Saturday, September 16, 2017
பெரியாரும் பெண்ணீயமும்
#பெரியாரும்_பெண்ணீயமும்..
பெரியார் என்றவுடனேயே கடவுள் மறுப்புமட்டும் நினைவிற்கு வந்தால் இன்னும் அறிவு வளரவில்லை அல்லது பெரியாரை அறியவில்லை என்று பொருள்..
சமகாலத்தில் இந்த நூற்றாண்டின் மாபெரும் சமூகசிற்பி .. ஒரு இனத்திற்கானவராக மட்டுமே பார்க்க முடியாது ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கானவர்.
..
பெரியாரை சிறிய கூட்டுக்குள் அடைத்துவிட முடியாது.. மனிதனை சுயமரியாதையோடு வாழவேண்டுமென்று வலியுறுத்தியவர்.. நமஸ்காரம் என்ற ஆதிக்க சொல்லையும் கும்பிடறேன் சாமி என்ற அடிமைத்தனத்தையும் அகற்றி #வணக்கம் சொல் என சொன்னவர்..
கல்வியை அனைவரும் கற்கவேண்டும் அது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கானதல்ல என சொல்லி அதற்கான கட்டமைப்பை உருவாக்கியவர்..
எந்தயொரு சமூகமும் பெண்களின் முன்னேற்றம் இல்லாமல் வளர்ச்சியடைய முடியாதென்றவர்.. பெண் கல்வியின் அவசியத்தை உணர்த்தியவர்..
உங்கள் ஆண்குழந்தைகளை படிக்கவைக்காவிட்டாலும் பெண்குழந்தைகளை படிக்கவையுங்கள்.. உங்களூரில் அதற்கான வசதியில்லாவிட்டாலும் வெளியூர் சென்று கூலிவேலை செய்தாவது படிக்கவையுங்கள் என்றார்.. பெண்கள் கல்வி பெற்றால் தான் இந்த சமூகம் மூடபழக்கங்கள் அறியாமையிலிருந்து விடுபடும் என நம்பினார்..
வேலைக்கு போகும் பெண்களை விபச்சாரிகள் என்ற சங்கராச்சாரியாருக்கு
பெண்கள் வேலைக்கு சென்று சொந்தகாலில் நிற்கவேண்டுமென்றார்..
பெண்களை பொட்டுகட்டி தெய்வதொண்டு செய்யவேண்டுமென்றவருக்கு உங்கள் வீட்டுபெண்களை தெய்வதொண்டை செய்ய சொல்லுங்கள் என பதிலடி தந்தவர்.
..
எழுத்தாளர் சிவசங்கரி நான் கணவரை இழந்த பிறகு எனது சமூகத்தால் குடும்பத்தாரால் ஏறக்குறைய ஒதுக்கிவைக்கப்பட்டேன் என் வாழ்வே முடிந்தது போல்தான் இருந்தது .. பெரியாரின் எழுத்தும் சிந்தனையும் தான் இந்த சமூகத்தில் என்னால் வாழ்ந்துகாட்டமுடியுமென்ற நம்பிக்கையை அளித்தது என்றார் அதை அவர் #பெரியார்திடலுக்கே வந்து சொன்னார்..
..
இன்றைக்கு பெண்களுக்கு சொத்தில் சமபங்கு என சட்டம் வந்திருக்கிறதென்றால்.. அதை இந்தியாவிற்கே வழிகாட்டியாக கலைஞர் தமிழகத்தில் கொண்டுவந்து அதை பிற மாநிலங்களும் ஏற்று நடைமுறை படுத்தியதென்றால் அது பெரியாரின் விதைத்து.
ஆம் பெரியாரின் சிந்தனைக்கு சட்டவடிவம் தந்தார் கலைஞர்..
இன்றைக்கு பெண்கள் எல்லாதுறையிலும் மிளிர முடிகிறதென்றால் பெரியார் ஊட்டிய உத்வேகம்..
எல்லா மத, ஜாதியிலும், பெண்களை அடிமைப்படுத்திருந்தார்கள் சம்பளமில்லாத வேலைக்காரி பிள்ளை பெறும் இயந்திரம் அவ்வளவுதான்.. ஏறக்குறைய அடிமைசங்கிலியால் பிணைத்திருந்தார்கள்.. சாஸ்திரம் சம்பிரதாயம் மதகோட்பாடு, என கட்டுபாடுகள்.. தீட்டுவந்த பெண்கள் வெளியே வருவதால்தான் லோகம் கஷ்டபடுகிறது என்றெல்லாம் சொன்னார்கள் இப்படிதான் உடுத்தவேண்டுமென்று மதநெறிகள் .
எல்லாவற்றையும் உடைத்தெறிந்து விருப்பமானதை சௌகரியமானதை அணிந்துக்கொள் ..என்ற நம்பிக்கையை விதைத்தவர்..
..
பெரியார்..இந்த நூற்றாண்டின்..
மிகசிறந்த தொலைநோக்கு சிந்தனையாளர்..
..
இன்றைக்கு சிலர் ஈ.வே.ரா என்றெல்லாம் அழைக்கிறார்கள்.. என்னை மசிரு என்று கூட அழைத்துக்கொள் கவலையில்லை என்றவர்தான் பெரியார் .. இவர்களுக்கு தெரியுமா..
முதன்முதலில் பெண்கள் தான் #பெரியார் என்று அழைத்தார்கள்..
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment