்பட்ட விழிப்புணர்வு ஏன் இதுவரை இங்கே ஏற்படாமல் போனது.. கடவுள் மதம் சாதி என்ற பெயரில் இதுவரை இவர்கள் சொன்ன "மாயை " கலைந்து மெல்ல வெளிச்சம் பரட தொடங்கியதும் அலறல் சத்தம் அதிகம் கேட்கிறது ..
அதிகாரத்தில் இருந்தும் அனைத்து  அரசு உயர்பதவிகளிலிருந்தும் நீதித்துறை ஏறக்குறைய தங்கள் கட்டுபாட்டிலிருந்தும் தங்கள் எண்ணம் ஈடேறவில்லை என கதறுகிறார்கள் .. 
..
தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு கட்டுபாடுகள் விதித்து சில கேள்விகளை இந்திய ஒன்றியத்தின் பார்வைக்கு வைத்திருக்கிறது திராவிட அரசு .. யார் நீங்கள் ,முகவரி எது, வருபவர்களின் அடையாள அட்டை  இலக்கம் என்ன..
என கேள்வி எழுப்பி
அடையாளம் இல்லாத 
"கலவரகாரர்கள்" என தேசத்திற்கு அடையாளம் காட்டி முகவரி இல்லாதோரின் முகத்திரையை கிழித்து இதோ இவர்கள் தேசத்தின் பயங்கரவாதிகள் ஒற்றுமைக்கு ஊறுவிளைவிப்பவர்கள் என எச்சரித்திருக்கிறது.
..
ஆர்எஸ்எஸ் பதிவு செய்யபடாத இயக்கம் உறுப்பினர்கள் சேர்கை விபரம் அவர்கள் இணையவழி சேர்க்கையில் கூட இல்லை அந்தந்த பகுதி பொறுப்பாளர்கள் சந்தித்து செயல்படலாம் .. இங்கே குள்ளமணி அவர்களுக்கு கூட ரசிகர்மன்றம் அதுவும் பதிவு செய்யபட்டிருக்கும் இந்திய அரசியலை தீர்மானிக்கும் இவர்கள் தங்கள் இயக்கத்தை/தங்களை பதிவு செய்யமாட்டார்கள் 
கலவரமானால் யாரிடம் இழப்பு கேட்பதென்ற கேள்விக்கு பதில் இல்லை ..ஊடகங்களில் பகிரங்கமாக பேசுவார்கள் சட்டத்தின் முன் "ஜகா" வாங்குவார்கள் .. கலவரகாரர்களுக்கு எதற்கு முகவரி 
..
திராவிட இயக்கம்/கட்சி எப்போதும் சட்டத்தின் துணைக் கொண்டே வென்றிருக்கிறது .. சட்டத்தை திருத்தியுமிருக்கிறது .. ஜனநாயகத்தின்  அடித்தளத்தில் மிக கம்பீரமாக உண்மையை கொண்டும் அறிவை கொண்டு கட்டமைக்கபட்டது.. இங்கே போலித்தனமில்லை  அவதூறை பரப்பினால் கூட அதை சட்டத்தின் முன் நின்று வென்ற வரலாறே உண்டு ..   திமுக சட்டத்துறை மிக வலுவானது திறமையாக செயல்படும்..  ஊடகங்கள் நிர்வாகத்தில் புலி/ திறமைசாலி என போற்றி புகழ்ந்த ஜெயலலிதாவையே "களி" திங்க வைத்தவர்கள் .. நீண்ட சட்டபோராட்டத்தில் கடைசியில் முதல்வராக போய் ஜெயிலுக்கு போன வரலாறு நாடறிந்தது .. 
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்
ஆர்எஸ்எஸ் எனும் பிம்பத்தை தன் சட்டத்துறையை கொண்டு கிழித்தெறிந்துவிட்டார் 
ஆம் திமுக வழக்கறிஞர் அணியின் திறமை  சட்டஅறிவு, திறமையான செயல்பாடு கொண்டு மதவெறியர்களின் நோக்கத்தை இல்லாதாக்கியிருக்கிறார் 
எச்.ராசா மிக துள்ளியமாக  கணித்தது சரிதான் 
Stalin is more dangerous than karunanidhi
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் 👏🔥❤️
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment