Thursday, September 29, 2022

அரசியல் செய்வது எங்களுக்கு பழகிப்போன செயல் .. நீங்கள் ஆரம்பபள்ளியில் எழுத்துகூட்டி படிக்க தொடங்குகிறீர் .. நாங்கள் பேரறிஞரிடம் பாடம் பயின்று, முத்தமிழறிஞரின் கைப்பிடித்து வளர்ந்தவர்கள் ..
..
ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தடை கூடவே விசிக அமைதி பேரணிக்கும் .. எச்.ராசா சொன்னது தான்  #StalinIsMoreDangerous 🔥..
இப்போது அல்ல முன்பும் இப்படிதான் பதறினார்கள் .. கருணாநிதியிடம் ஜாக்கிரதையாக இருங்கள் என்றார் பார்பனர்கள் ராஜதந்திரி என கொண்டாடிய ராஜகோபால் ..
ஆனால் அரசியல் தெளிவற்ற "சமுதாய" அலப்பறைகள் ஸ்டாலினை வாய்க்கு வந்தபடி விமர்சித்து அரிப்பை தீர்த்துக்கொண்டார்கள் .. உண்மையில் இவர்களிடம் (முஸ்லீம்லீக் தவிர்த்து எல்லா அமைப்புகளிடம்) சமுதாயம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் ,புகழ் போதையும் பணமும்,அதிகார ஆசையும் சமூகம் மிகப்பெரிய பின்னடைவை சந்திக்க காரணமானவர்கள் .. இஸ்லாமிய நெறிகளின் படியும் இல்லை கோட்பாடும் புரியவில்லை 
ஒற்றுமை எனும் கயிற்றை பலமாக பற்றி பிடித்துக்கொள்ளுங்கள் .. யாருக்கோ சொல்லபட்டது போல நகர்கிறார்கள் ..
..
மற்றொரு விடயம் CNN NDWS18 
ஊடகங்களின் சார்பில் சென்னை – டவுன் ஹாலில் நடைபெற்று வரும் கருத்தரங்கில் நேற்று 'திராவிட மாடல் என்றால் என்ன என்பதை மிக தெளிவாக விளக்கினார்  மாண்பிமை தமிழ்நாடு முதலமைச்சர் 
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்

நூறு ஆண்டுகளுக்கு முன் அனைத்து சமூக மக்களும் கல்வி – வேலைவாய்ப்பில் பெற்றிருந்த நிலையையும், இன்று அடைந்துள்ள வளர்ச்சியையும் ஒப்பிட்டுப் பார்த்தால் திராவிட மாடல் சிந்தனையின் வெற்றி தெரியவரும். வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது எனும் ஒரு காலம் இருந்தது. ஆனால் இன்று வடக்கை விட தெற்கு பல்வேறு துறைகளில் முன்னேறி இருக்கிறது. இதுதான் திராவிட சிந்தனைகளின் வெற்றி!..

ஏற்றுமதியை கணக்கிடுவது வேறு மாடல்; மக்களின் ஏற்றத்துக்கு வித்திடுவது திராவிட மாடல்!
இறக்குமதியை கணக்கிடுவது வேறு மாடல்; இரக்கச் சிந்தனையோடு திட்டங்கள் தீட்டுவது திராவிட மாடல்!
ஒற்றை சிந்தனைக் கொண்டது வேறு மாடல்; பரந்த ஒருமைச் சிந்தனையைக் கொண்டது திராவிட மாடல்! என்றார் 
..
இது சிறப்பென்னவென்றால்
இந்தியஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், “தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கு என்ன காரணம் என்பதை இங்கு பிறந்தவர் என்ற உணர்வுடனும், #மனசாட்சியோடும் கூறுங்கள்”, என நெறியாளர் கேள்வி எழுப்பினார்..
 தமிழ்நாடு 1960ஆம் ஆண்டுக்குப் பிறகு கல்வியறிவு – தொழில்சார் கொள்கை - ஆங்கில மொழியறிவு ஆகியவற்றில் மிகுந்த கவனம் செலுத்தி, தொழில்நுட்பத் துறை மற்றும் சேவைத்துறையில் மிகவும் முன்னேறியுள்ளது.

