Thursday, September 7, 2017

கிட்டு சாமி..

நக்கித்தான் குடிப்பேன் என்கிறார்.. வாழையிலையில் சாப்பாடு போடுகிறேன் என்றால்.. இல்லை வேண்டாம் மாட்டு தொழுவத்தொட்டில் ஊற்றுங்கள் குடித்துவிட்டு போகிறேன் என்கிறார்.. அருந்ததி தாய்க்கு பிறந்த நவீன கிருஷ்ணன்.. .. பெரியாரும் அம்பேத்கரும் இக்காலத்திற்கு தேவையில்லாதவர் என்கிறார்.. பாவம் யாரோ பேசவேண்டிய வசனத்தை இவர் பேசி குட்டுபடுகிறார்.. பெரியாரும் அம்பேத்கரும் இந்த நவீன உலகின் படைத்தவர்கள் ஏன் என கேட்க சொல்லி உன் அறிவோடு கதைத்தவர்கள்.. மூடமும் சடங்கும் மதமும் பிரிவினையும் சொல்லி வளர்ந்த சூழலை மாற்றி .. புதிய பாதையை அது உனக்கானதென்று எவனிடமும் யாசிக்காது எவனும் உனக்கு பிச்சை போட தேவையில்லை அது உனது உரிமை என செவிட்டில் அறைந்தாற்ப்போல் சொல்லி சென்றவர்கள்.. எவனுக்கு நீ அடிமையில்லை எவனும் உனக்கடிமையில்லை என்று சொல்லி சமூகத்தில் உயர்ந்து நிற்கும் நவீன சிற்பிகள்.. எவன் சொன்னாலும் எதைப்பற்றிச் சொன்னாலும் ஏன் நானே சொன்னாலும் உன் அறிவேற்காததை ஏற்காதே என்றவர்கள்.. உன் இடத்திற்கே வந்து உன்னிடமே நக்கி பிழைப்பவன் உன் உரிமையை மதம் சாதி சடங்கு என சொல்லி பறித்துக்கொள்கிறானென உன் உச்சந்தலையில் அடித்து உணர்ந்திவிட்டு போனவர்கள்.. .. பாவம் கிருஷ்ணசாமி.. நாயாய் பாப்பானுக்காக உழைக்கிறார் பழைய பாசம் கைக்கட்டி சேவகம் செய்கிறார்.. எத்தனை முறை குளித்தாலும் பாப்பான் வீட்டில் பெண்ணெடுத்தாலும்.. நீ.. அய்யராக அய்யங்காராக முடியாது.. சங்கராச்சாரியரை கண்டால் தீட்டு படுமென விரட்டிவிடுவார்.. அருகில் அமர்ந்தெல்லாம் பேசமுடியாது.. நீ.டாக்டராகவில்லையென்றால் பாப்பான் வீட்டு பெண் கிடைத்திருப்பாரா.. உன்னை படிக்க சொன்னவர்கள் .. நீ படிக்க ஏதுவாக இட உரிமையை பெற்று தந்தவர்களை தான் இக்காலத்திற்கு தேவை இல்லையென்கிறார்.. தான் உயர வந்தவுடன் தன் குடும்பம் பொருளாதாரத்தில் மெச்சபட்டவுடன் தன் இனத்தவர்கள் முன்னேற விடாமல் செய்கிற இழிச்செயலை செய்கிறார்.. .. தமிழகத்தில் இவரை (ஊடகங்கள் தவிர) யாரும் மசிருக்கு கூட மதிப்பதில்லை இவரை யாரும் ஆதரிக்கவோ சேர்த்துக்கொள்ளவோ இனி தயாரில்லை விரைவில் இருக்குமிடம் தெரியாமல் போவார்.. ஆர்எஸ்எஸ் கும்பலுக்கு கறிவேப்பிலை தான் இவர் தேவை முடிந்தவுடன் தூக்கியெறிந்துவிடுவர்..அப்போது கதியற்று கேட்பாரற்று கிடப்பார் .. .. நக்கித்தான் குடிப்பேன் என்கிறாய் அதை நல்லதென்கிறாய் என்றார் பாரதிதாசன்.. இடையிடையே கிருஷ்ணசாமிகளை வந்து பாசிசம் பேசும்.. கிருஷ்ணசாமி என்றில்லை யார்வந்தாலும் தமிழகத்தில் பெரியாரை முன்னெடுக்காமல் போனால் புதைமணலில் சிக்கிவர் போல் ஆவார்கள்.. .. ஒன்றை மட்டும் சொல்லி முடிப்போம்.. பெரியாரும் அண்ணலும் போராடி உரிமையை பெற சொன்னார்கள்.. சுயமரியாதை இழந்து நிற்க சொல்லவில்லை #திறக்கப்படாத கதவிற்குள் .. மடிக்காத விரிப்புகளை பயன்படுத்தி கரைசேர ..பயனடைய சொல்லவில்லை.. .. #கிட்டு_புதைமணலில் … .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment