Wednesday, September 6, 2017
முரசொலியில் வைகோ
முரசொலி..
முரசொலி பவளவிழாவில் திரு.வைகோ பேச்சை கேட்டிருப்பீர்கள்.. இன்னமும் தெளிவு பெறாதவராகதான் அவரின் பேச்சு இருந்தது.. மேடைப்பேச்சில் கடைப்பிடிக்கவேண்டிய சில விடயங்கள் குறித்து கலைஞர் சொல்ல கேட்டிருக்கிறேன்.. ஆளுமை என்பது சபையை கட்டுக்குள் கொண்டுவந்து நிறுத்துவது மட்டுமல்ல எந்த விடயத்திற்காக நிற்கிறோம் என்பதில் கவனம் தேவை.. எல்லாவற்றையும் போட்டு குழைப்பிக்கொள்வதை விட எதை தவிர்க்கவேண்டுமென அறிந்திருந்தல் வேண்டும் அதைவிட நிகழ்கால நிகழ்வுகளை கோர்த்து பேசவேண்டுமென்பார்..அது நேற்றைய உரையில் என்றில்லை வைகோவிடம் எப்போதும் இருப்பதில்லை.. உலக அரசியலை படித்தவர் உள்ளுர் அரசியலின் நம்பகதன்மையை மறந்துவிட்டார்..
..
திமுகவிலிருந்து பிரிந்து வந்து 25 ஆண்டுகளை கடந்தும் தெளிவான முடிவை இதுவரை எடுக்கவில்லையென்பதும்.. சரியான பாதையில் இதுவரை பயணிக்கவில்லையென்பதும் இவர் ஆதரித்தவர்கள் இவர் படித்து வளர்ந்த திராவிட சித்தாந்தத்தை சிதைக்க வந்தவர்கள் என்கிற யதார்த்ததை கூட உணராதவராகவே காலம் தள்ளிவிட்டார்..
..
மதிமுக தொடங்கி முதல் முறையாக தேர்தலை சந்தித்த போது நண்பர்களிடத்தில் சொன்னேன் வைகோ கூட வெற்றிபெற முடியாது இது அவருக்கே தெரியுமென்றேன் திமுக தேர்தல் பணிக்குழு செயலாராக இருந்தவர் அடிமட்ட தொண்டர்களின் அரவணைப்பில்லாமல் கிராமங்கள் தோறும் கட்சியை கொண்டு சேர்க்க முடியாதென்கிற உண்மை அறியாமல் போனார்..
நிஜத்திற்கும் நிழலுக்கும் பேச்சிற்கும் செயலுக்கும்,உள்ள வேறுபாட்டை உணராதவராகவே இப்போதுமிருக்கிறார்..
மதுராந்தகம் ஆறுமுகம் மதிமுகவிற்கு வந்தபோது லட்சம் தொண்டர்கள் வந்ததைப்போல உணர்கிறேன் என்றார்.. இதுதான் வைகோ..தினகரன் கந்தசாமி வந்தபோது திராவிட இயக்கத்தின் ஊடகப்பிரிவே வந்ததைப்போல பேசினார் ..
உண்மை நிலை அறியாதவராகவே இப்போதுமிருக்கிறார்.. ஜெயாவை மோடியை விஜயகாந்தை பின்துணைக்கிற போது ஒன்றை மறந்தார் தன் கால் நழுவுகிறதென்பதை..
..
திராவிட இயக்கத்தின் பின்ணணியில் வளர்ந்தவர் அதன் சித்தாத்தத்தோடே போட்டியிட்டார்.. தெரிந்தே தவறுகளை கொஞ்சமும் கூச்சமின்றி செய்தார்.. சற்றென்று நம்பிவிடும் அவரது இயல்பு அவசரகதியில் ஆனது.. இப்போதுகூட வலுகட்டாயமாக தளபதியைப்பற்றி பேசுவதை தவிர்த்து மீண்டும் தவறின் கோட்டில் நிற்கிறார்..
இவரால் திமுகவிற்கு பலமென்ற நிலை இல்லை மாறாக வைகோவின் அரசியல் இனி தளபதியின் அடியொற்றி இருக்கிறதென்பது தான் உண்மை.. காலம் அவருக்கு உணர்த்து போது வைகோ அரசியலிலிருந்தே கரைந்துப்போயிருப்பார் ..
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment