Wednesday, September 27, 2017

நாளுக்கொரு பேச்சு

நாளுக்கொரு பேச்சு.. தம்பிதுரை மீண்டும் இணைவார்கள் என்கிறார்.. ஜெயலலிதா மருத்துவமனை தொடர்பான விடயங்களை நான் விசாரணை கமிஷனில் சொல்வேன் என்கிறார்.. அதெல்லாம் கிடக்கட்டும்.. மூன்று தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல் சின்னம் தொடர்பான ஆவணத்தில் கைநாட்டு வைத்த நபர் யார் ஜெயலலிதாவின் கைநாட்டு எனில் அவர் சுயநினைவோடு இருந்தாரா.. ஏனெனில் மூன்று தினங்களுக்கு பிறகு ஜெயலலிதா சுயநினைவோடு இல்லையென்கிறார் அவரின் அண்ணன் மகன் ஜெ.தீபக்.. அதற்கு முன் காவிரி விடயமாக அதிகாரிகளோடு ஆலோசித்தாரென்ற அறிக்கை உண்மையா.. இதெற்கெல்லாம் பதில் வேண்டும்.. .. உண்மைக்கு மிக தூரம் அதிமுகவினர் அவர்கள் வாயில் எப்போதும் ஏமாற்றும் வார்த்தை பிரயோகம் தான் வரும் .. எதையும் ஆலோசித்து பேசும் ஆற்றலோ அறிவோ அவர்களுக்கில்லை.. அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் அறிவுசார் கூட்டமாகவோ , கொள்கை இனப்பற்றால் இணைந்தவர்களோ இல்லை .. கருணாநிதி எதிர்ப்பு அல்லது கவர்ச்சி இரண்டை தவிர வேறொன்றும் இல்லை.. அவர்கள் யாருமே விவரமாக பேசகூடியவராகவோ, அறிவைக்கொண்டு விவாதிக்க தகுந்தவர்களோ அல்ல.. முன்னுக்குபின் பேசும் விவரகேடுகள் அவர்களின் தலைவரே தன் ரசிகர்களை கத்தி வைத்துக்கொள்ள சொன்னவர்தான்.. .. ஜெயலலிதா மரணத்தின் மர்மம் விலகவேண்டுமாயின் அதற்கு திமுக ஆட்சிக்குவரவேண்டும்,அப்போதுதான் இன்றைக்கு கூப்பாடு போட்டுதிரியும் கழிசடைகள் யாரெல்லாம் மரணத்தில் பங்குண்டென அறிய முடியும்.. ஜெயாவின் சுவாசகருவி அகற்றிய விவரம் பன்னீருக்கு தெரியுமென RTI மூலம் வெளிவந்திருக்கிறது.. இவர்தான் தர்மயுத்தம் கேட்டவர்.. இவர் மட்டுமல்ல.. பாஜகவின் வெங்கைய்யா அப்போலோ அதிபர் கூட விசாரிக்கப்படவேண்டும்.. ஏன் 1 ந்தேதியே ஆருடம் சொன்ன பொன்.ராதாவையும் விசாரித்தால் முழுவிவரம் வரும்.. அவர் சாவின் மர்மம் விலகவேண்டுமென்பதைவிட அரசியலமைப்பையே கேலிகூத்தாக்கி சுயநினைவில்லாதவரின் கைரேகையை உருட்டிய செயலெல்லாம் மக்கள் அறியவேண்டும்.. மோடியின் இணையத்தில் ஜெயாவின் மரணம் குறுத்து விமர்சனம் வருவதாக சொல்கிறார்.. அப்படியெனில் மோடியிடம் விசாரணையை கொண்டுபோகலாம்... .. நீண்ட நாட்கள் உண்மையை மறைத்தோ பொய்யை அலங்காரத்தோ வைக்கமுடியாது அதுவும் இந்த அறிவிலிக்கூட்டத்தினரால் அதை கொண்டு நடக்கமுடியாது .. மாறி மாறி பேசி வீதிக்கே கொண்டுவருவார்கள்.. இவர்களின் செயல்கள் இவர்களை காட்டிக்கொடுத்துவிடும்.. அப்பட்டமான பதவிவெறியும் பேராசையும் அன்றி வேறில்லை .. .. #உண்மையை_மூடிமறைக்கமுடியாது ஒருநாள் வெளிவந்தே தீரும்.. .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment