Friday, September 15, 2017

உதயசூரியனாய் தளபதி

திமுக முப்பெரும்விழா.. அய்யாவின் அண்ணாவின் திமுகவின் பிறந்தநாள்விழா.. .. அய்யாவின் அடிச்சுவட்டை பின்பற்றிதான் அண்ணாவும் அருமைதலைவர் கலைஞரும் தமிழகத்தில் ..இன்றைக்கும் நிலைத்து பேசகூடிய திட்டங்களை செயல்படுத்தினார்கள் அய்யாவின் கருத்துக்களை சொல்லை செயல்படுத்த ஆட்சி அதிகாரமிருந்தால் தான் முடியுமென்று எண்ணி.. திமுகவை தொடங்கினார்.. பார்பனர்களிடமிருந்து (ராஜாஜியிடமிருந்து) அதிகாரத்தை பறிக்கவேண்டுமென அய்யா காமராஜரை நிறுத்தினாரோ அதைப்போல .. பாசிச சக்திகள் பின்னின்று இயக்கும் செயலை வேரறுக்கவே அதிகாரம் திராவிட சிந்தனையாளர்கள் கையில் வேண்டுமென்றெண்ணி திமுகவை தொடங்கினார் அண்ணா.. அன்று தொடங்கியது ஆரியத்தை இந்த மண்ணில் அடித்தமர்த்தும் பணி.. அண்ணாவின் மறைவிற்கு பிறகு கலைஞர் பொறுப்பேற்றவுடன் ஆரிய சதியை [மகோரா] எம்ஜிஆர் மூலம் செய்து திமுகவை உடைத்தது .. ஆம் அன்றே அண்ணா சொன்னார்..திமுக அறுதிப் பெருமான்மை பெற்றபோது தம்பிமார்கள் மகிழ்ச்சியில் அண்ணாவிடம் வந்தபோது சொன்னார் ஆட்சி வந்துவிட்டது கட்சி என்னாகுமோ என்றார்.. அவர் ஆரியத்தின் சூழிச்சியை அறிந்திருந்தார்.. ஆனால் எத்தனை சூழ்ச்சிகள் துரோகங்கள் அனைத்தையும் மீறி கட்சியை கட்டிக்காத்தவர் கலைஞர்.. .. ஆம் நூற்றாண்டாய் கடும் முயற்சியெடுத்துக்கொண்டுதானிருக்கிறார்கள்.. டி.எம்.நாயர் தியாகராய செட்டி பனகல் அரசர் ..நடேசமுதலியார் காலம் தொட்டே அழித்தே தீருவோமென கங்கணம் கட்டிக்கொண்டுதானியிருக்கிறார்கள்.. திராவிட இயக்கமாய் உருப்பெற்று.. பெரியாரின் பெருந்தொண்டால் நெருங்கமுடியாமல் போய்.. கலைஞர் பெருமகனின் சாதூர்யத்தால் துரோகிகளை இனம்கண்டு களைந்ததால் பெரும் இயக்கமாய்.. தி.மு.கழகம்.. .. .. இன்றைய காலக்கட்டத்தில் அய்யாவும்,அண்ணாவும் கலைஞர் பெருமகனும் கட்டி காத்த தமிழகத்தை சூழ்ச்சி வலைப்பின்னி அருவருக்கதக்க செயல்கள் மூலம் ஆசைகாட்டி அடிமைகளை வைத்து தமிழகத்தை முடிந்தளவு கூறுபோட நினைக்கிறார்கள் .. அவர்கள் ஆசைகள் சிலகாலம் தான் நிற்கும் .. மக்களின் செல்வாக்கில்லாத யாரும் நிலைக்க முடியாது ஆட்சி அதிகாரம் சூழ்ச்சி எதுவாகினும் மக்களின் எழுச்சி முன் இருக்குமிடம் தெரியாமல் போய்விடும்.. மக்கள் விரும்புகிற நேசிக்கிற சிறந்த தலைவராக தளபதி இருக்கிறார் .. #தெளிவளிக்க இருட்கதவை உடைத்தெறிந்தான் பரிதி! திசைமகளை அறிவுலகில் தழுவுகின்றார் மக்கள்; ஒளியுலகின் ஆதிக்கம் காட்டுகின்றான்; வானில் உயர்கின்றான்; உதயசூரியன் வாழ்க நன்றே! ... என்றார் எங்கள் #புரட்சிக்கவிஞர்_பாவேந்தர். .. ஆம்.. #உதயசூரியனாய்_தளபதி.. .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment