Monday, September 25, 2017
கமல்..
முதல்வர் ஆவேன் என எங்கே சொன்னேன், முள் கிரீடம் என்று தான் சொன்னேன்
..நடிகர் கமல் ஹாசன் @ நியூஸ் 18 தமிழ் ..
..
டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியை தெரியுமா..
உன்னால் முடியும் தம்பி என உத்வேக கட்டுரை எழுதியவர் அமெரிக்கா வாசத்தை முடித்துக்கொண்டு மக்கள் தொண்டாற்ற வந்தார் இளைஞர்களை தட்டியெழுப்பி புதிதாய் தமிழகம் சமைக்கபோகிறேன் என்றார்.. அவரின் எழுத்தும் கருத்தும் புதுயுகத்தின் விடியலுக்கானவையாக இருந்தது .. நூறு இளைஞர்கள் கொடுங்கள் என்ற விவேகானந்தர் கூட எனக்கு நினைவிற்கு வந்தார்..
நீ தான் தம்பி முதலமைச்சர் என்றெல்லாம் எழுதி குறிப்பாக இளைஞர்களை தட்டியெழுப்பியவர்.. மக்கள் சக்தி இயக்கம் கண்டு அரசியலில் நுழைந்தார்.. தேர்தல் அரசியல் வேறென்பதை அறியாமல் போனார் .. ஆயிரம் வாக்குகளுக்குள் முடங்கிப்போனார்..
அவரது எழுத்துக்களையோ அல்லது அவரது முற்போக்கு சிந்தனைகளையோ குறைகூறுதில்லை நோக்கம் ஆனால் யதார்த்தம் அறியாமல் கற்பனைகளில் மிதந்தது அரசியலைப்பற்றிய தெளிவில்லாமல் போனார்..
..
ஏன் இதை சொல்கிறீர் என கேட்டால் மிக அதீத புத்திமானாக காட்டிக்கொள்கிறவர்கள் திடீரென சறுக்கிவிழுவார்கள்.. முன்தினம் எழுதியத்தற்கான விடை இன்றைய பேட்டியில் கிடைத்தது.. கட்சி நடத்த பணம் எங்கிருந்து வருமென்ற கேள்விக்கு மக்கள் தருவார்களென உளறுகிறார் அதுவும் நேர்மையாக தரவேண்டுமென சொல்வதிலிருந்தே .. எப்படி பாஜகவிற்கு கணக்கில் வராத/எங்கிருந்து வந்ததாக தெரியாத ₹400 கோடி பணம் கட்சிக்கு வந்திருப்பதாக தேர்தல் ஆணையம் சொல்லியிருக்கிறதோ அதைப்போல தான் இவரது தூய்மை /நேர்மையும் .. அரசியலில் என்ன கொள்கை எந்த வடிவத்தில் வருகிறதென்பதை பொறுத்தே விமர்சிக்க முடியும் ஆனால் திடீரென கெட்டுக்கிடக்கு .. ஊழலை ஒழிப்பேன் என்றால் மாநில அரசை அல்லது மாநில கட்சிகளைப்பற்றி மட்டுமே பேசுவேன் மத்தியில் ஆளும் அரசை விமர்சனம் செய்வதிலிருந்து மாறி நிற்பேன் என்பது தமிழக அரசியலின் அரிச்சுவடியே தெரியவில்லை என கருத வேண்டியிருப்பதோடு .. கடைந்தெடுத்த அயோக்கியத்தனமானவராக தெரிவார்..
மோடியின் திட்டங்கள் வெறும் வார்த்தையோடு நிற்கிறதே.. தூய்மை திட்டம் தொடங்கி பணமதிப்பிழப்பு இவற்றைப்பற்றிய இவரின் கருத்துக்களிலிருந்தே இவரின் முகசாயல் நமக்கு விளங்கும் .. இவர் சரிப்பட்டுவரமாட்டார் என்ற நகைச்சுவை தான் நியாபகம் வருகிறது.. ஏனெனில் முன்னுக்குபின் மாறி பேசும் அரசியல் தொடக்கம் சரியான பாதையை தராது..
..
100 நாட்கள் திட்டம் போல் யார் வேண்டுமானாலும் முதல்வராக வரலாமென்பதிலிருந்தே .. அவரின் பின் வாங்கும் அல்லது நோட்டம் பார்க்கும் செயலாக தெரிகிறது.. உட்கட்டமைப்பை ஏற்படுத்தாமல் அரசியலில் அதுவும் தேர்தல் அரசியலில் ஈடுபடுதென்பது முட்டாள்தனமென அவர் அறிந்திருக்க கூடும் அதன் எதிரொலியாக தான் மிக சமாளிப்போடு கூடிய பதிலாகவே வந்தது..
..
வரணும் ..வந்தால் தான் மிச்சமுள்ள அரிதாரத்தையும் கலைத்து .. நிஜமெது என்பதை தமிழனுக்குணர்த்தலாம்..
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment