Saturday, January 14, 2017

ஜல்லிக்கட்டும் அரசியலும்

அவனியாபுர அரசியல்.. சில சினிமாகாரர்கள் தங்களின் தற்போதைய படம்/தொழில் சார்ந்த பிரச்சனைக்காக போராடவருகிறார்கள் அதற்கு அவர்கள் ஜல்லிக்கட்டை கையிலெடுத்தது பிரச்சனையாகி மக்கள் அதிகளவில் கூடியதும் .. இயக்குனர் திரு.அமீர் ஆர்யா கவுதம் போன்றவர்கள் போராட்டகளத்தில் வர காவல்துறை அவர்களை திருப்பி அனுப்பியிருக்கிறது அதில் கைகலப்பும் அடிதடியும் போலிஸ் (லத்திசார்ஜ்) அடிக்கவேண்டியிருந்ததாக சொல்லபடுகிறது.. இதை மற்றொரு கோணத்தில் அடங்க மறு அத்துமீறு என நடப்பதாக காட்டிக்கொள்தலும் இங்கே உண்டு.. .. முதலில் போராட வந்த அவர்களின் உணர்வை மதிப்போம்.. ஆனால் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் செயல்படும் விதம் மிகப்பெரிய இடைவெளியை தந்திருக்கிறது அதில் புகுந்த அரசியல் ஜாதீய சாயல் இவையெல்லாம் மறுக்கவோ அழிக்கவோ படவில்லை.. தனித்தனியாக போராட்டங்களை நடத்தி தங்கள் முகம் மட்டுமே வெளிச்சம் தரவேண்டுமென எண்ணுகிற நிலை .. ஜல்லிக்கட்டிற்கு எதிரானவர்களின் மீதான சாதீய தாக்குதல் அல்லது தனிநபர் தாக்குதல் இவை எல்லாம் பின்னடைவை தரும் என்பதை மறந்து ஆளாக்கு செயல்படுவது தவறாகிப்போகிறது.. .. இன்று பாலமேட்டில் களம் வெறிச்சோடிக்கிடக்கிறது ஆளும் அரசோ அமைதி காக்குகிறது மத்திய அரசோ கடைசி வரை நம்பிக்கை தந்து கடைசியில் முதுகில் சொருகிவிட்டது.. போராட்டத்தை யாருமே திட்டமிடாத செயலாய் இந்த வருடமும் பொய்த்து போன மழைப்போல வறண்ட மனநிலையில் தமிழர்கள்.. .. திமுக போன்ற மிகப்பெரிய எதிர்க்கட்சிகளின் பின்னால் அனைவரும் கட்சிபாகுபாடியின்றி அணிவகுத்து அரசுகளுக்கெதிராக ஒரணியில் திரண்டு போராட்டத்தை வகுத்திருக்கவேண்டும்.. சில உதிரிகள் தொடர்ந்து திமுகவை குறைச்சொல்லி தங்களின் வருவாயை பெருக்கிக்கொள்ள திட்டமிடுகிறார்களே தவிர திமுக ஆட்சியில் எத்தனை அவசர சட்டங்கள் இயற்றப்பட்டது எப்படியெல்லாம் கலைஞர் சதூர்யமாக ஜல்லிக்கட்டை நடத்தினார் .. என்பதை கருத்தில் கொண்டு இன்றைய தமிழக முதல்வர் மாண்பிமை பன்னீர்செல்வம் அவர்கள் கலைஞரை சந்தித்து ஆலோசனை பெற்று நடத்தியிருக்கலாம் இப்போதும் காலம் கடந்துவிடவில்லை.. திமுக தலைவரையோ அல்லது செயல்தலைவரையோ சந்தித்து ஆலோசனை நடத்தலாம்.. யாரும் குறைகூற மாட்டார்கள் எதிர்க்கட்சி தலைவரை சந்தித்து ஆலோசனை நடத்துவது ராஜாஜி காலந்தொட்டு எல்லா முதல்வர்களும் செய்ததுதான் #கோமாளி_எம்ஜிஆர் வரவிற்கு பிறகுதான் அரசியலில் மற்ற கட்சிகளோடு கலந்து பேசுவது அறவே இல்லாமல் போனது.. இப்போது காலமிருக்கிறது இப்போது எதிர்க்கட்சிதலைவர் இறுக்கம் தளர்த்தி மிக எளிமையானவராக இருக்கிறார் இன்றைக்கு கூட தொலைப்பேசியில் முதல்வருக்கு வாழ்த்து கூறியிருக்கிறார்.. முதல்வர் கட்சியின் பொதுசெயலாளர் கூட வாழ்த்து கூறாத நிலையிலும் .. நல்ல ஆரோக்கியமான அரசியல் மலர்ந்திருக்கும் வேளையில் முதல்வர் திரு.பன்னீர் செல்வம் முன்னெடுக்கவேண்டும்.. .. மத்திய ஆளும் அரசும் அதன் அமைச்சர் பொன்னரும் நம்மை முதுகில் குத்தி விளையாடுகின்றனர்.. ஒவ்வொரு வருடமும் நம்பிக்கை தந்து கடைசியில் கைவிரிக்கும் கயவாளித்தனம் பொன்னருக்கே உரியது.. .. எங்கள் கவிஞன் பாரதிதாசனின் வரிகளை கொண்டே எச்சரிப்போம்.. #பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைவித்தால் #சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு.. .. ஆம் எங்களுக்கெதிரான எம் இனத்திற்கெதிரான எம்மொழி எம்வாழ்வியல் எம்கலாச்சாரம் எம் பண்பாட்டிற்கு எதிரானவர்களை அழித்தொழிப்போம்.. .. ஆலஞ்சி மன்சூர்

No comments:

Post a Comment