தமிழ்நாட்டில் ஏராளமான தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டிருக்கும் அதே நேரத்தில், விவசாயமும் பெருமளவு வளர்ச்சி பெற்றுள்ளது.
என்று தெரிவித்தார்..
..
எல்லா நேரமும் பொய் சொல்லிக்கொண்டிருக்க முடியாது என நிர்மலா அறிவார் .. ஏனெனில் அங்கே கேள்வியை எழுப்புகிறர் அனைத்து தரவுகளையும் கையில் வைத்திருக்கிறார் ஒட்டுமொத்தமாக மானம் கப்பலேறிவிடும் என்பதை அறிந்து 60 என துவங்குகிறார் .. 
..
 தளபதி ஸ்டாலின் ஆட்சி பொறுப்பிற்கு வந்ததற்கு பிறகு நிறைய இடையூறுகள், கவர்னர் முதல் தேடபடும் "நல்லவர்கள்" வரை எதையாவது உளறுவதும் அதை ஊடகங்கள் பெரிதாக ஊதி பெருக்குவதும் கடைசியில் ஊசியில் மாட்டிய பலூன் போல ஆவதும் வாடிக்கையாகிவிட்டது ..
பாஜக தலைவர் நட்டா அடிப்படை அறிவு கூட இல்லாதவராக இருக்கிறார்.. PFI தடை செய்தாகிவிட்டது இனி டாலர் மதிப்பு உயருமாம் .. முன்பெல்லாம் விபரம் தெரிந்த "முரளிமனோகர் ஜோஷி" அத்வானி வாஜ்பாய் போன்றவர்கள் பாஜகவில் இருந்தார்கள் அவர்கள் மதத்தை பிடித்துக்கொண்டு உயர எழும்ப நினைத்தார்கள் .. சில நேரமெங்கிலும் விபரமாக பேசினார்கள் இப்போது  எந்த கல்லூரியில் படித்தார் என தெரியாதவர் முதன்மை அமைச்சர் 
வரலாறு முழுக்க பொய்களால் கட்டமைக்கபடும் மாயை .. அதிகாரத்தை  கைப்பற்ற எந்தநிலைக்கும் போவோம் .. நீதிமன்றங்களும்  தனிஅதிகாரம் கொண்ட புலனாய்வு அமைப்புகளும், தேர்தல் ஆணையமும் போதும் நாடு எக்கேடு கெட்டால் என்ன என்கிற நிலை .. 
..
எல்லா அமைப்புகளுக்கும் தடை என்பதலிருந்து சட்டத்தின்/நீதிமன்றத்தின் மூலம் ஊர்வலம் நடத்தலாம் என திட்டமிட்ட பாசிச சூழ்ச்சியை "திருமா" எனும் காயை வைத்து மிக சரியாக தடுப்பாட்டம் ஆடியிருக்கிறார் ..சர்வதேச செஸ் ஆட்டத்தை நடத்திகாட்டியவர் .. மீண்டும் குறுக்குவழியில் யோசித்தால் "முன் எச்சரிக்கை" நடவடிக்கை வரும் ..
நாங்கள் இந்திய ஒன்றியத்திற்கு எப்படி கட்சி நடத்தவேண்டும் என சொல்லி தந்தவர்கள் .. கரை வேட்டி, தேர்தல் அறிக்கை, என இந்தியா அதுவரை அறிந்திராதவைகளை அறிமுகம் செய்தவர்கள் .. ஜனநாயகத்தோடு கட்சி நடத்தும் இந்தியாவில் ஒரே கட்சி உட்கட்சி தேர்தல் முதல் தலைவர் தேர்தல் வரை ஜனநாயகமாய் திகழ்பவர்கள் .. முன்பு தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் இந்திய ஒன்றியத்தில் தேர்தலை சந்திக்க தகுதியுடைய ஒரே கட்சி திமுக தான் என்றார் காரணம் நியமனங்களில் கட்சி நடத்துவது கூட தேர்தல் விதிமுறைகளுக்கு  எதிரானது ..
..
திமுக எதை செய்தாலும் அதில் பொருள் பொதிந்திருக்கும் அவசரகாரர்களுக்கு இது புரியாது..
..
ஆலஞ்சியார்

No comments:

Post a Comment