Monday, September 18, 2017

பெரியாரெனும் பெரிய மனிதர்

#பெரியார்.. தந்தை பெரியார் பொதுவாழ்வில் மிக தூய்மையானவராக இருந்தார்.. தன் பூர்வீக சொத்திலிருந்து வரும் வருவாயைதான் தன் செலவுக்கு எடுத்துக்கொண்டார் தனக்கு தருகிற பணம் மற்றும் பொருளை டிரஸ்ட்டுக்கே தந்தார் .. அதிலிருந்து நயாபைசாகூட செலவிற்கு எடுத்துக்கொள்ளாதவர்.. பதவி தன்னை தேடிவந்த போது கூட அதை மறுத்தார் 1940 மற்றும் 42 கவர்னர்ஜெனரல் வீடுதேடி வந்து சென்னை மகான பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் என்ற போது மறுத்தவர் பெரியார்.. நெருப்பு குச்சிகூட குளிர்ச்சிதரலாம் வேப்பெண்ணை கூட தேன் ஆகலாம்... பதவிக்கு வந்தவன் யோக்கியனாக இருக்கமுடியாது /இருக்கவிடாது இந்த சமூக கட்டமைப்பு என்றார் .. .. மற்றவர்களை மரியாதை செய்ய தவறியதில்லை வயதில் சிறியவர்களை கூட வாங்க என்றுதான் அழைப்பார்.. இன்றைக்கு சிலர் மிக மோசமாக விமர்சிக்கிறார்கள்..நிகழ்ச்சிகளில் கடவுள் வாழ்த்து பாடினால் எழுந்துநிற்பார் குங்குமம் திருநீறு கொடுத்தால் கூட வாங்கிக்கொள்ளும் பழக்கம் உடையவர்.. மற்றவர்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிப்பவர்.. நான் எதிர்ப்பது அவரது கொள்கையே தவிர அவர்களை அல்ல என்றவர்.. .. கடவுள் மறுப்பு எனது கொள்கையல்ல ஜாதிய ஒழிப்பே எனது பிரதான கொள்கை ..ஜாதிய ஒழிக்க வழிதேடியபோது அது மதத்திற்கு உட்பட்டதை கண்டேன் மதத்தை ஒழிக்கலாமென்றால் அது வேதத்திற்கு உட்பட்தென்றார் வேதம் கடவுளுக்கானதென்றார் அதனால் தான் கடவுளை எதிர்த்தேன்.. ஜாதி மரக்கிளையை போன்றது அதைவெட்டி பிரயோசனமில்லை மரத்தின் ஆணிவேரான கடவுளை எதிர்த்தேன் எனக்கும் உங்கள் கடவுளுக்கும் வேறேதும் பகையில்லை என்றார்.. கடவுள் பெயரைச்சொல்லி உன்னையும் என்னையும் பிரிக்கும் ஆரியத்தை எதிர்க்கிறேன்.. ஜாதியை ஒழிக்க எவையெல்லாம் தடையோ அதையெல்லாம் எதிர்ப்பேன் மனிதனை சமமாக நடத்திட வேண்டும் மானமுள்ள அறிவுள்ளவனாக மாற்றவேண்டுமென்பதே எனது நோக்கம்/கொள்கையென்றார்.. .. தன்னை பற்றி நானொன்றும் யோக்கியனில்லை மைனர் வாழ்வு வாழ்ந்தவன் தான் .. மதுஅருந்ததில்லை பிறருக்கு வாங்கி கொடுத்திருக்கிறேன் .. வியாபாரியாக இருந்தபோது பொய் பேசியிருக்கிறேன் ஆனால் பொதுவாழ்விற்கு வந்தபிறகு #பொய்பேசியதில்லை என்று வெளிப்படையாகவே பேசியவர்.. .. பெரியார் திறந்த புத்தகம்.. அறிவுச்சோலை .. இன்றைக்கு கொஞ்சமேனும் மரியாதையோடு இந்த தமிழ்சமூகமும் நாடும் இருக்கிறதென்றால் அதற்கு பெரியார் மட்டுமே காரணம்.. இல்லையெனில் பீகாரைப்போல உ.பி.யை போல ஆரியர்களுக்கு அடிமையாகளாகதான் வாழவேண்டியிருக்கும்.. .. #பெரியார்_மாபெரும்மனிதர்.. .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment