Friday, September 22, 2017

கமலில் இரட்டை வேடம்

இரண்டே இரண்டு கேள்விகள் தான் ..கமல் ஸ்வ்ச்பாரத் demonetisation .. தூய்மை இந்தியா பணமதிப்பிழப்பு .. இரண்டு திட்டங்களையும் ஏற்பதாக சொல்கிறீர்.. .. எது தூய்மை இந்தியா கங்கையை சுத்தம் படுத்துவதாக சொல்லி பல்லாயிரம் கோடிகள் பணம் செலவு செய்ததாக காட்டி கொள்ளையடித்ததை சரியென்கிறீர்.. நாடக நடிகர்ரள் தங்கள் அலுவலக வாசலில் துடைப்பத்தோடு காட்சி தந்ததை தூய்மை இந்தியா என்கிறீரா.... இதோ ரயில்வே டிராக்குகளில் மலம் அள்ளிக்கொண்டிருக்கிறாரே என் தாய் அவள் கையிலிருக்கும் வெளக்காமாறை குறைந்தபட்சம் பிடிங்கியிருக்கவேண்டாமா.. நவீன தொழில்நுட்ப செயல்பாடு நடைமுறைப்படுத்தபடுமென அறிவிப்பாவது வந்திருக்க வேண்டாமா.. மலக்குழிகளில் விசவாயு தாக்கி செத்து தொலைகிறானே என் சகோதரன் அவனை இறங்க வேண்டாமென சொல்லி நவீன இயந்திரங்களை கொண்டு சுத்தம் செய்திருக்கவேண்டாமா.. காட்சிக்கு புகைப்படமெடுப்பதும் அதை விளம்பரபடுத்துவதும் தான் தூய்மை இந்தியா திட்டமா.. உங்களுக்கு முன்னால் மூத்த நடிகர் எம்ஜிஆர் நடித்து ஏமாற்றிவிட்டு போய்விட்டார் .. தெருதெருவாய் கூட்டுவது பொதுநலத்தொண்டு .. ஊரார் படம்பிடிக்க .. Demonetisation தலைச்சிறந்த பொருளாதார மேதை மன்மோகன்சிங் நாடாளுமன்றத்திற்கே வந்து இதன் கொடூரத்தை விளக்கிவிட்டு போனாரே .. ரிசர்வ்வங்கி கவர்னர் ரகுராம் முட்டாள்த்தனமானதென்றாரே இன்னும் நிறைய பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்தார்களே அவர்களையெல்லாம் விட கமல் சொல்வது சரியென்கிறீர்களா .. ஏற்கனவே ஒருமுறை எனக்கு நடிக்கமட்டும் தான் வருமென்றீர் .. ஆம் கமல் நீங்கள் நடிக்கமட்டும்தான் செய்கிறீர்.. ஆனால் அது திரையில் இல்லையென்பதால் ரசிக்கமுடியவில்லை.. எழுதிக்கொடுப்பதை மட்டுமே பேசி நடிக்துவந்தவர் இப்போது சுயமாக பேச முற்படும் போது எதிர்வினையையும் கருத்தில் கொள்ளவேண்டும் .. ஆனால் ஒன்று நடிகர்கள் நாடாள ஆசைப்படும் போது அவர்கள் அறிவோடு எப்போதும் கதைப்பதில்லை.. அறிவுடையோரென நம்பபடுகிறவர்கூட அரிதாரத்தோடு வீரநடைப்போட்டு வருகிறார்கள் கடைசியில் கட் என்கிற போது வசனம் மறந்துவிடுகிறது.. .. அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் அதை வரவேற்கிறோம் அதேவேளை அது நேர்மையான வரவாக இருக்கவேண்டும்.. தமிழக அரசை விமர்சிக்கிறவர் மத்தியரசை விமர்சிக்க மறுப்பதிலிருந்தே நாடகத்தின் திரைக்கதை எப்போது எங்கே எழுதப்பட்டதென்று புரிகிறது.. .. நேரம் வெளுக்க அரிதாரம் கலைகிறது.. .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment