Thursday, September 28, 2017
அறிவிலிக்கூட்டத்தை விரட்டுவோம்
விகடன் அட்டைப்படம்..
விகடன் ஏற்கனவே கருத்துப்படங்களில் கேலிச்சித்திரங்களில் அமைச்சர்களை கிண்டல் செய்து வெளியிட்டிருக்கிறது கடுமையான விமர்சனங்களை ஆட்சியாளர்கள் மீது வைத்திருக்கிறது..
மகோரா [எம்ஜிஆர்]ஆட்சியில் ரௌடியைப் போல சித்தரித்த கேலிச்சித்திரத்திற்கு கைதுவரை சென்றார்
விகடன் ஆசிரியர் சீனிவாசன்
ஆனால் அதற்கு விளக்கமளித்த ஆசிரியர் விமர்சனபார்வையை கூட ஏற்க முடியவில்லையென்றார்...
கலைஞர் உட்பட ஜனநாயகத்தில் விமர்சனத்தை உள்வாங்கவேண்டும் பழிவாங்கும் போக்கு சிறந்த நடைமுறையல்ல என்றனர்
..
இப்போது விகடன் வெளியிட்டியிருக்கும் கேலிச்சித்திரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது ஜனநாயக கடமையை மீறி ஒரு உறுத்தல் தோன்றுகிறது .. சினிமா கொட்டகைகளில் பஜார்களில் தாயம் உருட்டும் சூதாட்டக்காரர்களென.. இந்த
திருடர்களை, கண்முன் காட்டி ஏமாற்றுக்காரர்கள் ..இவர்களென ஓங்கி அறைந்து சொல்லியிருக்கிறது.. சட்டென்று சிரித்துவிட்டு கடந்துபோக முடியவில்லை .. இந்த அயோக்கிய கும்பல் ஆட்சிக்கு வர நாமும் காரணமாகிவிட்டோமே என மக்களின் மனதை உறுத்தவைத்தத்திருக்கிறது.. ஆம் நாமும் தான் காரணம் .. சொற்பகாசும் அது தரும் தற்காலிக நிம்மதிக்காக நீண்ட நெடும் துயரத்தை விலைக்கு வாங்கியிருக்கிறோம்.. தெரு பொறுக்கிகள்/சூதாடும் ரௌடிகள் அளவிற்கு தரம்தாழ்ந்து மாநில முதல்வர் விமர்சிக்கப்படும் போது நாமும் இம் மாநிலத்தில் வாழ்வதை எண்ணி வெட்கி தலைகுனிய வேண்டியிருக்கிறது..
..
அரசியலதிகாரம் இருக்கிறதென்பதற்காக இன்னமும் இவர்களை விட்டுவைப்பது ... நேரடியாக அரசாங்கத்தை சூதாட்டகாரர்களிடம் அல்லது ஏலமெடுப்போரிடம் தந்துவிடலாம்.. ஏலமெடுத்தவன் கூட அடுத்தமுறை நமக்கு கிடைக்கவேண்டுமென்பதற்காக சற்று ஈரத்தோடு நடந்துக்கொள்வான்
இனி எப்போதும் நமக்கு வாழ்வில்லை என்பதறிந்து மக்களைப்பற்றி கவலைக்கொள்ளாமல் பூம்பூம் மாட்டைப்போல தலையாட்டி திரிகிறார்கள்..
நக்கி பிழைக்கிறார் அதையே நல்லதென்கிறார் என்ற பாவேந்தர் வரிகளைப்போல அடிமைகளைவிட கேவலமாய் கூனிகுறுகி நிற்கிறார்கள்.. பொய்யும் புரட்டும் சர்வசாதாரணமாக வருகிறது இப்படியொரு கேடுக்கெட்ட கூட்டத்தை இதுவரை தமிழகம் கண்டதில்லை.. மாநில நலனுக்கெதிராக கொஞ்சம் கூட அச்சப்படாமல் நீட்டிய இடங்களிலெல்லாம் கையெழுத்திட்டு .. விற்றுவிடுகிறார்கள்..
..
ஜனநாயகத்தின் மீதும் இந்த மண்ணின் மீது சிறுதும் அக்கறையின்றி இவர்கள் நடத்து சூதாட்டகூத்து எத்தனை நாள் பொறுப்பது.. இவர்களையும் இவர்களை ஆட்டுவிக்கும் கூட்டத்தையும் வேரோடு சாய்க்கவேண்டும்..
..
இவர்களை அரசியலை விட்டே விரட்ட உறுதியேற்போம்.. நமக்காக உழைக்கிறவனை அடையாளம் காண்போம்.. #நமக்கு_நாமே ..என முரசொலிப்போம்
வெற்றி வெகுதூரமில்லை.. இலக்கை சரியாக வடிவமைத்துக்கொண்டிருக்கிறோம்.. நிச்சயம் வெல்வோம்..
#வெற்றிமட்டுமே_நமது_இலக்கு…
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment