Wednesday, September 13, 2017
தலித் அரசியல்
ரஞ்சித் சின்னபையன் சினிமாக்காரன் அவரைப்பற்றி என்னிடம் கேட்கிறீர்களென சீறுகிறார்..சீமான்
ரஞ்சித்தின் அன்றைய நடவடிக்கையில் சிறுதும் உடன்பாடில்லை அதற்காக அவரின் கருத்தோடு உடன்பாடில்லையென்றல்ல பொருள்..
எங்கே எதை கதைக்கவேண்டுமென்று அறியாததே விமர்சனத்திற்குரியதாகிறது..
..
நிச்சயமாக தலித் சமூகத்தை புறக்கணிக்கிற தமிழ் தேசியமென்பதே பொய்யான கட்டமைப்பு என்பதில் இருவேறு கருத்தில்லை.. அது குறித்து பேசுவதற்கு முன் ரஞ்சித் மிக சுலமாக நீட் தேர்விற்கெதிராக உயிர்நீத்த அனிதாவின் மரணத்தை குறுகிய வட்டத்திற்கு அடைத்திட முயற்சித்ததை ஏற்கமுடியாது இந்த செயலுக்கும் எச்.ராசா நாராயணன் போன்றோரின் செயலுக்கும் பெரிய வித்தியாசமில்லை.. அவர்களும் அதை தலித் என்ற வட்டத்திற்குள் அடைத்து தலித்க்கள் மிகவும் பலவீனமானவர்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்த நினைத்தார்கள் அதைவிட மற்றவர்கள் ஏன் தற்கொலை செய்துக்கொள்ளவில்லையென்ற மடைமாற்றை செய்து வந்த வேளையில் தான் ரஞ்சித்தின் பிரவேசம் அதை எளிமையாக்கியது.. ரஞ்சித் கருத்துக்கூற முழு உரிமையும் உடையவர் அவரின் கோபம் கூட நியாயமானது ஆனால் அதை சொல்லவேண்டிய நேரம் இதுவல்ல.. அதைவிட அவர் யாரை எதிர்த்து களமாடி இருக்கவேண்டும் என்பதும் இங்கே பேசபடவேண்டும்..
..
சீமானின் தமிழ் தேசியமென்பது சாதிய சிந்தனையில் வளர்வது அவரின் ஆரம்பகாலந்தொட்ட நடவடிக்கைகள் திராவிட எதிர்ப்பென்ற பெயரில் பாசிச சிந்தனையாளர்களுக்கு சித்தாந்தத்திற்கு வழி ஏற்படுத்தி தரும் ஒர் ஏற்பாடு அவ்வளவுதான் அவரது அரசியல்.. ஆனால் ரஞ்சித் பன்றவர்களின் உள்ளகுமறல் இந்த சாதீய கட்டமைப்புக்கு எதிரான கருத்தியல்.. ரஞ்சித் பேசிய இடம் தவறே தவிர கருத்து மிக சரி..
அம்பேத்கரை மட்டுமே முன்னெடுத்தால் போதுமென்கிற குறுகிய சிந்தனை தமிழகத்தில் என்றில்லை இந்தியாவில் பெரிய மாற்றத்தை கொண்டுவந்திட முடியாது.. கொள்கையில் சற்று மாறுப்பட்டிருந்தாலும் களம் பொதுவானதாக இருக்காதவரை நிச்சயமாக தீர்வென்பதே இல்லை..
ரஞ்சித்தின் கருத்து பார்பனர்களுக்கு கோபம் வரவேண்டுமே தவிர சீமானுக்கில்லை.. இந்த சாதீய கொடுஞ்செயலுக்கு எதிராக தான் பேசினார்.. ஆதிக்க மனப்பான்மை இடைசாதிக்காரனிடம் குடியேறி இருப்பததைதான் அவர் சொன்னார் அதை உண்மையென்று சீமான் போன்ற அரைவேக்காடுகள் கூவி திரிகிறது..
..
எந்தளவிற்கு மதத்தை சாதியை வேரறுக்க வேண்டுமோ அதே,அளவு இன்னும் சொல்லபோனால் பாசிசத்தை எதிர்க்கும் அதே வீரியத்தோடு இடைசாதி வெறியர்களையும் எதிர்க்கவேண்டும்..
..
#விவரகேடுகள்..
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment