Saturday, September 16, 2017

சாரணர்...தேர்தல்..

என் உயரம் எனக்கு தெரியுமென்றார் கலைஞர்.. ஏன் நீங்கள் பிரதமர் பதவிக்கு போட்டியிட கூடாதென்ற கேள்விக்கு தான் இப்படி பதில் சொன்னார்.. .. சாரணர் தேர்தலில் எச்.ராசா போட்டியிட முடிவாகியதின் பின்னில் உள்ள அரசியல் புரிந்தவர்களுக்கு இது ஆபத்தான போக்கு என தெரியும்.. முதல்வரை சந்திக்கிறார் ராசா அடுத்த சிலநாட்களில் சாரண சாரணியர் தேர்தலில் போட்டியென அறிவிப்பு வெளியாகிறது .. அமைச்சர்கள் அதிகாரிகளென வேகமாக காய்நகர்த்துகிறார்கள் அடிமை அமைச்சர்கள் தங்களுக்கு தெரிந்த வகையிலெல்லாம் மிரட்ட தொடங்குகிறார்கள் யாருமே போட்டியிடாமல் வெற்றிப்பெற்றிட வேண்டுமென நினைத்து அதற்காக அனைத்து வேலைகளும் நடந்தது எடப்பாடி அரசு .. மணியை மிரட்டியதும் அவர் பின்வாங்க மறுத்தவுடன் கல்வித்துறையின் சார்பில் வேண்டுகோள் மிரட்டல் என தொடர்ந்தது .. உடனே ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டதோடு இல்லாமல் தளபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.. .. உடனே தளபதியார் கடும் கண்டனத்தை பதிவு செய்தார்.. தளபதியாரின் அறிக்கை திசையை மாற்றியது எச்.ராசா போன்றவர்கள் வெற்றிபெற்றால் இளம் தளிர்கள் நெஞ்சில் ஆர்எஸ்எஸ் சித்தாந்த விசம் ஏற்றபடுமென எச்சரிக்கிறார்.. தகுதியுள்ளவர்கள் போட்டியிடவேண்டுமென்ற அறிக்கை நல்ல பலனை தந்தது திரு.மணி தேர்தலில் மனுதாக்கல் செய்த போதே வெற்றி உறுதியாகிவிட்டது.. இதில் அரசியல் வேண்டாமென்ற நிலைபாட்டை திமுக எடுத்தது ஆனால் எச்.ராசா போன்ற காவிகளின் கையில் போக கூடாதென்ற உறுதியில் இருந்தார் தளபதி.. .. எச்.ராசாவின் அதிகார பின்னணி மத்தியில் ஆட்சியில் இருப்பதாலும் தமிழகத்தில் தங்களின் சொற்படி ஆடுகிற கோமாளிகள் இருப்பதால் போட்டியின்றி வெற்றி பெற்றிடலாம் என்றிருந்தார்.. அமைச்சர்கள் சிலர் நேரடியாகவே சிலரை தொடர்பு கொண்டு ராசாவை பின்துணைக்கவேண்டுமென்று கேட்டும் அமைச்சர்களின் மிரட்டலையெல்லாம் காதோர்க்காமல் .. நாளை அமைச்சராக இருப்பாயா என்றே தெரியவில்லை மிரட்டுகிறாயா என்று எதிர்வினையாற்றிருக்கிறார்கள் .. .. இது ராசா வகையறாக்களுக்கு எச்சரிக்கை வாய்க்கு வந்தபடி நாகரீகமில்லாமல் மிரட்டும் தொனியில் பேசி திரியும் தமிழிசை நிர்மலா போன்றோர்க்கும் கொடுக்கபட்ட எச்சரிக்கை மணி.. முதலில் உங்கள் உயரம் /தகுதி என்னவென்று தெரியவேண்டும். தமிழகத்தில் வேரோடு பிடிங்கியெறியபடுவீர்கள்.. அதற்கான முன்னெச்சரிக்கை தான் இந்த தோல்வி.. .. யாருடைய தோல்வியையும் நாங்கள் கொண்டாடுவதில்லை.. ஆனால் தமிழகமே கொண்டாடுகிற தோல்வியாகிப் போனது .. எவ்வளவு பேசினாலும் தமிழ் மண் பாசிச காவிகளுக்கு தோல்வியை தான் பரிசாக தருவார்கள்.. ராசாவிற்கு விழுந்த வாக்குகள் பற்றியும் எமக்கு தெரியும்.. எப்போதுமே வாக்களிக்க வராத பிராமணர்கள் வந்து வாக்களித்தார்கள்.. இன்னமும் இருக்கிறது ராசா.. வேரோடு வீழ்த்துவரை.. .. #திராவிடம் .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment