Monday, September 25, 2017
இனத்தின் மீதான போர்
ஒரு இனத்தின் மீதான தாக்குதலுக்கும் ஒரு மொழியின் மீதான தாக்குதலுக்கும் இடையே மெல்லிய ரேகை மட்டுமே தென்படும்.. இனத்தின் மீதான தாக்குதலை புரிந்துக்கொள்ள நீண்டநாட்கள் தேவைபடும் ஆனால் மொழி மீதான தாக்குதலை சட்டென்று உணர்ந்துவிடுவீர்..
மொழியியல் ஆய்வாளர் ரிச்சர்ட் மெடோ இனத்தின் மீதான தாக்குதல் நீண்டகால போர்முறை.
மொழியின் மீதான தாக்குதல் திடீர் தாக்குதலைப்போல நிலைக்குலைய செய்யுமென்கிறார்.
..
ஒரு இனத்தை அழித்தொழிக்க வேண்டுமெனில் அதற்கு நீண்டகால திட்டமிடல் அவசியம்.. இங்கே திராவிட இனத்தின் மீதான தாக்குதலை ஆய்வு செய்தால் இது புலப்படும்.. இன்றைக்கு நேற்றல்ல ஏறக்குறைய பலநூற்றுாண்டுக்களுக்கு முன்பாகவே இனத்தின் மீதான மௌனப்போர் நடந்துவருகிறது.. சில ஆய்வாளர்கள் (இலங்கை சிவ சுப்ரமணியன்) போன்றோர் ஈராயிரம் வருடங்களுக்கு மேல் என்கிறார்கள்.. இதில் சுவாரஸ்யமே இனத்தின் மீதான போரை மொழிவளத்தை மெல்ல அழிப்பதில் தொடங்குகிறது.. மொழியறிவு அந்த இனத்திடமிருந்து பிடுங்கியெறியது என்பது மொத்த இனத்தின் ஆணிவேரையே அசைக்கிற செயல்..
..
ஆம்..
ஆரியர்கள் தங்களை திராவிட இனத்தின் தாய்மொழியான தமிழை கற்றுணர்ந்து தங்களை தமிழர்களாகவே அடையாளம் படுத்தினார்கள்..
இன்னும் சொல்லப்போனால் பண்டிதர்களாக தங்களை நிலைநிறுத்தினார்கள்..மெல்ல சமஸ்கிருத சொற்களை திணித்து தமிழை இரண்டாம் நிலை மொழி/சொற்களாக்கினார்கள்..
இப்போது மொழி மீதான தாக்குதலில் நேரடியாகவே இறங்க தொடங்கிவிட்டார்கள்..
சில பள்ளிகளில் தமிழ் மொழியே இல்லை விருப்பபாடமாககூட மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதில்லை இதை ஆட்சியாளர்களும் உணரவில்லையென்பதுதான் பெரும்சோகம்..
நவோதயா பள்ளிகளின் வருகையில்
மொழி மீதான வன்மமிருப்பதாக உணர்கிறேன்
தரம் உயர்ந்த பள்ளிகளைப்போல பிம்பத்தை ஏற்படுத்தி தாய்மொழிப்பள்ளிகள் தரம் குறைந்தவை அல்லது இந்த அகண்ட தேசத்தில் போட்டியிட முடியாது அதற்கான வலிமை இல்லை என்பதைப்போல பிரச்சாரங்கள் மேற்கொள்ளபடுகிறது.. அது தவறான செயல் தாய்மொழி வழி கல்வியே சிறந்த புரிதலை தரும்..
..
ஒருவரின் அடையாளம் மதமோ பிரிவோ ஜாதியோ அல்ல மாறாக ஒருவரை இனம்கொள்ள அவரின் இனம் மொழி முக்கியம்.. ஒரு இனத்தில் பல்வேறு மொழிவடிவங்கள் காணப்படலாம் ஆனால் இனம் மட்டுமே ஒருவரின் அடையாளம்..
ஒருவரின் அடையாளத்தை அழிப்பதென்பது இனஒழிப்பேயாகும்..
..
ஆரம்பம் தொட்டே தமிழ் மொழி மீதான தாக்குதல்களை மிக கச்சிதமாக செய்துவந்திருக்கிறார்கள்.. அவர்கள் பேசுகிற எழுதுகிற மொழியாக அதாவது வழக்குமொழியாக தமிழை கொண்டிருந்தாலும் அதை நீசபாஷை எனச்சொல்லி தங்களின் இனப்பற்றை முன்னெடுத்தார்கள்.. இயற்கையை மட்டுமே வணங்கி வாழ்ந்த ஒரு இனத்தின் மீது விக்ரஹ வழிபாடு எனச்சொல்லி கடவுளை புகுத்தி அவனிடம் பேசுகிற /சொல்கிற மொழியாக தங்களின் இனமொழியை கொண்டுவந்தார்கள்..
..
அவர்களின் நோக்கம் இதுதான் அது நீண்டகால போர்முறையில் இனத்தின் மீதான தாக்குதல் ..அது கடைசியில் இனத்தின் தாய்மொழி மீது கொண்டு சேர்க்கும்.. இப்போது தமிழை இரண்டாம்தர மொழியாக்க அல்லது பிறமொழியை திணிக்க செய்கிற வழிகள் எல்லாம் இனத்தின் மீதான தாக்குதலாகவே இருக்கும்..
..
இப்போது புரிந்திருக்கும்.. தமிழ்மொழி மீதான தாக்குதல் எவ்வளவு வலிமையானதென்று.. ஒரு மொழியின் வளத்தை அழிக்க அவர்களின் கலாச்சாரத்தை அழித்தொழிக்க அல்லது பிற கலாச்சாரத்தை திணிக்கவேண்டும்.. அவர்களின் பண்பாட்டு மரபுகளில் இடைசொருகல்களை நிகழ்த்தி புதிய பண்பாட்டு சுவடுகளை உருவாக்கினால் மெல்ல இனத்தின் மீதான தாக்குதலை அது தானே செய்துக்கொள்ளும்..
..
மொழி இனத்தின் மீதான தாக்குதல் ஒருவனின் முகத்தையே மாற்றிவிடும்..
..
#இனம்_மொழிகாப்போம்_உணர்வுகொள்வோம்...
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment