Tuesday, January 31, 2017

என்இனத்தின் தளபதி

தளபதி மிளிர்கிறார்.. மிகவும் பக்குவப்பட்ட உரையாடல்களும் நடத்தையும் அவரை மேலும் மேலும் உயரத்திற்கு கொண்டுவருகிறது.. நாங்கள் தவறுசெய்தால் அதே தவறை நீங்களும் செய்யவேண்டுமா.. என்று சட்டமன்றத்தில் கேட்கிறார்... .. தளபதியாரின் சமீபத்திய நடவடிக்கைகள் கூர்ந்து கவனியுங்கள்.. மிகவும் கண்ணியமான நாகரீக அரசியலை வளர்த்தெடுக்க முற்படுகிறார்.. பேனர்கள் வைக்கவேண்டாமென கட்சியினருக்கு அவர் இட்டிருக்கும் கட்டளை .. முதல்வர் காருக்கு வழிவிட்ட செயல் தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழியில் எதிர்க்கட்சிதலைவராக கலந்துக்கொண்டது குடியரசுதின விழா..ஏன் ஜெயலலிதா பதவியேற்ப்பு என சொல்லிக்கொண்டே போகலாம்.. இவையாவும் முன்பு இல்லையா என கேட்கலாம்.. திரு மகோரா ஆட்சிக்கு பிறகு தான் எதிர்க்கட்சியினரை எதிரியாக பார்க்கும் பழக்கம் வந்தது.. தன் கட்சிகாரர்கள் கலைஞரை சந்தித்து தனிப்பட்ட விடயமாக பேசினால் கூட சந்தேகத்தோடு அவர்களை கட்டம் கட்டும் நடவடிக்கையை எடுத்தார் அதனால் கலைஞர் கூட.. வேணாய்யா..என்னை சந்தித்தால் உன் எதிர்காலம் கேள்விகுறியாகும் என எச்சரிப்பார்.. அந்தளவிற்கு அநாகரீக அரசியலை திரு.மகோரா (எம்ஜிஆர்) விதைத்துவிட்டுபோனார்.. நாளடைவில் அது தொடர்ந்து வெறுப்பை எதிர்கருத்தாளர்கள் மீது செலுத்தும் போக்கை வளர்த்துவிட்டது.. .. ஏதோ இன்றைக்கு தான் ஸ்டாலின் இந்த நல்ல போக்கை கடைப்பிடித்ததாக தோன்றும்..அவரை தொடர்ந்து கவனிக்கறவர்களுக்கு அவரின் பண்பு நன்கு விளங்கும்.. முதல்முதலில் இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்றவுடன் நடந்த முதல் கூட்டம் பாபநாசத்தில் ஏற்பாடு செய்திருந்தோம்.. ஒருமரத்தை நட்டு குடைபோல் மேடை அமைத்திருந்தோம்.. பேசும் போது ஸ்டாலின் என்னை நம்பி இளைஞர்அணி பொறுப்பை தந்திருக்கிறீர்கள் இந்த மேடையை கூட ஒற்றை மரகுடையில் வடிவமைத்து இருக்கிறீர்கள் இங்கு பேசிவர்கள் என்னிடம் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதை சொன்னார்கள்..அவர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்கிறேன்..உங்கள் அனைவரின் ஆதரவு இல்லாமல் என்னால் தனித்து செயல்பட முடியாது உங்கள் துணைக்கொண்டு வெற்றிகரமாக கலைஞரும் பேராசிரியரும் என்னை நம்பி ஒப்படைத்த பொறுப்பை செய்வேன் என உறுதியளிக்கிறேன் என்றார்.. அந்த தன்மைதான் இந்தளவிற்கு உயர்த்தியிருக்கிறது.. இதோ நான்தான் தலைவன் என்றவர்கள் விலாசம் தெரியாமல் போனதற்கு இந்த எளிய பண்பில்லாமல் போனதே காரணம்.. .. தமிழகத்தின் நம்பிக்கை இவர்.. எதிரிகளும் வாயடைத்து போய்நிற்கிற இவரின் செயல்பாடு சரியான தலைமையை காலம் உருவாக்கியிருக்கிறது.. இந்த நேரத்தில் கலைஞருக்கும் பேராசியருக்கும் நன்றிகள்.. மிகசரியான நபரை தேர்வு செய்து வார்த்தெடுத்து செதுக்கி ..இயக்கத்தின் நான்காம் தலைமுறை தலைவனாக்கி தந்திருக்கிறீர்.. நன்றி! நன்றி!! .. #என்இனத்தின்_தளபதி.... .. தோழர் ஆலஞ்சி....

No comments:

Post a Comment