Friday, September 29, 2017
இந்திய பொருளாதாரம்
80 வயதில் வேலை கேட்டு விண்ணப்பிக்கிறார் யஸ்வந்த் சின்ஹா-ஜெட்லி
இதுதான் பாசிசத்தின் முகம்..
..
சொல்லப்பட்ட கருத்தை/ குற்றசாட்டை எதிர்க்கொள்ள திராணியற்று தனிநபர் தாக்குதலில் ஈடுபடுவதுதான் பழைமைவாதிகளின் செயலாக இருக்கும்.. குற்றசாட்டை மறுக்கமுடியாமல் அவரை தாக்குவதென்பது கோழைத்தனம் கையாலாகாதசெயல்..
..
யஷ்வந்த் சின்ஹா மோடியும் ஜெட்லியும் சேர்ந்து நாட்டை திவாலாக்குகிறார்கள் பொருளாதார மந்தநிலையில் கூட இந்திய பொருளாதாரம் தடம்புரளாமால் இருந்தது இப்போது உலகின் பொருளாதாரம் நல்லநிலையில் இருக்கும் வேளையில் இந்தியவின் நிலை மிகமோசமாக இருப்பதாக சொல்கிறார்.. 5.7 என்பது அல்ல உண்மையில் 3.7 தான் வளர்ச்சியென சொல்வதை .. எந்த பொருளாதார வல்லுநர்களும் தவறென்றோ காழ்ூ்புணர்ச்சியில் சொல்வதாக சொல்லாதபோது நாட்டின் நிதியமைச்சர் நிலைமையை நாட்டுமக்களுக்கு சொல்வதை விடுத்து யஷ்வந்த் சின்ஹாவை கிண்டல் செய்வதிலிருந்தே மிக மோசமாகி கொண்டிருக்கிறதென்பது தெரிகிறது..
..
நாங்கள் சொன்னோம் எதிர்க்கட்சிகளில் குற்றசாட்டாக கவனித்தில் கொள்ளவில்லை இப்போது பிஜேபியை சேர்ந்தவர்களே நிலைமையை உணர்ந்து கேள்வி கேட்கிறார்கள் என்கிறார் ப.சிதம்பரம்.. சிவசேனாவோ ஒருபடிமேலேபோய்.. பொருளாதார மேதைகள் டாக்டர்.மன்மோகன்சிங்கும் ப.சுதம்பரமும் முன்பே எச்சரித்தார்கள் இன்றைய மோசமாக நிலையை முன்கூட்டியே கணித்தார்கள் என்கிறது..
..
மதம் தலைக்கேறியவர்கள் வாய்ஜால வித்தைகாரர்கள்.. எப்போதும் பொய்பேசி திரிபவர்கள் இவர்களை மகாபுத்திசாலிகள் போல் காட்டி.. ஊழல் நிர்வாக சீர்கேடென ஏதேதோ சொல்லி நாட்டின் சிறந்த வல்லுநர்களை வேண்டாமென வைத்து கார்ப்பரேட்டுகளின் வியாபாரஉக்தியை அரசியலாக்கி மோடி போன்ற அரைவேக்காடுகளை .. உன்னதநிலைக்கு உயர்த்தி பிடித்ததன் விளைவு .. இன்று நாடு சந்திக்கிறது .. அதிரடி என கூறி ஒரே இரவில் பணமதிப்பிழப்பை அறிவித்து .. நாட்டுமக்களை நடுத்தெருவில் நிறுத்தியதை ஒஹோவென புகழ்ந்த மோடி ரசிகமணிகள் இப்போதும் சப்பைக்கட்டுவதை நினைத்து வேதனையாகிறது..
..
கருத்திற்கு/குற்றசாட்டிற்கு ஆதாரத்தோடு பதிலளிக்க திராணியில்லாமல் 80 வயதில் பதவிக்கு ஆசைபடுவதாக கொச்சைபடுத்துவதை ஏற்கமுடியாது..
பாஜக ஆர்எஸ்எஸ்காரர்களின் பேச்சு இப்படிதான் ஆணவத்தோடு இருக்கும் .. எதற்கும் பதில் சொல்ல வக்கில்லாமல் நேரடி தாக்குதலை செய்வார்கள் ..தமிழகத்தில் எச்.ராசா தமிழிசை போன்றோர்களின் பேச்சை கவனியுங்கள் இதே தொனியில்தானிருக்கும்.. ஆர்எஸ்எஸ் செயல்திட்டத்தில் /பயிற்சியே இந்தமுறைதான் .. பதிலளிக்க முடியாமல் போகும்போதெல்லாம் தனிப்பட்ட தாக்குதலை செய்வார்கள் ..
..
ஜெட்லிக்கு பேச்சை நாடே எதிர்க்கிறது யஷ்வந்த் சின்ஹா அவர்கள் நான் வேலைக்கேட்டு விண்ணப்பம் செய்திருந்தால் இன்றைக்கு முதலிடத்தில் ஜெட்லி இருந்திருக்கமுடியாதென பதிலடி தந்திருக்கிறார்.. கருத்தை எதிர்க்கொள்ளமுடியாத கோழை ஜெட்லி..
..
#தேசத்தின்_பேராபத்து..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment