Sunday, January 8, 2017

பாவம தமிழிசைகள்

இந்த வார்த்தை ஏதோ போகிற போக்கில் சொல்லிவிட்டு போனதல்ல.. திருமதி தமிழிசை நிறைய உளறியிருக்கிறார் அவையாவும் அவரின் அரசியல் ஸ்தரதன்மையை நிலைநிறுத்த என கருத்தில் கொண்டாலும் இன்றைய பேச்சு தன் முதலாளியின் வார்த்தை அப்படியே ஏற்று சொல்லும் அடிமையின் பேச்சை போல உள்ளது.. .. ஆர்எஸ்எஸ் சொல்படி கட்சியை நடத்துகிற பாஜக பிரதான முடிவுகளை எடுக்க நினைக்கிற போதெல்லாம் இதுபோன்று #பாவபட்டவர்களை கொண்டு வேவு பார்க்கும்.. அப்படிதான் தமிழிசையை கொண்டு நாடி பார்க்கிறது.. எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறைகூறுகிறீர்களே என்ற சொல் அடிதளம் அமைக்க பயன்படலாம்.. இதை யாரும் கண்டுக்கொள்ளாமல் இருப்பதலிருந்தே பாசிசத்தின் சொல் இங்கே மதிப்பிழந்து கிடப்பதாக தோன்றினாலும்.. தொடர்ந்து இதுபோல் நாடகம் அரங்கேறும் .. மெல்ல சிறகைவிரிக்க தொடர்ந்து முயலும்.. நாம் அவ்வப்போது சிறகை வெட்டிக்கொண்டே இருப்போம்.. மீறி எழுந்து பறக்க நினைத்தால் #தடிக்கொண்டு அடித்து சிறகொடிப்போம்.. .. இன்றைய அரசியல் சூழல் பாஜக பயன்படுத்த நினைக்கும் அதிமுகவின் பலவீனமான தலைமையும் , அதிமுகவிற்கிருக்கும் நாடாளுமன்ற பலமும் கருத்தில் கொண்டு இதைவிட்டால் வேறு சர்ந்தர்ப்பம் கிடைக்காதென்பதால் வெகு வேகமான செயல்பட நினைக்கிறது.. அதற்காக தான் ஒரு தகுதியுமில்லாத தீபாவை பார்பன ஏடுகள் பெரிதாக்கி காட்டுகின்றன.. ஆனால்.. இவையாவும் அடிபட்டுபோகும். காரணம் மிக சிரமத்தோடு கவனமாக சுயமரியாதை நிழலில் நின்று அந்த பெருங்கிழவன் திட்டமிட்டு செதுக்கியிருக்கிறான் அறிவின் துணைக்கொண்டு.. .. பாசிசம் தமிழிசை போன்றவர்களை கூர்படுத்தும் .. ஆனாலும் வீழ்த்தும் வல்லமை நமக்குண்டு.. மறைந்திருந்தே தாக்கும் பழக்கமும் ,மூடியகதவும் ,மடிக்கப்படாத படுக்கையும் மட்டுமே ஆயுதமாய் கொண்டவர்களின் அஜந்தா இங்கே பலிக்காது.. எத்தனை முகமூடி அணிந்துவந்தாலும் எவ்வளவு அரிதாரம் பூசி வந்தாலும் இங்கே எடுபடாது.. ஆரியமே.. .. #பாவம்தமிழிசைகள்.. .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment