Monday, January 16, 2017
எம்ஜிஆர் நூற்றாண்டு..
எம்ஜிஆர் நூறாவது பிறந்த தினம்..
..
யார் இந்த எம்ஜிஆர்..
அவரின் மறுபக்கத்தை மிக சுவாரஸ்மாக ரசிக்கலாம்.. வெளிப்புற தோற்றம் அழகால் ஆனது ஆனால் உட்புறமோ..
வேறெங்கும் விடைதேட தேவையில்லை..
திரு.ஜேப்பியார் சொன்ன விடயம் ஒன்றே போதும்
எம்ஜிஆர் என்னிடம் திரு சோபன்பாபு கஸ்டடியில் இருக்கிறார் அவரை அழைத்துவரவேண்டுமென பணித்தார் நான் தான் அவரை மிரட்டி அழைத்து ஒரு இரவு என்னோடு வைத்திருந்து பொன்மன செம்மலிடம் ஒப்படைத்தேன் .
ஜெயலலிதாவை குடும்ப வாழ்விற்குள் செல்லவிடாமல் அழுத்தம் தந்து கடைசிவரை ஜெயித்தவர் மகோரா..
..
இன்றைய தினம் நூற்றாண்டு அவரை புகழ்ந்து போலித்தனமாக எழுத இயலவில்லை.. இன்றைய தமிழர்களின் சங்கடங்களுக்கு காரணியாக இருந்தவர் எந்த தொலைநோக்குமில்லாத மனிதர்களை ஏழைகளாக வைத்திருக்கவேண்டுமென்று நினைத்தவர்.. சுயசிந்தனையற்றவர்களாக சினிமாத்தனத்திலேயே தமிழ்மக்களை மாயவலையிலேயே வைத்திருந்தவர்..
திராவிடர்களை தமிழர்களை ஆரியர்களின் கைகளுக்குள் மீண்டும் கொண்டுசேர்த்தவர்.. இவர்களின் கைபாவையாகவே கடைசிவரை இருந்தார்.. இந்திராவின் சாவும் அவரது நோவும் கடைசியில் கைகொடுத்தது.. மீண்டும் மீண்டும் ஆட்சியில் அமர.. அப்போது கூட சிறந்த திட்டங்களை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டங்கள் செயல்படுத்தவில்லை..
..
ஆனால் தொடர் வெற்றியை பெறும் வித்தை அறிந்திருந்தார்.. அதனால் தான் கடைசிவரை காங்கிரஸை கைவிடாமலேயே அவர்களின் பாட்டிற்கு ஆடினார்.. தமிழகத்தின் ஒரளவு நாகரீக அரசியல் செய்திருந்தாலும் காழ்புணர்வு அரசியல் வர காரணமாக இருந்தவர்..
அவரை புகழ்ந்தவர்களுக்கு நம்பிக்கையானவராக இதயக்கனியாக இருந்தார் என்பதை மறுக்க முடியாது.
..
அரசியலில் அவரது பயணம் விமர்சனத்திற்கு உரியதென்றாலும் சினிமா நடிகனாக மிகப்பெரிய வெற்றியை தன்னிடம் மட்டுமே வைத்திருந்தவர் தமிழ்சினிமா ரசிகனின் மனநிலையை அறிந்து செயல்பட்டவர் எம்ஜிஆர் பார்முலா இன்றுவரை வெற்றிபெறுகிறதே அதிலிருந்தே மறைக்கமுடியாத சினிமாகலைஞராக நூற்றாண்டு பின்னிட்டும் திகழ்கிறார்.. நல்ல நடிகனா சிறந்த நடிகனா என்பதைவிட #வெற்றி_நடிகர் என்று அழைக்கலாம்
தமிழ்சினிமா வரலாற்றை யாரை மறுத்து மறந்து எழுதினாலும் மகோரா எனும் எம்ஜிஆரை மறுத்தோ/மறந்தோ எழுதிவிடமுடியாது..
..
#தமிழ்சினிமாரசிகனின்_இதயக்கனி...
..
ஆலஞ்சி மன்சூர்....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment