Saturday, September 30, 2017
மாற்றான் தோட்டமாயினும்
மௌனமாய் கடந்து போவோமென்றிருந்தேன்..
நண்பர்கள் விடுவதாயில்லை.. திருமிகு.ஸ்டாலின் எப்படி கலந்துக்கொள்ளலாம்
எச்.ராசா மணிவிழாவில் என கேள்விகள்.. கொள்கை பிறழ் என்றெல்லாம் உள்ளடப்பில் கதைத்தார்கள் .. பதிலளிக்கவேண்டியது கடமையாகிறது..
..
தளபதியார் கொள்கையை விட்டுக்கொடுத்தாரா ..
ஏற்கனவே எஸ்.வி.சேகர் விடயத்தில் கூட மிக தெளிவாக நட்பு என்பது வேறு ஏற்றுக்கொண்ட
திராவிட இயக்க கொள்கையை விட்டுக்கொடுக்கமுடியாதென மிக தெளிவாக சொல்லியிருக்கிறார்.. தனிநபரின் சொந்த விழாக்களில் கலந்துக்கொள்வதால் அனுசரித்து போவதாகவோ அல்லது அவர்களின் தயவை நாடுவதாகவோ பொருள் அல்ல..
ராசா சாரணர் தேர்தலில் போட்டியிடுகிறாரென்று அறிந்தவுடன் மிக கடுமையாக விமர்சித்தார்.. சாரணியர் தேர்தலை அரசியலாக்குவதாகவும் அதை காவிமயமாக்கி .. இளம் மாணவர்கள் நெஞ்சில் விசத்தை விதைக்க முயலுவதாகவும் .. இதற்கு முதல்வரும் அமைச்ர்களும் துணைபோவதாக கடுமையாக எச்சரித்தார் அதனால்தான் ராசாவின் தோல்வியை நாமெல்லாம் கொண்டாடினோம்.. கல்வியாளர்கள்.. கல்வித்துறை அதிகாரிகளென 200 மேற்பட்டவர்கள் வாக்குரிமை பெற்றவர்கள்.. அமைச்சரே நேரடியாக தொலைப்பேசியில் அழைத்து ராசாவிற்கு வாக்களிக்க சொன்னார்கள்.. வேறொரு ஆளில் பெயரில் விண்ணப்பம் பெற்று திருட்டுத்தனமாக வெற்றிபெற்றிடலாம் என்றிருந்த ராசாவின் சூழ்ச்சியை தடுத்து நிறுத்தியவர்.. தளபதியின் ஒற்றை அறிக்கை கல்வியாளர்களை வாக்களிக்க விடாமல் தடுத்ததோடு மணி அவர்களை போட்டியிடும் துணிவையும் தந்து வெற்றிபெறவும் செய்தது.. கொள்கை எப்போதும் விட்டுக்கொடுக்காமல்.. பாசிச நுழைய காலூன்றாவண்ணம் தடுத்துநிறுத்தியவர்..
..
பேராசான் பெரியார் கடுமையாக பார்பனர்களை விமர்சிப்பார் ஆனால் அவரது இல்ல நிகழ்வுகளுக்கு செல்வார் .. ராஜாஜியோடிருந்த நட்பு அரசியலை கடந்தது.. ராஜாஜியின் மகள் பால்ய விதவையாக வீட்டில் அடைப்பட்டுகிடந்ததை ராஜாஜியிடம் ஏன் குழந்ததையை வீட்டிலேயே வைத்திருக்கிறீர்கள் படிக்க அனுப்பலாமே என்ற போது அவ ப்ராப்தம் அவ்வளவுதானென சொன்னவரின் மனதை மாற்றி அவருக்கு மறுமணம் செய்துவைக்க பெரும் முயற்சி செய்தார் .. அந்த லட்சுமியின் மகன்தான் குடியரசுத் துணைதலைவர் தேர்தலில் போட்டியிட்டு தோற்றவர்.. திரு.கல்கி கிருஷ்ணமூர்த்தி மகள் திருமணத்திற்கு அழைத்திருந்தார் திருமண நிகழ்வெல்லாம் முடிந்தபிறகு வீட்டிற்கே சென்று ஆசிர்வாதம் செய்கிறார்.. கல்கியிடம் குழந்தைகளை அழைத்துவாருங்களென சொல்லி குங்குமத்தை கொண்டுவர சொல்லி நெற்றியில் இட்டு வாழ்த்துகிறார்.. அருகிலிருந்த கல்கியின் உதவியாளர் இந்த சம்பவத்தை எழுதி பெரியாரின் இரட்டை வேடமென எழுதலாமென்ற போது கல்கி சொன்னார் பெரியார் கொள்கையில் பிடிவாதமானவர் .. நேர்மையானவர்.. நாம் மனம்கோண கூடாதென்பதற்காக.. நமது சடங்குகளை மதிக்கிறாரே தவிர அதை ஏற்றுக்கொள்வதாக அர்த்தமில்லை.. என்றார்.. அதைதான் தளபதியும் செய்தார்..
..
கொள்கையில் விட்டுகொடுப்பதல்ல ..மாறாக அவர்களின் கொள்கைகளுக்கு மதிப்பளிப்பது..
#மாற்றான்_தோட்டமாயினும்_மனமுண்டு.
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment