Wednesday, September 27, 2017

கமல் ரஜினி

ரஜினி கமல்.. பாசிச சிந்தாந்தத்தின் மறைமுக மற்றும் வெளிப்படை யுக்திகள்/வரவுகள்.. முன்னவர் வருவது கடவுள் கையிலெனச்சொல்லி தப்பித்துக்கொள்ள இடையில் வந்த நரி மாட்டிக்கொண்ட கதையாக பின்னவர்.. இவரை சிலர் நம்மவரென்பவர் என்கிறார்கள்..ஆரம்பம் தொட்டே எதிர்ப்பவன் என்றவகையில் ..அறிந்தே சொல்கிறேன் கொஞ்சமும் தகுதியில்லாதவர்கள்.. .. அதீத மேதாவித்தனத்தை எப்போது யாரிடம் காட்டவேண்டுமென்று அறிதலே பாலபாடம் சாமானியரிடம் மேதாவியைப்போல நடித்தால்.. அவன் அனைத்தும் அறிந்தவன் என்ன அதிகம் வெளிகாட்டாத அடக்கம் .. பிய்த்தெறிந்துவிடுவான்.. செய்தியாளர்களிடமோ அல்லது கருத்தரங்குகளிலோ.. விவாதிப்பதல்ல களஅரசியல்.. வெற்றிடத்தில் உடனே காற்று நிரம்புமென நம்பி வந்தால் அது அகண்டவெளி என்று புரியும் எத்தனை வந்தாலும் ஒரத்தில் வைத்துவிடும் காற்றே இருப்பதாய் அறியாத இயல்புநிலை வரும்.. .. முன்பெல்லாம் அரசியல் எனக்கு தெரியாது நடிப்புதான் எனக்கு வருமென்றார் இப்போதும் கூட அரசியலை முழுமையாக அறிந்துவரவில்லை.. செலவிற்கு மக்களிடம் செல்வேன் என்கிறார் இவரை இயக்குகிறவர்கள் இப்போதைக்கு தரகூடும்..ஆனால் வேலைக்காகாது என்கிற போது கை கழுவிவிடுவார்கள்.. அரசியல் களப்பணிக்கு நிச்சயமாக ரசிகர்கள் பயன்படமாட்டார்கள்.. எங்களுரில் விஜயகாந்திற்கு இப்படிதான் தீடீரென சில இளைஞர்கள் பிரச்சாரமெல்லாம் செய்தார்கள் ..என்னப்பா ஐம்பது அறுபதுபேர் இருந்தீங்களே ஓட்டு ஐம்பது கூட வரலியே என்ற போது காசு கொடுத்தார்கள் வேலை செஞ்சோம்..அவ்வளவுதாண்னே என்றார்கள்.. ஆம் கொள்கை நாட்டின் நலன், இந்த சமூகத்தின் நடக்கும் கொடுமைக்களுக்கெதிராகவோ திரண்டவர்கள் இல்லை.. திடீரென முளைக்கிறவைகள் சிறிதுகாலம் தான் இருக்கும் அழிந்துவிடும்.. முறையாக விதைத்து வேலிகட்டி பார்த்து பார்த்து வளர்த்து இடையிடையே வேண்டாதபோதெல்லாம் கிளையை வெட்டி வளரவிட்டு பாருங்கள் அது தான் வைரம் பாய்ந்து நெடுநாள் நிற்கும்.. இவர்களெல்லாம் மழையில் முளைக்கிற காளான்கள்.. சிறிதுகால வாழ்வு அவ்வளவுதான்.. .. கடவுள் சொல்கிறவரை காத்திருப்பதாக சொல்வதிலிருந்தே இருக்கும் காசை கெட்டியாக பிடித்துக்கொள்கிறார்.. இருப்பதை இழந்துவிட்டு கெட்டு நிற்க விவரகேடில்லை என்கிறார் ஒருவகையில் அதுவும்சரிதான்.. தேசியம் பேசி திரிகிறவர் திராவிட மண்ணில் வேரூன்ற முடியாது இங்கே கொஞ்சம் நாத்திகமும் பேசவேண்டும்.. தெளிவாக எதிராளியை ..குறிப்பாக பாசிசத்தை காவிகளை அவ்வப்போது சாடவேண்டும் யதார்த்த மக்களின் கோவத்தை உணர்ந்திருக்கவேண்டும்.. கவர்ச்சி சினிமா மோகம்.. ஒருவித மாயை/ போதையெல்லாம் 70 -80 களில் இருந்தது இப்போதெல்லாம் இருக்குமிடம் தெரியாமல் செய்துவிடுவார்கள்.. நொடிக்குநொடி அரசியலை அறிந்துவைத்திருக்கிற காலம் சமூகவலைத்தளங்கள் கட்சியின் நிலைப்பாட்டையே மாற்றுகிற காலம்..இப்போதெல்லாம் அரிதாரம் வேலைக்காகாது.. .. கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும் எட்டுநாட்களில் கலையும்.. .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment