Saturday, January 14, 2017
கலாச்சார திணிப்பை எதிர்ப்போம்
ஏன் பார்பனர்களும், பாரதிய ஜனதா ஏன் ஜல்லிக்கட்டை ஏன் எதிர்க்கிறார்கள் ..
சற்று யோசித்தால் பிடிகிட்டும் ..இன்று அதிகாலை எனது நண்பர் மகர சங்காராந்தி வாழ்த்துக்கள் சொன்னார்.. இன்றைக்கு கூட காலை முகநூலை திறந்தவுடன் சங்கராந்தி வாழ்த்தை சொல்லி எம் மீது கலாச்சார திணிப்பை செய்தது..
..
தமிழகத்தை தவிர்த்து பிறமாநிலங்களில் கொண்டாடப்படும் மகா சங்கராந்தியை நம் மீது திணிக்கும் நடவடிக்கையாக தான் பொங்கலோடு சார்ந்த விழாக்களை தடைசெய்து சிதைக்க எண்ணுகிற செயலாகதான் தோன்றுகிறது ஜல்லிக்கட்டு மீதான பிடிவாத போக்கில் பின்னில் கலாச்சாரத்தை அழிக்கும் செயலாகவே எடுத்துக்கொள்ளவேண்டும்..
அறுவடைநாளோடு சூரியனின் கதிர்திருப்பத்தை
(Solstice) இணைத்து நம் மீதான கலாச்சாரப்போரை தொடுக்கிறார்கள்.. (சங்கராந்தி) சங்கரமண என்ற சமஸ்கிருத சொல்லிற்கு நகர தொடங்கு என பொருள் அதாவது தொடக்கம் என்றும் பொருள் கொள்ளலாம்.. ஆனால் அதை ஆண்டின் தொடக்கமாக ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள்.. இதிலிருந்து ஒரு உண்மையும் தெரியும் தமிழறிஞர்கள் ஏன் ஆண்டின் தொடக்கம் #தைதிங்கள் என்றார்கள் என்பது புரியும்.. ஆனால் கற்பனையாக எழுதி வைத்ததை பிறர் நம்பவேண்டுமென்பதற்காகவே அவர்களின் மொழியில் வரும் உண்மைகளை கூட ஒப்புக்கொள்வதில்லை..
..
மகா சங்கராந்தியை அவர்கள் கொண்டாடுவதிலே எங்களுக்கு சங்கடமில்லை ஆனால் இந்தியா முழுவதும் அதை திணிக்கவேண்டுமென்பதற்காக செய்யும் அழிச்சாட்டியங்களை காணும் போது கோவம் வருகிறது.. பொங்கலை சாதிமதத்தை மீறி உலகெங்கும் வாழும் தமிழர்கள் கொண்டாடுகிறார்கள் .. #உத்தராயன் என சூரியன் வணங்கும் விழாவாக குஜராத்தியர்கள் கொண்டாடிவந்ததை அவர்கள் மீது சங்கராந்தியை திணித்து அவர்களின் கலாசாரத்தை சிதைத்ததைப்போல தமிழர்களின் பண்டிகையை / பண்பாட்டை சிதைக்க முடியாது.. பல்வேறு நாடுகளில் வேரூன்றி நிற்கிற தமிழனும் தமிழர் கலாச்சாரமும் எங்களின் இன உணர்வோடு சம்பந்தப்பட்டது..
..
கடைசி தமிழ் உணர்வாளர்கள் உள்ளவரை நீங்கள் நிறைய தண்ணீர் குடிக்கவேண்டிவரும்..
திமிறி எழுந்தால் திசை தெரியாது போவீர்..
..
#அத்துமீறினால்_அடங்கமறுத்தல்_எங்கள்இயல்பு..
..
ஆலஞ்சி மன்சூர்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment