Saturday, September 9, 2017
ராயல் சல்யூட்
சோதர பாவம் நம்மில்
தோன்றாவிடில் தேசத்தில்
தீதினி
நீங்காதடி சகியே
தீதினி நீங்காதடி!
எங்கள் புரட்சிகவிஞர் பாவேந்தர்.
..
நுங்கம்பாக்கம் மாணவிகள் போராட்டம்..
நான்கு மாணவிகள்.. சாலையில் அமர்கிறார்கள்..இதை பார்த்த மற்ற மாணவிகள் ஆசிரியர்களுக்கு தகவல் தந்துவிட்டு வந்து அவர்களும் அமர்கிறார்கள் தகவலறிந்த பெற்றோர் வந்து கேட்டு அவர்கள் சேர்ந்து முழக்கமிடுகிறார்கள்..
காவல்துறை ஆணையர் வந்து இது போன்ற போராட்டத்தை அனுமதிக்கமுடியாதென்கிறார்.. நீங்கள் நீட் தேர்வெழுதியா எஸ்ஐ வந்தீங்க..என்று பதிலடி தருகிறார்..
ஏய்... எந்திரிடீ... எந்திரிச்சி போ என்ற பெண் காவலரை
இன்னா ஏய் ங்கற? சும்மா அந்தாண்ட போ நீ.. அதே மாதிரியான பதிலடி தருகிறார் மாணவி..
தலைமையாசிரியர் வந்து டிசி கொடுக்கவேண்டிவரும் என்ற போது உங்களுக்கு சம்பளம் பத்தலைன்னு ரோட்டுல இறங்கி போராடுறீங்க முடிஞ்ச ஆதரவு தா.. இல்லையென்னா கிளம்பு..
நெஞ்சுரம் காண்கிறேன்.. தெளிவாய் திடமாய் மாணவ கண்மணிகள்..
இனி..பயமில்லை..
..
ஆம் சரியாக பயணிக்கிறது மாணவர்கள் பெருங்கனவோடு பயிலும் போது.. எம் பாட்டன் அப்பன் நிலம் தந்து வரி தந்து எம் அரசு கட்டிய கல்லூரியில் எமக்கிடமில்லாயா.. எங்கிருந்தோ வந்தவன் படிக்க நாங்க என்ன குலத்தொழிலை செய்வதா.. 12 வருடம் படித்த பாடத்தை எடுத்த பயிற்சியை கண்ட கனவை .. நீட் என்று சொல்லி எல்லோருக்கும் சமமான கேள்விதாளை தராமல்.. ஏற்றதாழ்வை விதைக்கும் கொடுஞ்செயலை சதிகாரர்கள் நீதிமன்ற துணையோடு செய்கிறார்கள்..
விடுவதாயில்லை எம் கண்மணிகள்..
..
அரசியல் கட்சிகளின் போராட்டத்தில் கொஞ்சமேனும் அரசியல் லாபகணக்கு தெரியும் ஆனால் மாணவர்கள் கையிலெடுத்தால் அது அவர்களின் வருங்காலத்தை மனதில் கொண்டு எந்தவித சமரசமுமோ இல்லாமல் மாணவர்களின் எதிர்கால நலன் மட்டுமே அடிப்படையாக கொண்டிருக்கும் .. இந்த கேடுகெட்ட மாநில அரசையோ.. பாப்பானுக்காக மட்டுமே செயல்படும் மத்தியரசையோ நீதிமன்றத்தையோ நம்புவதில் எந்த பிரயோசனமும் இல்லை ..இனி.. போராட்டம் ஒன்றே தீர்வென்றெண்ணி.. வீதிக்கு வந்திருக்கிறார்கள்..
..
சேதாரம் பாவம் நம்மில் தோன்றாவிடில் தேசத்தில் தீதினி நீங்காதடி சகியே..
#Royal_salute..
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment