Sunday, September 17, 2017
தினகரன்
தினகரன் ..
இன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பு சிறந்ததாய் இருந்தது.. மிக எளிமையான கேள்வி கேட்டார் சசிகலாவால் தரப்பட்ட முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் முதல்வராக எம்எல்ஏக்களை கூட்டத்தை கூட்டி வேண்டுமானால் என்னிடமிருக்கும் 19 பேரையும் அனுப்பி வைக்கிறேன் மீண்டும் முதல்வராக தேர்வாகி வரட்டும் நான் வீட்டில் ஓய்வெடுத்துக் கொள்கிறேன் ..
..
எடப்பாடி நினைத்திருந்தால் முதல்வராகி விட முடியுமா சசிகலா கூவத்தூரில் அடைத்து வைத்திருக்காவிடில் அதிமுகவே இல்லாமல் போயிருக்கும் இன்றைக்கும் சசிகலாவை வேலைக்காரி கொலைக்காரி என்றெல்லாம் பேசுகிறவர்கள் முன்பு எப்படியெல்லாம் விழுந்து கிடந்தார்கள்.. மக்கள் எல்லாவற்றையும் கூர்ந்து கவனிக்கிறார்கள் .. தந்தை பெரியாருக்கு வணக்கம் செலுத்தாமல் மோடிக்கு விழுந்து விழுந்து வாழ்த்துச்சொல்லும் இவர்கள் காரியம் நடக்குவரை காலைப்பிடிக்கிற கேடுக்கெட்டவர்கள்.. இன்று சசிகலாவை குறைப்பேசி திரிபவர்கள் நாளை மோடியையும் பேசுவார்கள் ஆனால் அப்போது முகவரி இல்லாதவர்களாக போய்விடுவார்கள்..
..
இந்த கேடுக்கெட்ட ஜென்மங்களை விட தினகரன் மேலானவராக தெரிகிறார் அதுமுக கட்சியினரிடம் இவர்கள் (எடப்பாடி,பன்னீர்) செயலால் நல்லவராக தெரிய ஆரம்பித்திருக்கிறார் .. கெட்டவர்கள் சில கேடுக்கெட்டவர்களால் நல்லவராக தெரிவதைப்போல தினகரனின் அரசியல் முதிர்ச்சியாய் தெரிகிறது .. எல்லாம் கைவிட்டு போன பின்னும் கூலாக எடுத்துக்கொண்டிருப்பதை அவரின் பேச்சு உணர்த்தியது..
..
சசிகலாவை வேலைக்காரி என்கிறார்கள் அந்த வேலைக்காரி எஜமானியின் காலில் எப்போதாவது விழுந்திருக்கிறாரா.. ஆனால் இந்த வேலைக்காரியின் காலில் விழாதவன் யாரேனும் உண்டா.. சொந்த பிள்ளையின் மீது சத்தியம் செய்தவர் இப்போது கொலைக்காரி என்கிறாரே.. பதவி படுத்தும் பாடு பதவிக்காக சொந்த குடும்பத்தையே .......கொடுப்பார்கள் போலும் .. எச்சைகள்
இந்த கேடுக்கெட்ட அயோக்கியர்கள் அரசியலில் இருந்த அகற்றபடவேண்டும் ..அதற்காகவேணும்
தினகரன் அதிமுகவை கைப்பற்றவேண்டும்..
எங்கள் எதிரியை நாங்கள் தான் தீர்மானிப்போம்..
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment