எண்ணி எண்ணி வியக்கிறேன் ..
..
இசை எனும் மந்திரகோலால் மயக்கும் வித்தைகாரன்.. எம் மண்ணின் இசையால் ஆரிய கூட்டத்தையே அடிபணிய வைத்தவன் .. பார்பனர்களிடமிருந்த திரை இசையை இவன் கையிலெடுத்த போதுதான் தமிழ் மணம் வீசியது ..
வயல்காட்டில் என் "முத்தச்சி" பாடியதை எல்லாம் வடிவான இசையில் தந்து எம்மை வளைய வைத்தவன் .. இவன் இசைக்காக காத்திருந்தோர் பட்டியலில் "மேட்டுக்குடி" வாசம் வீச அது தொற்றிக்கொண்டது ..
தலையில் ஏற்றிய கர்வம் மெல்ல அரிக்க தொடங்கியதை அறியாமல் போனது தான் விந்தை
..
என்பதுகளில் இசை நர்த்தனம் பரிந்து தன்னை சுற்றி தனி சாம்ராஜ்யமே கட்டியவர்.. இவர் திரையிசையில் காட்டிய மாயஜாலங்கள் கண்டு "இசைவித்தகன் " என சொல்லி திரிந்தவரெல்லாம் ஒருகணம் ஆடிப்போனார்கள் .. எத்தனை எத்தனை ரீங்காரங்கள் இன்னமும்
செவி வழியே இறங்கி மனதை துளைத்து என்னவோ செய்கிறது
துக்கமோ, மகிழ்ச்சியோ, பரிதவிப்போ, மனம் லேசாக இந்த ராசாவை தேடியதெல்லாம் தமிழன் வாழ்வோடு கலந்த விடயம் ..
..
அவரின் தனிப்பட்ட பக்தி மதம் கொள்கை நமக்கு தேவையில்லை ஆனால் அகங்காரம் அழிவின் தொடக்கம் என்பதை அறியாமல் போனதும் தொடர்ந்து "அரசியல்" எனும் இவர் அறியாத பாடத்தில் வகுப்பெடுத்ததும் மதம் தலைக்கேறி இசைந்து நின்றதும் வீழ்ச்சியை நோக்கியதாக இருந்தது ..
..
துபாய் இவரது இசை நிகழ்ச்சி இரண்டுமுறை தேதி மாற்றம் செய்யபட்டு கடைசியில் கைவிடபடுவதாக செய்திகள் வருகின்றன் .. இவரது சமீபத்திய அரசியல் மறைமுக"அரங்கேற்றம் "
பலருக்கு உகந்ததாக இல்லாமல் கோபத்திற்கு ஆளானதும் பாசிசத்தின் பாசபிடியில் மூச்சு திணறுவதும் சகிக்க முடியாத இசையானது ..
..
இசைக்க தெரிந்தவருக்கு மக்கள் மனதோடு இசைந்து பழக தெரியவில்லை ..
மக்களிசையை தந்தவன் ..
மன்னருக்கு புகழிசை பாட பாவமாக தோன்றுகிறது.. எம் மண்ணின் இசை வேந்தன் தான்
"இந்துஸ்தானி" யில் மயங்கி ஜால்ரா இசைக்கிறார்
..
புதுராகம் படைத்தவன் ..
அதுவொரு கனாகாலம் ..
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment