Monday, September 11, 2017

மூளைச்சலவை

ரஷ்யாவின் ஜெனரல் கொன்ட்ராசோவ் the next என்ற குறிப்பில் சொல்வார்.. முதலில் மனிதனின் மூளையோடும் பிறகு அவனின் மனதோடும் (இதயத்தோடு) மட்டுமே பேசவேண்டும் மறந்துகூட அவன் மூளையை கிளறிவிட கூடாது.. அதை மந்த நிலையில் வைத்திருக்கவேண்டும்.. மூளைச்சலவை குறித்து கொன்ட்ராசோவ் .. .. நேற்றைய தினம் நண்பர் தவ்ஹீத் ஜமாத் நிறுவனர் பி.ஜே வின் மறுப்பை பதவி செய்திருந்தார் அதில் மிக சாதூர்யமாக அறிவுபூர்வமாக பேசுவதாக எண்ணி மூளைச்சலவை செய்தார்..எதிர்முனையில் பதிவாகி இருந்தால் ரிங்டோன் எப்படி கேட்கும் நான் பதிவு செய்திருந்தால் தான் அது சாத்தியம் என்றார்.. நான் போனாலும் தவ்ஹீதில் அல்லாவிற்காக இருப்பர் எனக்காக கூடிய கூட்டமல்ல..என்று கதைத்தார்.. .. ஆரம்பத்தில் பாசிடீவ் Positive மட்டுமே தரவேண்டும் பிறகு வரும் நெகட்டீவ் Negative எல்லாம் பாசிடீவாகவே கணக்கில் கொள்ளப்படும்... அவரின் கூற்றை மறுப்பதல்ல நமது நோக்கம்.. அவர் யோக்கியனாகவே இருக்கட்டும் ஆனால் நான் மட்டுமே யோக்கியன் என்று கதைப்பதைதான் நாம் பேசவேண்டியிருக்கிறது.. எதிர்முனையில் பேசியவர்களை தன் கட்டுக்குள் வைக்க திரும்ப திரும்ப மிரட்ட ஏன் இவரே அதை பதிவு செய்திருக்க கூடாது அது வேறொரு ஆள் மூலம் வெளிவந்திருக்க கூடாதென்கிற சாரசரி சிந்தனை கூட இல்லாமல் பேசினார் .. .. பி.ஜே வேண்டப்பட்டவர் பணமும் வீடும் வாங்கிக்கொண்டு பதிவானதை திரும்ப தந்துவிட்டதாகவும் இடையில் யாரோ அதை வெளியிட்டிருக்கலாமென்ற கருத்தை மறுக்கவில்லை போலிஸ் தரப்பு இதில் உண்மை இருக்கூடுமென்பதாக குமுதம் ரிப்போர்டர் வெளியிட்ட செய்தியை மறுத்து நஷ்ட ஈடு வழக்கு தொடரலாம்.. அல்லது நிபந்தனையற்ற மன்னிப்பு கோர செய்யலாம்.. இதையெல்லாம் விட சாமானியனின் கேள்வி இவர் ஏன் காவல்துறையையோ நீதிமன்றத்தையோ அணுகி என் பெயருக்கு களங்கம் விளைவிக்க பொய்யான ஆடியோவை வெளியிட்டிருக்கிறார்கள் விசாரித்து நீதி வழங்கவேண்டுமென சொல்லவில்லை.. .. நான் தூய்மையானவனென நான் உருவாக்கி அமைப்பு சொன்னால் போதும் என்பது ..என் அப்பன் சொந்தகாரன் இருக்கும் பஞ்சாயத்தில் விசாரிக்க சொன்னால் என்ன தீர்ப்பு வருமென தெரியாதா.. நானே விசாரித்து நானே தீர்ப்பு சொல்லி நான் நிரபராதி ஆவேன் என்பதை போல.. .. திருடுன ஆட்டுக்குட்டியில பிரியாணியை போட்டிட்டு தீர்ப்பு சொல்லுங்கிற மாதிரி.. பயமில்லையெனில் நேரடியாக கமிஷனரை சந்தித்து விசாரிக்க சொல்லியிருக்கவேண்டும் காலதாமதம் செய்து ஆற போட்டுவிட்டு இப்ப பேசுவது அயோக்கியத்தனம்.. இப்போதும் அவரின் தனிநபர் விடயத்தில் கருத்து சொல்லவோ, அல்லது அவரின் சொந்த விடயங்களில் தலையிடவோ வரவில்லை ஆனால் தான் மட்டும் யோக்கியன் என்பதை தான் விமர்சிக்கவேண்டியிருக்கிறது.. .. #மூளைச்சலவை… .. தோழர். ஆலஞ்சி

No comments:

Post a Comment