Thursday, January 5, 2017
கலைந்து செல்லும் மேகம்..
சசிகலா நடராஜன் அரசியல் சாபகேடு என்றார் நண்பர்
ஆமாம் என்றேன்.. உடனே பெண்கள் அரசியலுக்கு வருவதற்கு எதிர்ப்பாக மாறிவிடாதா அல்லது சாமானியர் பொதுவாழ்விற்கு வருவதை மறுப்பது போலாகாதா என்றார்..
..
அப்படியில்லை..
யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் பொதுவாழ்வில் அர்ப்பணிப்போடு மக்கள்பணியாற்றலாம் ஆனால் அது நேர்மையான பிரவேசமாக இருத்தல் வேண்டும்.. நோக்கமும் செயலும் நேர்மையானதாக.. படிப்படியான மக்கள் சேவையின் மூலம் அமைந்ததாக இருந்தல் வேண்டும்.. செல்வி ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசம் கூட ஏறக்குறைய அப்படிதான் அமைந்திருந்தது.. அரசியலுக்கு எம்ஜிஆர் அழைத்துவந்த போது சிறுசேமிப்பு துறையில்தான் சிறியதொரு பதவி தந்தார்.. ஏன் எம்ஜிஆரின் அரசியல் பிரவேசத்தில் முதன்முதவில் சிறுசேமிப்புத்துறைத்தலைவராக தான் நியமித்தார் கலைஞர்.. ஜெயலலிதா படிப்படியாக கொ.ப.செ. என தொடங்கி எம்பியாகி.. எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு போராடி அதன் நின்று கட்சியின் பொதுசெயலரானார்..
ஆனால் சசிகலா அப்படியில்லை.. ஏதோ கம்பெனி முதலாளி இறந்துபோனால் அதிக பங்குகளை வைத்திருக்கும் பங்குதாரர் கம்பெனி எம்.டி ஆவதுபோல சசிகலா பணத்தை வைத்து கட்சியை கட்சியின் முக்கியஸ்தர்கள் என்று சொல்லபடுகிறவர்களை (இங்கே யாரும் முக்கியஸ்தர்கள் இல்லை எல்லோருமோ பூஜ்யங்கள் என்பது வேறுவிடயம்) வாங்கி கட்சியை முதல்வர் பதவியை கைப்பற்ற எண்ணுவதை யாருமே விரும்பவில்லை குறிப்பாக அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்கள் கூட.. அதுதான் உண்மை..
..
இப்போதெல்லாம் உடனடியான தீர்வு அல்லது பலன் வேண்டுமென்று எண்ணுகிற அவசரம் சசி போன்றவர்களை உருவாக்குகிறது என்று நினைக்கிறேன்.. ஆனால் சசிகலா நீண்டகாலமாக திட்டமிட்டே இதை அடைந்திருக்கிறார்.. ஆனால் ஜெயலலிதா சிறிய பதவியை கூட தராமல் அவரை வைக்கவேண்டிய இடத்தில் வைத்திருந்தார் ..
ஆட்சி அதிகாரம் பணமிருந்தால் யார் வேண்டுமானாலும் வரலாமென்பதை காட்டுகிறதே தவிர பொதுவாழ்வில் அர்ப்பணிப்பு கொஞ்சமும் இல்லை..
..
இவர் போன்றவர்கள் காலபோக்கில் கரைந்து போயிருக்கிறார்கள்
இவர்..
மழை தரும் மேகமல்ல..
கலைந்து செல்லும்.. மேகம்..
..
#கானல்நீர்..
..
ஆலஞ்சி மன்சூர்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment