Sunday, October 1, 2017
வெங்காயம்
பார்பனன் உண்ட எச்சிலையில் சூத்திரர்கள் உருள கர்நாடக அரசு தடை..
பாஜக கடும் எதிர்ப்பு.. கொஞ்சமேனும் அறிவுள்ளவன் இந்த செயலை கண்டிக்கவேண்டும் அடுத்தவனின் எச்சிலையை புனிதமாக்குவது அயோக்கியத்தனமென உணர்ந்திருக்கவேண்டும்.. எச்சில் கிருமியென அறிவியலையாவது போதித்திருக்கவேண்டும்..
அதைவிடுத்து கண்டனம் செய்கிறவர்களை என்னவென்று அழைப்பது.
..
மூடநம்பிக்கைகளுக்கெதிராக கர்நாடகம் சமீபகாலமாக தொடர்ந்து தடையை விதித்து வருகிறது .. சடங்கென்ற பெயரில் மனிதனை மிக மட்டமாக சித்தரிக்கும் செயலை.. தன்னை விட தாழ்ந்தவனாக்க முயற்சிக்கு செயலை தீண்டாமையை தடுத்து நிறுத்துவது அரசின் கடமை.. இங்கே தமிழகத்தில் தலைகீழாகி போனது.. எல்லாருக்கும் முன்பே பகுத்தறிய சொன்ன மண்ணில் சில பன்னாடைகள் ஆட்சிக்கு வந்ததும்..மண்சோறு தொடங்கி குழந்தைகளுக்கு அலகு குத்துகிற செயலை அரசியலுக்காக செய்ய தொடங்கி .. அதை வியாபாரமாக .. தங்களின் அரசியல் பயணத்தின் படிகளாக்கிய முட்டாள்தனத்தை அதிமுக தொடர்ந்து செய்து வருகிறது..
தெய்வநம்பிக்கை அவரவர் விரும்பமாக இருக்கவேண்டுமே தவிர யாரையும் உயர்த்தியோ தாழ்த்தியோ.. யாருடைய கவனம் தன்பக்கம் வேண்டுமென்பதற்காகவோ இருந்தால் அது தூய்மையான பக்தியாக இருக்காது அவன் அவன் நம்புகிற இறைவனையே ஏமாற்றுகிறானென்றே பொருள்..
..
எந்த உயரத்திலிருந்தாலும்.. பிரபலமாக மக்களால் விரும்பபட்டாலும்
மதம் தலைக்கேறியால் செய்வதறியாது போவார்கள் என்பதற்கு சமீபத்திய எடுத்துக்காட்டு மலையாள நடிகர் #சுரேஷ்கோபி..
அடுத்தஜென்மத்தில் நம்பிக்கை இருக்கிறது.. அதில் பார்பனனாக பிறந்து ஐயப்பனை தொட்டு தொழவேண்டும்..என உளறிவைத்திருக்கிறார்..
ஏனடா நான் மட்டும் தொட்டு தொழ முடியவில்லையென கேள்வி எழுப்பியிருந்தால்
அவரின் செயல்பாடுகளை மெச்சலாம் அதைவிடுத்து தன்னை தாழ்த்துக்கொள்ளும் செயல் மடத்தனம்.. இங்கே இசைஞான்
இளையராசா கூட இதுபோல் இந்த இழிபிறவியை துடைக்க பிராயசித்தம் செய்கிறேன் என்றார்..
தன்னைவிட எவனும் மேலில்லை என்று தோன்றியிருக்கவேண்டும்
அண்ணல் அம்பேத்கர் சொன்னதைப்போல
எவனுக்கும் நான் அடிமையில்லை எவனும் எனக்கடிமையில்லை.. அதைவிடுத்து கடவுள் பக்தியென்ற பெயரில் தாழ்த்திக்கொள்ளல்
இறை நம்பிக்கையையே கேலிசெய்வதைப்போல
அவரின் இறைநம்பிக்கையென்பதே மூடத்தனத்தை நம்புவதாகிறது...
..
மதங்கள் எல்லாம் சில நல்லவற்றை போதிக்கிறது ஆனால் சடங்குகளென்ற பெயரில் ஏற்றதாழ்வை அறிவுக்கொவ்வா செயல்களை ..
மனிதன் இடைபுகுத்தி அதுதான் வழி மார்க்கமென்கிற அறிவிலித்தனத்தை நம்பவைக்கிறான்.. அதை கண்டு விழித்தெழுபவனே அறிவுடையோனாகிறான்..
..
#மூடபழக்கங்கள்_முட்டாளுக்குரியது..
அட.. வெங்காயம்..
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment