முதலில் பெட்ரோல் குண்டு வீசியது பாஜகவினராக தான் இருக்குமென பெரும்பாலானோர் நம்பினர் .. அவர்கள் வேலைதான் இதற்கு நிறைய சம்பவங்களில் தங்கள் உடமைகளை எரித்து நாடகமாடியவர்கள் என்பதால் பொது சமூகம் பாஜகவின் செயலாக இருக்குமென நம்பியது .. வரும் செய்திகளும் கைதும் SDPI சார்ந்த முஸ்லிம் இளைஞர்கள் இதில் சம்பந்தபட்டிருப்பது தெரிகிறது சும்மாவே முஸ்லிம் மீது "தீவிர"மனப்பான்மை கொண்டிருப்பவர்கள் இப்போது இதோ பார் என கேள்வி எழுப்புகிறார்கள்
..
திமுக வந்தாலே முஸ்லிம்கள் ஆயுதம் எடுப்பார்கள் குண்டு வீசுவார்கள், ஜெயா இருந்தபோது ஒன்பது துவாரங்களையும் பொத்திக்கொண்டிருப்பார்களென பேச தொடங்கியிருக்கிறார்கள் .. திமுக யாருக்கும் அணுசரனையாக இல்லை என்பதும் சட்டத்தின் நிழலில் நின்று எல்லோருக்கும் பாதுகாப்பு அளிப்பதும் தவறிழைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதும் என தன் கடமையை செய்கிறது .. ஆனால்
பாஜக வந்துவிடும் என பயமுறுத்தி எங்களை திமுகவிற்கு வாக்களிக்க வைத்தீர்களென சிலர் அறியாமையில் உளறுவதும் கேட்க முடிகிறது ..
..
இஸ்லாமிய இயக்கங்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொள்ளவேண்டும் .. பல பிரிவுகளாக இருப்பதும் எல்லாவற்றிக்கும் வன்முறை தீர்வாகும் என முட்டாள்தனமாக நம்புவதும் சங்கடத்தை தரும்.. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும் ..யாரோடு சேர்கிறார்கள் எங்கே சுற்றுகிறார்கள் .. யாரோடு சகவாசம் என அறிந்து அவர்களை நல்வழிபடுத்த வேண்டும் ..
இல்லையெனில் பிள்ளைகள் சிறையிலும் குடும்பம் நீதிமன்ற படிக்கட்டுகளில் நிற்கவேண்டி வரும் .. நான்கு பேரின் செயல் மொத்த இஸ்லாமியர்களுக்கும் கெட்ட பெயரை பெற்று தரும் ..
அரசியல் வேண்டாம் என்பதல்ல.. அரசியலை அறிந்து ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையோடு சரியான வழியில் மக்களின் ஆதரவோடு ஒற்றுமையாக அரசை எதிர்த்தோ ஆதரித்தோ அரசியல் செய்ய பழகுங்கள் .. அரசியல் தெளிவு .. நம் சமுதாயம் எதில் பின்தங்கியிருக்கிறது.. கல்வியின் அவசியம் இது போன்ற சமுதாய முன்னேற்றத்திற்கான பணிகளில் கவனம் செலுத்தவேண்டும் ..
..
பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு மற்றும் பஸ்கண்ணாடி உடைத்த வழக்கு என ஆறு வழக்குகளில் இரண்டில் "இருவர்" எஸ்டிபிஐ கட்சி பொறுப்பில் உள்ளவர்கள் கைதாகியிருக்கிறார்கள் .. பெட்ரோல் குண்டுதானே அதிக சேதாரமில்லை என நினைக்கவேண்டாம் .. சேதாரம் என்னவோ ஒட்டுமொத்த சமுதாயத்திற்கு .. இரண்டு முட்டாள்களின் செயல் .. இது தொடர்ந்தால் சமுதாயமே "குற்றப் பரம்பரை" கூட்டில் நிறுத்தப்படும்
..
அரசியல் தேவை அது ஒன்றுபட்ட சமூகநலன் சார்ந்ததாக இருந்தல் வேண்டும் ..எடுத்தேன் கவிழ்த்தேன் என்றல்ல.. எப்போது எப்படி பகைவரை வீழ்த்துவதென அறிந்து யார் வந்தால் நன்மை பயக்குமென அறிந்து யார் வரகூடாதென தெளிவாக உணர்ந்து ஜனநாயக முறையில் " வாக்கு" எனும் பெரும் ஆயுதம் கொண்டு வீழ்த்தவேண்டுமே தவிர .. வன்முறையில் அல்ல..
..
புரிந்தால் நல்லது
..
ஆலஞ்சியார்
No comments:
Post a Comment