Saturday, September 9, 2017
தமிழிசை..சுரமில்லை
அண்ணன் ஸ்டாலின்..
தமிழிசை பேச்சை விட அவரின் உடல்மொழி எனக்கு வியப்பை தந்தது.. பார்பனர்களின் மேலாதிக்க திமிர் அதில் தெரிந்து ..அதெல்லாம் இவருக்கு சேரவில்லையென்பது மிகப்பெரிய நகைச்சுவையாகிப்போனது தான் பாவம்..
இந்த திமிர் பேச்சு சமீபகாலமாக பாஜகவினருக்கு வந்திருக்கிறது.. காரணம் மத்தியில் ஆளும்கட்சி என்பதால் மட்டுமல்ல தமிழகத்தில் அடிமைகளின் ஆட்சி நடப்பதும்
எது செய்தாலும் காத்துக்கொள்வார்கள் என்ற ஆணவபோக்கும் காரணம்..
..
ஆனாலும் தமிழிசை தன்னை மறந்து நிற்கிறார்.. அவரின் கோவம் இயலாமையில் வந்ததென அவரின் மொழி காட்டிக்கொடுத்தது..
உண்மையில் இவர் போன்றவர்களுக்கு தங்கள் தலைமை மீதுதான் கோபம் வரவேண்டும் என்னதான் குளித்து கும்பிட்டு திருநீறு பூசி சென்றாலும் வாசலுக்கு வெளியேதான் வைப்பார்கள் நுழைய விடமாட்டார்கள் இவருக்கு பிறகு வந்து மக்கள் செல்வாக்கில்லாத நிர்மலாவை மதிக்கிற அளவிற்கு கூட இவருக்கு மரியாதை கிடைக்காதென்ற உண்மை விளங்காமல் நிற்கிறார்..
..
திமுகவை விமர்சிப்பாதாக எண்ணி புதைந்துப்போன குற்றசாட்டுகளை சொன்னார் அதெல்லாம் பதில் சொல்லியாகிவிட்டது.. ஆனால் 2ஜி பற்றி சொன்னதற்கு.. 20 தேதிக்குமேல் திகார் மு.க வா என்று பார்ப்போம் என்பதலிருந்தே பாஜக தற்காலிக தீர்ப்பை தர முயற்சிக்கிறது நீதிமன்றத்தை வளைத்தொடிக்க பார்க்கிறதென்று அறியமுடிகிறது.. இவர் மீது நீதிமன்றத்தை திசை திருப்ப அல்லது மீறிய செயலை செய்கிறார் தவறான வழிகாட்டுதலை செய்கிறாரென வழக்கு பதியலாம்..
..
தமிழிசை தன் தலைவரின் பெயரை விட தளபதியை பெயரை அதிகமாக உச்சரித்ததும்..
அவர்களின் பயம் பட்டவர்த்தனமாக தெரிந்தது..உச்சசுருதியில் பேசினார் அது தமிழிசைக்கு சேரவில்லை வேறு மாதிரி மேடை பேச்சை கையாளலாம்.. வீம்புக்கு கூட்டம் போட்டு விழிபிதுங்கி நின்றிருக்க வேண்டியதில்லை..
எந்தவொரு கட்சியும் அதன் தலைமையும் மக்களின் உணர்வுகளுக்கெதிராக செயல்பட்டால் காணாமல் போகும்/காணாமல் போவார்கள்.. இங்கே ஒன்றை குறிப்பிட வேண்டும் அவரின் கருத்தை கொள்கையை செயலை கடுமையாக விமர்சனம் செய்யலாம் ஆனால் அவரை அல்ல கீழ்த்தரமான விமர்சனங்கள் அழகல்ல அதை யார் செய்தாலும் அவன் திமுக காரன் என்றாலும் எதிர்க்கவேண்டும்.. அவரோடு தனிப்பட்ட முறையில் நமக்கென்ன பகை ஒடுக்கப்பட்ட இனத்திலிருந்து வந்தவர்.. எம்மை எதிர்த்து நின்றாலும் அவரின் கொள்கை எதிர்ப்போம் விவரகெட்டவரின் செயலை கண்டிப்போம்.. ஏதேதோ உளறி வைக்கும் அவரது அறிவிலித்தனத்தை புரியவைப்போம்.. அதுதான் நமது பணி..
..
#சுரமில்லா_இசை..
..
தோழர். ஆலஞ்சி
..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment