Wednesday, September 20, 2017
எப்போதும் கவலையில்லை எமக்கு
நீதிமன்றம்..
இன்றைய தினம் அதிகம் பேசபடுகிற விடயங்களாக இருந்தது.. சென்னை உயர்நீதிமன்றமும் டெல்லி விசாரணை நீதிமன்றமும் கவனத்தை ஈர்த்தது ..
முன்னதில் எடப்பாடிக்கு தனபாலுக்கும் மூச்சுவிட அவகாசமளித்து.. அதேவேளை காலியாக அறிவித்த இடங்களில் தேர்தல் நடத்த கூடாதென்றும் .. மறு அறிவிப்பு வரும் வரை சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கூடாதென்றும் உத்தரவிட்டிருக்கிறது..
அவகாசமளித்து அதை அனுபவிக்க முடியாமல் செய்திருக்கிறது.. அதைவிட தனபால் அவகாசம் கேட்பது தான் இதில் சுவாரஸ்யம்..
நீண்டநாட்கள் தள்ளிப்போட முடியாதென்பதையும் விரைந்து முடிக்கவேண்டுமென்பதை தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை..
..
2ஜி வழக்கில் அடுத்தமாதம் 25ல் தொடங்கி மூன்று தினங்களுக்குள் தீர்ப்பை தந்துவிடுவதாக சொல்லியிருக்கிறார்.. நீதிபதி ஷைனி அவர்கள்.. நன்று..
உடனே சிலர் திமுகவிற்கு தண்டனை தந்துவிட்டதைப்போல குதூகலிக்கிறார்கள்..
2G வழக்கை அனுமானங்களின் அடிப்படையில் புனையப்பட்டு உச்சநீதிமன்றம் அதீத கவனம் செலுத்தியதும் .. ஊடகங்கள் அதை ஊதி பெரிதாக்கியதும் கடைசியில் புலனாய்வுத்துறை வாய்தா வாங்கி வாங்கி கடைசியில் அதிர்ஷ்டமிருந்தால் வெற்றிப்பெறட்டுமென ஜோசியம் சொன்னதும் தான் நடந்தது..எல்லா வாதங்களையும் சட்டரீதியாக முறியடித்திருக்கிறார் திரு.ராசா ..
..
கலைஞர் டிவிக்கு வழங்கப்பட்ட நிதி ஆதாரத்திற்கு திரும்ப வங்கி பரிவர்த்தனை மூலம் நடைப்பெற்றது.. 2007 ல் இறுதியில் அலைக்கற்றை ஒதிக்கீடு நடைப்பெற்றது 2008 ஜனவரியில் முடிவுற்றது ஆனால் கலைஞர் டிவிக்கு 2008 அக்டோபரில் தான் சினியூக் நிறுவனம் கடன் வழங்குகிறது அதுவும் காசோலையாக .. கையூட்டு எல்லாம் காசோலைகளாக வழங்கப்படுவதில்லை வங்கிபரிவர்த்தனைகள் சட்டத்திற்குட்பட்டவை அதில் தவறு இருந்தால் அபதாரம் விதிக்கலாம் அல்லது முறைகேடாக செலவிடப்பட்டதாக அறிந்தால் தண்டிக்கலாம் ஆனால் இங்கே எல்லாம் வெளிப்படையாகவே நடந்தது..
ஆனால் அது நியாயமான முறையில் எங்கிருந்து பெறப்பட்டதென்பதற்கு ஆதாரங்கள் இருக்கிறது..
இந்த வழக்கில் என்ன தீர்ப்பு வந்தாலும் அது திமுகவை எந்தவகையிலும் பாதிக்காது .. காரணம் தனிநபரின் செயல்களுக்கு கட்சியை குற்றம் சுமத்தென்றால் பாஜக உட்பட இந்திய அரசியல்கட்சிகளின் வருவாய்கள் எப்படி வந்ததென கேள்வி எழும் இப்போது கூட பாஜக கணக்கில் காட்டாத பணம் வந்திருப்பதாக தேர்தல் ஆணையமே அறிக்கை வெளியிட்டிருக்கிறது..
..
திமுக ஒரு ஜனநாயக இயக்கம் அது கட்சியல்ல
யாருடைய தோல்விகளோ வெற்றிகளோ அதன் பாதிப்பு சிறிது வந்தாலும் இயக்கத்தின் கட்டமைப்பும் அதன் கொள்கைகளும் ஆழ ஊடுறுவி மண்ணில் புதைந்திருப்பதால் சிறிய சலசலப்புகளுக்கு விழுந்துவிடாது .. சிலரின் கனவுகள் பலிக்காது சட்டபடியான தீர்ப்பு வருமெனில் திமுக வென்றிருக்கும்.. தமிழிசை சொன்னதைப்போல எழுதப்பட்ட தீர்ப்பாக இருந்தாலும் மேல்முறையீட்டில் நியாயம் கிடைக்கும் இதற்கெல்லாம் திமுக அஞ்சாது..
தொடர் சூழ்ச்சிகளையும்,அடுக்கடுக்கான குற்றசாட்டுக்களை சொன்னபோதும் சட்டத்தின் மீதும் நீதிமன்றங்களின் மீதும் நம்பிக்கை வைத்திருக்கிறது.. குற்றவாளிகளையே கொண்டாடுகிற கூட்டத்திற்கு.. இதெல்லாம் புரியாது..
தைரியமாக எந்த வாய்தாவும் வாங்காமல் விரைந்து முடிக்கவேண்டுமன்று செயல்பட்டதும் விசாரணை எப்போதுமில்லாத அளவிற்கு ஊடகங்களில் விசாரணைநீதிமன்ற விவாதங்கள் வெளியானதும் .. குற்றம் சாட்டப்பட்ட அரசு தரப்பு தடுமாறியதும் மக்கள் நன்கறிவர்..
2G வழக்கில் இறுதி வாதத்தில் யாருக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதோ அவர்களே வெற்றி பெறட்டும் என்று எதிர்த்தரப்பு வழக்கறிஞர் சொன்னபோது, நான் அதிர்ஷ்டத்தை நம்புகிறவனல்ல, கோப்புகளையும், ஆதாரங்களையும், சட்டத்தையும் மட்டுமே நம்புகிறவன் என்ற முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர்
மானமிகு ராசா நிச்சயம்
அவர்கள் விடுதலையாவார்....
..
#எப்போதும்_கவலையில்லை_நமக்கு…
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment