Thursday, September 21, 2017
புரிதல் வேண்டும்
புரிதல் இல்லாமை..
புரிதல் இல்லையெனில்..நம்பிக்கையின்மை வரும்..
இல்லறமென்பது இணைந்து வாழ்தல்.. நம் இணையர் நமக்குள்ள உரிமைகள் அவருக்குமுண்டென அறிதல் மிக முக்கியம்..
//என் மதிப்பிற்குரிய ஆசிரியை
தோழி Uma Ram அவர்களின்
கணவன் விரும்பாத
நட்பு மனைவிக்கும்
மனைவி விரும்பாத
நட்பு கணவனுக்கும்
தேவையா???.. என்ற பதிவிற்கு நானிட்ட பின்னோட்டம்..
..
புரிதல் என்பதென்ன என்பதில் நாம் குழம்பி நிற்கிறோமென எண்ணுகிறேன் விட்டுக்கொடுத்தலோ அல்லது நம் கருத்தை ஏற்று கொள்வதில் சமரசம் செய்வதோ அல்ல புரிதல் தன் இணையரின் (இருசாராருக்கும்) எண்ணம் செயல் இரண்டிலும் வேறுப்பட்ட சிந்தனை இருக்கும் அவர்களின் கருத்தோடு முற்றுலுமாக மாறுபடலாம் அதை மீறிய அன்புதான் நம்மை இணைத்திருக்கிறதென்பதில் உறுதியோடு இருத்தல் வேண்டும். ஒவ்வொருவருக்கும் தனித்தனியே சில தனியுரிமைகளில் தலையிடுவதும் என் கருத்தோடு ஒத்துபோகவேண்டுமென்பது கூட ஒருவகை அடிமைத்தனம்.. நல்லதை எடுத்துச்சொல்வதென்பது வேறு தவறான பாதையிது என சுட்டிக்காட்டுவதும் தவறில்லை ஆனால் ஒருவகை ஆதிக்க செயல்பாடோடு நடந்துக்கொள்வது .. இணையர் இருவருக்குமே சரியானதல்ல..
..
நாம் துணைவியர் மனைவியர் என்றே அழைத்து பழகி... நமக்கு இணையானவரென்பதை மறந்துவிடுகிறோம் அதே போல் நாம் துணையாக வந்தோம் என்ற அடிமை சிந்தனையிலேயே வார்த்தெடுக்க படுவதால் தமது தனி விரும்பங்கள் கூட மறக்கடிக்கபடுவதோடு ஆழ புதைத்து விடுகிறோம் சின்ன சின்ன விடயங்களில் கூட கருத்துக்கூறவோ அல்லது எதிர்த்து பேசவோ முடியாமல் வாழ்கிறவர்களை நிறைய கண்டிருக்கிறேன்.. கணவரை சார்ந்து நிற்கவேண்டிருப்பதால் விரும்பி ஏற்கிற அடிமைத்தனத்தில் ஊறிப்போனதால் நட்பை கூட ஒருவித கசப்போடு அணுகவேண்டியிருக்கிறது..
..
நிற்க..
இணையர் என்று உணர்ந்தால் அவருக்கும் அவரின் செயல்பாடுகளில் முடிவெடுக்கு உரிமை உண்டெனறிந்து சமமானவராக நடத்தினால் .. யார் வந்தாலும் நம்மை பிரித்திட முடியாதென நம்பிக்கை பிறக்கும்.. நட்பென்பது உயர்ந்ததென உணர்த்தும் .. நல்லறமாய் அமையும்..
..
புரிதல் நம் இணையர் நமக்கு சரிசமமானவர் என்கிற உண்மையை உணர்ந்து அவரின் உரிமைகளில் தலையிடாமல் இருந்தால்..
இல்லறம் நல்லறமாய் இருக்கும்..
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment