Thursday, September 21, 2017
கேடுக்கெட்டவர்கள்
எங்களைப்போல..
ஆசிரியர்கள் எங்களைப்போல நல்ல அரசியல்வாதிகளை உருவாக்கவேண்டும்..
நம்பிக்கை துரோகி பன்னீர்..
..
பன்னீரின் ஆசிரியருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.. தங்களை குற்றம் சொல்லவரவில்லை.. விதைகளை விதைக்கிறோம் அதில் சில சொத்தைகளும் வந்து விடும் அதுகூட மண்ணில் புதைந்து எருவாகும்..ஆனால் சில விதைகள் நச்சென்று தெரிந்து வளர்ந்து வரும் போதே பிடிங்கி குப்பையில் எறியாமல் விட்டுவிட்டீர்கள் அது வளர்ந்து சொரணையற்று கூட இருப்பதையும் அழித்து காட்டிக்கொடுத்து மொத்த நிலத்தையும் பாழாக்கியிருக்கிறது..
..
நல்ல அரசியல்வாதிக்கான லட்சணங்கள் ஒன்று கூட இல்லையே .. தமிழனுக்கே உரிய சுயமரியாதை இழந்து காலில் விழுந்து .. கார் டயரையெல்லாம் கும்பிட்டு.. அழைத்துவந்து அமரவைத்து அழகு பார்த்தவரை புறமிருந்து குத்தி கிழித்து .. தன்னை வளர்த்து விட்டவர்களையே குறிபார்த்து சாய்த்து.. அதைவிட பச்சோந்தி கூட நிறமாற சிறுது நேரமெடுக்கும் ஆனால் பட்டென்று நிறமாறி ..
தமிழினத்தை எப்போது சாய்க்கலாமென கங்கனம் கட்டுவோவரிடம் நிபந்தனையற்ற சரணடைந்து ஒட்டுமொத்த தமிழகத்தையே தலைக்குனிவு ஏற்படுத்தியவர்கள் நல்ல அரசியல்வாதிகளாம் .. கடைசியில் இருந்த எடப்பாடியை முதல்வராக்கியவரை குத்தி குதறுகிற செயலை வெறிபிடித்தவைகள் கூட செய்யாது..
..
ஏதேனும் ஒரு நல்லகுணம் கண்டால் யாராவது சொல்லுங்கள்.. நேற்று ஊழல் ஆட்சியென்று சொல்லி திடீரென அழைத்து மந்திரி பதவி கொடுத்தவுடன் ஊழலற்ற ஆட்சியென்பவரை எதில் சேரிப்பீர்கள்.. அம்மா மரணத்தில் சநிதேகமென்றவர் தர்மயுத்தம் நடத்துவதாக சொல்லி திரிந்து மந்திரிபதவி வந்தவுடன் ஆளில்லா விசாரணை கமிஷன் அமைத்து தர்மயுத்தம் நடத்துவது உலகிலே இவர்தான்..
அரசியலில் பொய் சொல்வார்கள் பாத்திருப்போம்.. நேற்றுவரை வராதுவந்த தெய்வமென பேசிவிட்டு காலில் விழுந்து கிடந்தவர் தன் பதவி பறிக்கப்பட்டவுடன்
உத்தமன் வேடம் கட்டி அதையும் ஊடகமும் நடுநிலைகளும் வரிந்து கட்டி புகழ்ந்து கடைசியில் காரி உமிழ்கிற நிலை ...
இதெல்லாம் வருங்கால அரசியல்வாதிகள் அறிந்து .. தவிர்க்கவேண்டிய பாடமாக .. இவரைப்போல யாரும் வந்துவிடாதீர்களென அறிவுரை சொல்லலாம்..
..
நல்லவர்களைப்பற்றி நல்லவைகளை மட்டும் போதிப்பல்ல ஆசிரியர் பணி.. கெட்டவர்களைகளும் மாணவமணிகளுக்கு எடுத்துச்சொல்லி தீயவர்கள் சமூக தீமைகள் இவர்களால் ஆபத்தென எடுத்துச்சொல்வதுவும் கூட அறப்பணித்தான்..
..
வரலாறு கெட்டவர்கள் ஏன் கேடுக்கெட்டவர்களை கூட இப்படிதான் பதிவு செய்யும்
#பின்பற்றாதீர்..
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment