Monday, September 4, 2017
தமிழிசை
நிர்மலா சீதாராமனை ஏன் விமர்சனம் செய்கிறீர் தமிழகத்திலிருந்து ஒருவர் அதுவும் ஒரு பெண் பாதுகாப்புத்துறை அமைச்சராகியிருக்கிறார் பாராட்டவேண்டாமா என்கிறார்.. தமிழிசை கூடவே மோடியை விமர்சித்தால் பொறுத்துக்கொள்ள முடியாதென்கிறார்.
விமர்சனத்திற்கு அப்பாற்ப்பட்டவரென்று யாரும் இல்லை..
..
நிர்மலா தமிழக மக்களின் பேராதரவை பெற்றவரா ..மக்களின் பிரச்சனைக்காக போராடியிருக்கிறாரா.. தமிழகத்தில் இருந்து பாஜகவிற்கு பிராமணர் ஒருவர் தேவைபட்டார் அதனால் தான் ஆந்திராவிலிருந்து அழைத்துவந்தார்கள்.. மக்கள் செல்வாக்கோடு தன் தொகுதியில் யாருடைய ஆதரவுமில்லாமல் குறிப்பிட்டளவு வாக்குகளை பெற முடியுமென்கிற பொன்.ராதாவிற்கு இணை அமைச்சர் பதவி.. சமீபகாலம் வரை யாரென்றே தெரியாத நிர்மலாவிற்கு கேபினட் பதவி.. இதை ரோசமுள்ள நாடார் சமுதாயத்தை சார்ந்த தமிழிசை போன்றோர் எதிர்த்திருக்கவேண்டாமா.. அதை செய்யாமல் ஏன் எதிர்க்கிறீர் என்கிறீர்.. ஆம் எதிர்க்கப்படவேண்டியவர்தான்.. நேரடியாக கேள்வி கேட்டால் சிங்கப்பூரில் உங்களால் கேள்வி கேட்கமுடியுமா என திமிரோடு பதில் சொல்கிறவரை.. தமிழர் நலனுக்கு எதிராக செயல்படுபவரை.. கடைசி வரை நம்பவைத்து கழுத்தறுப்பவரை விமர்சிக்காமல் எப்படி.. இவர்களுக்கெல்லாம் ராஜகுருவான ராஜாஜியையே கேள்வி கேட்டவர்கள்.. நாங்கள்..
எந்தவொரு கேள்வியை எதிர்க்கொண்டாலும் பார்பன திமிரோடு பதில் சொல்லும் நிர்மலாவை விமர்சிப்பது எப்படி தவறாகும்..
..
திரு.மோடி.. இதுவரை பாராளுமன்றத்தில் கேள்விகளுக்கு பதில் தந்திருக்கிறாரா.. 64 நாடுகளுக்கு சென்று வந்தவர் அதுகுறித்து நாடாளுமன்ற சபைக்கு தகவல் சொன்னாரா.. என்னென்ன நல்ல திட்டங்களை நாடோடி.. நாடோடி கொண்டுவந்திருக்கிறேனென சொல்லவேண்டாமா..பாஜக எம்பிக்கள் கூட்டத்திலேயே எதிர்கேள்வி கேட்ட எம்பியை கேள்வியெல்லாம் கேட்ககூடாது பாஜக ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை படித்துவிட்டு வாருங்கள் என்கிறாரே .. ஆனால் மக்கள் மன்றத்தில் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் .. சொல்லாதவரை விமர்சனங்களை எதிர்க்கொள்ளதான் வேண்டும்..
..
இதில் அனிதாவை ஏன் சுயநிதி கல்லூரியில் சேர திமுக உதவலாமே என தமிழிசை சொல்கிறார்.. அனிதா கேட்டது சலுகையல்ல உரிமை.. அதெல்லாம் கிட்டுக்களின் வேலை.. எதைவேண்டுமானாலும் பேசலாம் என்று தமிழிசைக்கு உரிமை வழங்கியிருக்கிற அரசியல்சாசனம் ..அதை விமர்சனம் செஸ்யும் உரிமையும் வழங்கியிருக்கிறது..
..
இது ஜனநாயகநாடு
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment