Saturday, September 30, 2017
ஜெயலலிதா நீதிவிசாரணை..
என் வாழ்நாளுக்குள் திமுகவை இருந்த இடம் தெரியாமல் அழிப்பேன் என்று சபதமேற்ற ஜெயலவிதாவிற்காக திமுக தான் நீதி கேட்கிறது..
என்ன விசித்திரம் என்கிறீர்களா.. அதுதான் திமுக..
..
மூட்டைப்பூச்சியைப்போல் நசுக்குவேனென்ற ராஜாஜியையும்.. 6000 அடி ஆழத்தில் புதைப்பேனென்ற பக்தவச்சத்தலத்தையும் திமுகவை இருக்குமிடம் இல்லாமல் செய்வேன் என்ற காமராஜரையும்.. ஏன் சுடுகாட்டிற்கு அனுப்புவேன் என்ற எம்ஜிஆரையும் பார்த்தாயிற்று..இவர்களுக்கெல்லாம் நினைவுமண்டபங்களை கட்டி அழகு பார்த்தவர் கலைஞர்.. தன் சிலையை உடைத்த இளைஞனை கூட கவிதையில் ரசித்தவர்..
செயல்ப்படவிட்டோர் சிரித்து மகிழ்ந்து நின்றாலும்
அந்த சின்னதம்பி முதுகில் குத்தவில்லை நெஞ்சில் தான் குத்துகிறான் அதுவரை நிம்மதி எனக்கு.. என்றார்
..
ஜெயலலிதா மிக மோசமான அரசியலை கையிலெடுத்தவர் நாகரீகமற்ற தனிநபர் தாக்குதலை செய்தவர் தனக்கு கிடைக்காத வாழ்வு பிறருக்கு கிடைத்திருக்கிறதே என்ற பொறாமையை அடிக்கடி செயலிலும் சொல்லிலும் வெளிப்படுத்தியவர்.. அடிமனதின் ஆழத்தின் ஏக்கம் அவரின் செயல்பாடுகளில் தெரிந்தது.. அதை காட்டிக்கொள்ளாமல் வாழ தெரியாமல் போனார்.. கூட இருந்தவர்கள் தன் நிழலை தவிர எல்லோருமே ஏமாற்றுகாரர்களென அறிந்தே இருந்தார்.. தாயார் தொடங்கி உறவினர்கள் நண்பர்களென எல்லோருமே இவரை பகடையாக பயன்படுத்தினார்கள்.. அதை அவர் அறிந்தே இருந்ததுதான் கொடுமை..
..
பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தி தான் அடைய முடியாத கதாநாயகி தகுதி தன் மகளை கொண்டேனும் அடையவேண்டுமென நினைத்து தான் இரையான மகோராவிடமே மகளை சேர்த்ததில் தொடங்கி .. பணம் புகழென உயர்ந்த போது .. உடன்பிறந்தவரும் உறவினர்களும் அவரின் சொத்து மீது நாட்டம் கொள்ள ..கடைசியில் யாரையும் நம்பமுடியாத போதுதான்.. சசிகலா அறிமுகமானார்.. ஜெயலலிதாவிற்கு தெரிந்தே தான் சசிகலாவின் சட்டவிரோத செயல்பாடுகள் இருந்தாலும்..எல்லாம் இழந்தவர் கிடைத்த தும்பை பிடித்தேனும் நகரவேண்டுமென்ற நிலையில்.. சசி நம்பிக்கையானவராக காட்சி தந்தார்.. தன்னை வைத்து பிழைக்கிறார் ஆனால் தன்னை மீறியோ அல்லது காட்டிக்கொடுத்தோ தப்பிக்க நினைக்கவில்லையென்றவுடன் அவரோடான நெருக்கம் அதிகமானது.. அதை சசி&கோ சரியாக பயன்படுத்தி பள்ளத்திலிருந்தவர்கள் உச்சியை தொட்டார்கள் இதெல்லாம் யாவரும் அறிந்ததுதான்.. இப்போது ஜெயலலிதா சிறைச்சென்றால் கட்சியை விட்டே நீக்குவோமென்கிறார்களே இவர்களை விட அந்த மாபியா கும்பல் ஜெயலலிதாவிற்கு விசுவாசமாகதான் இருந்திருக்கிறது...இருக்கிறது..
..
இப்போதும் ஜெயலலிதாவின் அரசியலை வெறுத்து ஒதுக்கினோமே தவிர தனிநபரை அல்ல அதனால்தான் ஆளகூடாதென்றுதான் சொன்னோம் வாழகூடாதென்று அல்ல எங்களால் இரங்கற்பா பாடமுடிந்தது ..
அவரின் மரணம் குறித்து அவரின் கூட இருந்தவர்களே எழுப்பும் சந்தேகங்களும் கூட இருந்தே குழிப்பறித்தவர்களையும் ஜெயலலிதாவை சாய்த்தால் வளரலாமென திட்டம்தீட்டியவர்களையும் மக்கள் முன் தோலுறிக்கவேண்டியிருக்கிறது.. அதனால் தான் திமுக சிபிஐ விசாரணை கோருகிறது.
..
மிக கேவலமானவர்கள் கேடுக்கெட்டவர்களை அடையாளங்காட்டுவோம்
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment