எங்கள்_பேராசான்_பெரியார் ..
கல்வி.. குறித்து இப்படிதான் சொன்னார்
// தமிழ்நாட்டுக்கு சரித்திரமே இல்லை இந்து தேச சரித்திரம் என்பதை எடுத்துக்கொண்டால் இராமாயண பாரதமும் அசோகன் மௌரியன் ஆட்சியும் முஸ்லிம் வெள்ளையர் ஆட்சியும் விளக்கப்படுமேயொழிய சேர சோழ பாண்டியரைப்பற்றியோ திராவிடர்கள் பற்றியோ திராவிடத் தமிழ் என்கிற ஆட்சி பற்றியோ காண்பது அரிதாகும் அவை எந்தவகுப்பிற்கும் பாடமாக இல்லை அப்படி எங்காவது இருந்தாலும் அது வெறும் பித்தலாட்டமாகவும் மோசடியாகவும் காணபடலாமே தவிர யோக்கியமாய் சரித்திர ஆதாரத்தோடு காணபது அரிது..
..
ஆகவே நமது பிள்ளைகள் நம்மைப்பற்றித் தெரிந்துக்கொள்ள இடமும் இல்லை.. என்றார்..
..
ஆம்.. எவ்வளவு உண்மை..
இவையெல்லாம் புனையபட்டதை நமக்கு போதித்திருக்கிறார்கள்..
உண்மை மீறி வெளிச்சத்திற்கு வரும் போது #கீழடியை ..
மண்ணைக்கொண்டு மூடி விடுவார்கள்..
..
ஆம் #தஸ்யூக்கள் அதாவது
திராவிடர்கள் பட்டணங்களில் ஊர்களிலும் மரத்தினால் கட்டப்பெற்ற மாடமாளிகைகளிலும் வாழ்ந்தார்கள் ரதங்கள் குதிரைகள் ஆடுமாடுகள் என வாழ்ந்தது கண்டு ஆரியர் பொறாமை கொண்டு திராவிட நகரங்களை கொள்ளையடிக்க நினைத்ததாக #யஷூர் வேதத்திலேயே உள்ளது..
..
வரலாற்றை மண் கொண்டு மூடலாம் ..புராணம் வேதமென மத நம்பிக்கையை சொல்லி மனிதர்களை கட்டுபடுத்தலாம் ஆனால் காலம் உண்மையை வெகுநாட்கள் புதைத்திருக்காது
ஒரு நாள் வெளிவரும் வந்தே தீரும்..
..
மாபா.பாண்டியராஜன் தொல்பொருள் அமைச்சர் பதவியேற்கும் போதே
தெரியும் கீழடியை புதைத்துவிடுவார்களென்று...
மீண்டும் நாம் அதிகாரத்திற்கு வரும் போது
கீழடி மட்டுமல்ல.. வரலாற்று திரிபுகளையெல்லாம் சரிச்செய்ய வேண்டும் என சொன்னோம் அதை தான் திராவிட மாடல் ஆட்சி செய்து வருகிறது..
..
தென்னக மக்களின் வாழ்வியலை பண்பாட்டை கவனித்தாலே போதும் அவர்கள் மிக பெரிய நாகரீகத்திற்கு சொந்தகாரரன் என்பதும்.. கடல் அரிப்பில் சிதைந்து கடலுக்கடியில் போனதென்ற உண்மைகளை வெளிக்கொண்டு வந்தால்..அவனின் தொன்மை கிடப்பதும் புரியும்..
நிச்சயம் ஒரு நாள் வெளிபடும் திராவிடனின் தொன்மையும்.. அவனே உலகின் மூத்தவன் என்ற வரலாறும்.. இருள் கிழித்து கதிரவனின் ஒளி வந்தே தீரும்..
புனை சுருட்டுக்கள் என மகாபாரத்தை சொன்னவுடன் குதிப்பவர்கள் நம் பெருமை வெளிவருவதை கண்டு அதெல்லாம் இந்து அடையாளமாக மாற்ற முடியாமல் கதறுபவர்கள் .. பண்டு செய்த நரித்தனங்களை இப்போது செய்ய முடியாமல் ராஜாக்களை அடிமையாக்கி திணித்த அடையாளங்கள் புனைவுகள் ஒவ்வொன்றாய் கிழிந்து தொங்க தொடங்கியதும் கார்டுவெல் என பதறுவது தெரிகிறது .. திருவள்ளுவரை சாயம்பூச பார்த்து முடியாமல் ஆன்மீக அடையாளமாக பிதற்றுவதெல்லாம் இங்கே வேகாது காரணம் பகுத்தறிவின் சுடரொளியில் தமிழ்நாடு விழித்திருக்கிறது.. பாவம் ராசாக்கள் அலறதான் செய்வார்கள் ..
..
#தமிழன்_மூத்தகுடி ..
..
ஆலஞ்சியார்
அண்ணாவை முட்டாள் என்கிறானே பத்ரி என கோவபடுகிறவர்களுக்கு பாப்பான் படிப்பாளிதான் அறிவாளி கிடையாது என்பார் பெரியார்
புராணத்தை நம்புகிறவன்
புரோகிதம் செய்கிறவனுக்கெல்லாம் அறிவாளிகள் கண்டால் கோபம் தான் வரும் .. திராவிட இயக்கம் அதிகாரத்திற்கு வரும்வரை அவாள்கள் தான் தமிழர் என நம்பவைத்தார்கள் கடைசியில் ஆரியமாயை தந்து முகத்தை கிழித்தார் ..
No comments:
Post a Comment