Wednesday, September 6, 2017

கிழவனின் பேனா

ஒரு பேனா களைத்துப்போய் சற்று இளப்பாறுகிறது.. அதற்குள் எத்தனை சீற்றத்தோடு பார்பன கூட்டம் நம் மீது பாய்ந்து வருகிறது பாருங்கள்.. யாரென்றே தெரியாதவன் விளையாட்டு சேதி சொன்னவன் எல்லாம் நமக்கு வகுப்பெடுக்கிறான்.. சிரிப்பு நடிகன் சீரியஸாய் கதைக்கிறான்.. அதுக்கென்ன இப்போ என அக்ரஹாரத்து அச்சார் (உறுகாய்)போட்ட மாமியெல்லாம் பேசுகிறது.. அதைவிட கொடுமையாய் மாராப்பு சேலைக்கு போடகூடாதென வரிகட்டியவனின் பேரன் பாவிகளை தூக்கி சுமக்கிறான்.. பீ அள்ளிய கைகளில் புத்தகம் தந்தவரை மறந்து .. பாசிசத்தின் பீ.. திங்க போகிறேன்.. சில குலத்தைக் கெடுக்கும் கோடாரிகள்.. இவையாவும்.. ஒற்றை பேனா சிந்திய துளிகள் கண்டு அஞ்சிய பேடிகள் இளைப்பாற கொஞ்சம் மௌனமாய் இருக்கையில் துள்ளி குதிக்கின்றன.. .. இந்த கிழவன்.. ஆயிரங்கணக்கில் வழிகளை சொல்லியிருக்கிறான் கொஞ்சம் கூர்ந்து படித்தால் அதனோடு பயணித்தால் இன்று கொக்கரிக்கும் பாசிசத்தின் பற்களை பிடிங்கியெறிந்து விடலாம்.. எந்தவொரு போராட்டத்தையும் அதன் முனை மழுங்காமல் எடுத்து செல்லும் பயிற்சியை .. பெருங்கிழவன் பெரியாரும்..எதை எப்படி எதனோடு எங்ஙனம் தீர்ப்பதென்று அறிவாலயத்து கிழவனும் முரசொலித்து சொல்லியது இன்னமும் நம் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.. நம்மை பிரித்தாளும் சூழ்ச்சி இடைக்கால வெற்றியை பெறலாம் ஆனால் இனமானம் என்கிறபோது அனைத்தையும் உடைத்தெறிந்து ஒன்றாகி நிற்போம் என ஆரிய கூட்டம் உணரத்தான் போகிறது.. .. நான்காம் தலைமுறை தலைவனாய் தளபதியாய் திரு.ஸ்டாலின் தமிழர்களின் தமிழினத்தின் நம்பிக்கையாய் வருவது கண்டு மக்களின் தன்னெழுச்சியாய் ஆதரவு கண்டு பகைவர் கூட்டம் தடுமாறுகிறது.. அதனால் ஏதேனும் சொல்லி இனத்தானேயே புறம் பேசச்சொல்லி நம் கை கொண்டே கண் குத்தும் வேலையை செய்கிறது.. எந்தவொரு உணர்வுபூர்வமான விடயங்களிலும் உணர்ச்சியை தூண்டி சாதிமதத்தை சொல்லி பிரிக்கும் வேளையை நம்மவரை கொண்டே செய்கிறது வேலூர் cmc விடயத்தில் கூட மதத்தை முன்னிருத்தும் அயோக்கியத்தனத்தை செய்கிறது.. இதெல்லாம் பலிக்காது.. .. கிழவன் செய்துகாட்டிய பொருள் பொதிந்த எண்ணற்ற வழிகளும் செயல்களும் அவர்கண் அசைவில் நடந்தேறும் அப்போது பார்பனீயம் மீண்டும் புதைக்குழிக்கு அனுப்பப்படும் .. #திராவிடருக்கு_வீழிச்சியில்லை.. .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment