Thursday, January 12, 2017

உரக்க சொல்வோம் நாங்கள் திராவிடரென்று..

திராவிட இயக்கத்தை அழித்துவிட்டு பொங்கலை/ஜல்லிக்கட்டை நடத்துவோம்/ கொண்டாடுவோம்.. திரு.பொன்.ராதா.. நேரடியாக இந்த ஜென்மத்தில் நடத்தமாட்டோமென சொல்லவேண்டியதுதானே.. பொன்னார் அவர்களே.. .. யார் சொல்கிறார்கள் தெரியுமா எந்த ஆதிக்க வெறியர்களால் எவரின் அப்பத்தா மாராப்பூ சேலையை கூட போடமுடியாமல் தடுத்தானோ அவளின் பேரன் ஆரிய அடிமையாய் அருள்வாக்கு சொல்கிறான்.. திராவிடம் கிள்ளியெறிய சிறிய செடியோ/கொடியோ அல்ல ஆழ விழுந்து தழைத்து விரிந்து நிற்கும் ...,விழுதுகள் ஆயிரமாய் விரிந்து நிற்கும்.. ஆலமரம்.. .. சமீபத்திய பொன்னாரின் உளறல்கள் அவரை கேலிப்பொருளாக சித்தரிக்கிறது.. பாவம் புத்திசுவாதினமில்லாதவரின் பேச்சாய், சம்பந்தமில்லாத வெற்றுக்கூச்சலாய் விவேகம் சிறுதுமில்லாத நான்காம்தர பேச்சாளரைப்போல.. எதேதோ பேசிவருகிறார்.. சட்டென்று வீழ்த்திவிட கொடியல்ல வைரம் பாய்ந்த தேக்குமரம்.. .. திராவிடம் சொல் அல்ல சுரணையுள்ளவர்களின் (இன உணர்வு) #பேராயுதம் . அதனால் தான் ஆரியன் எந்தந்த வழியிலெல்லாம் நுழைய முடியுமோ அந்தந்த வழியிலெல்லாம் நுழைந்து வேரறுக்க பார்க்கிறான் பாவம்.. அடிமண்ணை கூட நோண்ட முடியவில்லை.. ஆழ புதைந்து அடிவேராய் .. மண்ணில் பலமாய் எங்கள் #பெருங்கிழவன் சிரித்துக்கொண்டே நகைக்கிறான்.. இந்த கேடுக்கெட்ட #கோடாரிகளை நினைத்து.. எங்கள் தளபதியார் அழிக்க அல்ல தொட்டுபார்க்ககூட முடியாது என்றார் பாருங்கள்.. அதுபோதும் இனி நூறாண்டுகள் ஆனாலும் பொன்னரை போன்ற குலம்கெடுக்கும் கோடாரிகளால் எத்தனை தழும்புகள் வந்தாலும் தாங்கி நிற்கும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது.. .. திராவிட இயக்கத்தின் வரலாறு இன்றைய இளைஞர்களிடையே வேகமாக சென்று சேர்கிறது..இடையில் சிலகாலம் சினிமா மாயையில் மூழ்கி அறியாமல் பாதை தவறியிருந்தாலும் மீண்டும் உணர்வுபெற்று பிரகாசிக்க தொடங்கியிருக்கிறது.. குறிப்பாக கல்லூரி மாணவர்களில் பெண்களிடத்தில் #பெரியாரின் தாக்கம் தெளிவாக தெரிகிறது.. சுயமரியாதை உணர்வு தீப்பந்தாய் சுடரொளிக்கிறது.. பொன்னார் அவர்களே .. நீர்..எத்தனை பிறவியெடுத்தாலும்..அழிக்கமுடியாத #காலப்பெட்டகம்_திராவிடம்.. .. உரக்க சொல்வோம்.. இனத்தால்.. நாங்கள் #திராவிடனென்று.. .. ஆலஞ்சி மன்சூர்...

No comments:

Post a Comment