Sunday, September 10, 2017
தமிழ்
தமிழை ஆன்மீகத்தோடும் சமஸ்கிரத்தோடும் கலக்காமல் பேசமுடியாதென்கிறார் குருமூர்த்தி..
நீண்ட விளக்கம் அளிக்கவேண்டும்.. ஒரு புத்தகமே எழுதலாம்..
அதற்கு முன் பெரியார் சொன்னதை சொல்லவேண்டும்..
சாமியார்கள் கையில் தமிழ் வந்ததால் பொருந்தாததையெல்லாம் பேசி எழுதி அதுதான் தமிழ் என்று விட்டார்கள்..
..
ஆம்.. அகத்தியர் தொடங்கி சமீபகால தமிழறிஞர்கள் அல்லது திருத்தொண்டு செய்தவர்கள் பரிமேலழகர் வள்ளலார் குன்றக்குடி வாரியார் என எல்லோருமே ஆன்மீகத்தை அதிகமளவில் எழுதியும் பேசியும் வந்தார்கள்.. அபூர்வமாக சிலர் தனித்தமிழில் பாடல் எழுதினாலும் குன்னங்குடி போன்றவர்களை மதம்சார்ந்த இஸ்லாமிய தமிழ் இலக்கியமென வரிசைபடுத்தினார்கள்.. நிறைய தமிழ்சொற்களை இப்போது கையாள்வது அவர்கள்தான் ஆனம் பசியார நோன்பு தொழுகை பசியார..
நிறைய தமிழ்ச்சொற்களை பயன்பாட்டில் வைத்திருப்பதும் கூட அவர்கள்தான்..
..
சமணர்களை வீழ்த்திய பிறகு தான் இடைச்சொற்கள் வந்ததாக சில ஆய்வுகளை மேற்கோள்காட்டி அ.மா.சாமி எழுதியிருக்கிறார்.. ஆரம்பகால அச்சக தமிழில் 1852 ல் தனித்தமிழ்தான் அச்சிடப்பட்டதாக 19ம் நூற்றாண்டின் தமிழிதழ்கள் என்ற நூலில் சொல்லியிருக்கிறார்.. குறிப்பாக பிராமணர்கள் அதிகளவில் எழுத தொடங்கிய போதுதான் உத்தமநாதபுரம் (எங்கள் ஊருக்கருகில்) உ.வே.சாமிநாதய்யர் போன்றவர்களின் வரவிற்கு பிறகுதான் சமஸ்கிருத தமிழ் அதிகளவில் புழக்கத்திற்குவந்தது.. ஆன்மீக சார்ந்த தமிழையும் சமஸ்கிருத கலப்பையும் அதிவேகமாக முன்னெடுத்தார்கள் .. குறிப்பாக வார தினசரி பத்திரிக்கைகளில் பிராமணர்களின் வழக்குச்சொற்கள் பயன்படுத்தபட்டதும் இந்த நூற்றாண்டு துவக்கத்தில் தான் என ஆய்வாளர் இலங்கையை சேர்ந்த சிவபாலகிருஷ்ணன் ஒருமுறை குறிப்பிட்டு பேசினார்..
..
தமிழில் பெருமளவில் கலப்பட சொற்கள் சமீபத்தியதாக.. அதாவது மன்னர்கள் திருத்தொண்டு செய்த காலகட்டத்தில் அவர்கள் ராஜகுருமார்கள் செப்பிய மொழிகள் தமிழில் கலந்ததென்றும் சங்கத்தமிழுக்கு பொருள் எழுதிய சான்றோர்கள் அதை மதத்தோடு இணைத்ததும்.. ஆன்மீகவாதிகளாக தங்களை முன்னிருத்திய தமிழறிஞர்களின் செயலும் குறிப்பிட்ட மதத்திற்கானதைப்போல தோற்றத்தை உருவாக்கியது.. தமிழர் வாழ்வும் வழிமுறைகளும் மதத்தை அடிப்படையாக கொண்டதில்லையென கீழடி ஆய்வு நமக்குணர்த்தும் வேளையில்தான் சுவாமிநாதன் குருமூர்த்தி போன்றவர்கள் மதத்தை சொல்லி இனி பயனில்லையென்று ஆன்மீகத்தை துணைக்கழைக்கிறார்கள்..
..
தமிழ் தமிழர் பண்பாட்டு கலாச்சார வாழ்வியல் மதம் ஆன்மீகம் இரண்டிற்கும் சம்பந்தமில்லாதது.. அவன் வாழ்வியல் இயற்கையையோட்டியே இருந்தது.. தமிழுக்கும் மதத்திற்கும் தொடர்பில்லை தமிழனுக்கு இடையில் வந்த சொருகலே மதம். எல்லா மதங்களும் தமிழனின் வாழ்வில் வந்த சொருகலே..
..
மதமில்லை தமிழுக்கு.. அது குடி..தமிழ்க்குடி
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment